மேலும் அறிய

" அப்பா - அம்மா என்னை மன்னித்து விடுங்கள் " வந்தே பாரத் ரயிலில் பாய்ந்த காதல் ஜோடி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வந்தே பாரத் விரைவு ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆதார் அட்டைகள் ஆய்வு

லக்னோவின் ஜலால்பூர் கேட் அருகே ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் தண்டவாளத்தில் சிதறிக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர்களது உடமைகளில் இருந்த ஆதார் அட்டைகளை ஆய்வு செய்ததில், உயிரிழந்தவர்கள் சூர்யகாந்த் (வயது 40) மற்றும் தீபாலி (வயது 25) என்பது உறுதி செய்யப்பட்டது.

காதல் விவகாரம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சூர்யகாந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் தீபாலி காசாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சூர்யகாந்திற்கு ஏற்கனவே திருமணமாகி, சவிதா என்ற மனைவியும், கிருஷ்ணகாந்த் என்ற மகனும் உள்ளனர்.

வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

கடந்த ஜனவரி 8 - ம் தேதி அலுவலகத்திற்குச் சென்ற தீபாலி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று அவர்கள் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு தற்கொலைக் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

தீபாலியின் கடிதத்தில் , "அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்களைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. எனது மகனைக் கண்டுபிடித்து விட்டேன் (சூர்யகாந்தின் மகனைக் குறிப்பிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது)" என்று எழுதப்பட்டிருந்தது.

சூர்யகாந்தின் கடிதத்தில் , தனது மனைவியிடம் மன்னிப்புக் கோரியிருந்த அவர், "சவிதா என்னை மன்னித்து விடு, நீதான் எனது முதல் காதல்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் உயர் அதிகாரி கூறுகையில் ,

இருவரும் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். ஆதார் அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தலைப்பு செய்திகள்

17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
17 வயது மாணவியை காரில் கடத்தி பாலியல் வன்கொடுமை–தீவிர வேட்டையில் குற்றவாளிகளை தேடி வரும் போலீஸ்
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
சென்னையில் அதிரடி !! வலி நிவாரண மாத்திரைகளை பதுக்கி விற்ற நபர் சிறையில் அடைப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு
பார்சல் கொடுக்க வந்த டெலிவரி பாய் பெண்ணிடம் அத்துமீறல் !! சென்னையில் பரபரப்பு

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TN Weather Update: இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
இன்று பள்ளிகள் திறப்பு.. எங்கெல்லாம் கனமழை பொளக்கும்? வெயில் சுட்டெரிக்கும் - வானிலை அறிக்கை
Fire Accident: மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து..! 10 பேர் உடல் கருகி பலி - ICU வார்டில் நடந்தது என்ன?
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
Minister Srinath: இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
இடம் தெரியாம இப்படி பண்ணிட்டீங்களே சார்.! கிண்டலுக்கு ஆளான அமைச்சர் ஸ்ரீநாத்; என்ன செய்தார்.?
Embed widget