மேலும் அறிய

" அப்பா - அம்மா என்னை மன்னித்து விடுங்கள் " வந்தே பாரத் ரயிலில் பாய்ந்த காதல் ஜோடி

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், வந்தே பாரத் விரைவு ரயில் முன் பாய்ந்து தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆதார் அட்டைகள் ஆய்வு

லக்னோவின் ஜலால்பூர் கேட் அருகே ஆண் மற்றும் பெண் ஒருவரின் உடல்கள் தண்டவாளத்தில் சிதறிக் கிடப்பதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவர்களது உடமைகளில் இருந்த ஆதார் அட்டைகளை ஆய்வு செய்ததில், உயிரிழந்தவர்கள் சூர்யகாந்த் (வயது 40) மற்றும் தீபாலி (வயது 25) என்பது உறுதி செய்யப்பட்டது.

காதல் விவகாரம்

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் சூர்யகாந்த் ஒரு தனியார் நிறுவனத்தில் களப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். அதே அலுவலகத்தில் தீபாலி காசாளராகப் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. சூர்யகாந்திற்கு ஏற்கனவே திருமணமாகி, சவிதா என்ற மனைவியும், கிருஷ்ணகாந்த் என்ற மகனும் உள்ளனர்.

வந்தே பாரத் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை

கடந்த ஜனவரி 8 - ம் தேதி அலுவலகத்திற்குச் சென்ற தீபாலி வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், நேற்று அவர்கள் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது. சம்பவ இடத்தில் இருந்து இரண்டு தற்கொலைக் கடிதங்களை போலீசார் கைப்பற்றினர்.

தீபாலியின் கடிதத்தில் , "அம்மா, அப்பா என்னை மன்னித்து விடுங்கள். உங்களைக் காயப்படுத்துவது எனது நோக்கமல்ல. எனது மகனைக் கண்டுபிடித்து விட்டேன் (சூர்யகாந்தின் மகனைக் குறிப்பிட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது)" என்று எழுதப்பட்டிருந்தது.

சூர்யகாந்தின் கடிதத்தில் , தனது மனைவியிடம் மன்னிப்புக் கோரியிருந்த அவர், "சவிதா என்னை மன்னித்து விடு, நீதான் எனது முதல் காதல்" என்று பதிவிட்டிருந்தார். மேலும் இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையின் உயர் அதிகாரி கூறுகையில் ,

இருவரும் வந்தே பாரத் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளனர். ஆதார் அட்டை மூலம் அடையாளம் காணப்பட்டு, குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.

தலைப்பு செய்திகள்

" என் புருஷனை விடு , இல்லைனா ரயில் முன்னாடி விழுவேன் " ரயில் நிலையத்தில் பரபரத்த வடமாநில பெண்
TN Weather News: இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று வெயில் கொளுத்தும், எந்தெந்த மாவட்டங்களில் கனமழை, சென்னை? தமிழக வானிலை அறிக்கை
" 5 வருடம் முன்பு சிறுமியின் உடையை கழற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் " சிக்கியது எப்படி ?
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!
சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம் ; மாதவரம் To திருவொற்றியூர் வரை புதிய வழித் தடம் முழு விவரம் !!

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mekadatu Dam: தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
தமிழக அனுமதி வேண்டாமா? மத்திய அமைச்சர் சொன்னது தவறு - பிரதமருக்கு CM விஜய் கடிதம்
Vaiko Book Release : ’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ சொல்வது உண்மையா..? – காரணம் என்ன ?
’புத்தக வெளியீட்டிற்கு டெல்லி செல்ல மறுத்த முதல்வர் விஜய்?’ வைகோ பேச்சு உண்மையா..?
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
Tamil Thai Vazhthu:கடும் எதிர்ப்பு; 3ஆம் இடத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து- மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. சர்ச்சை
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
கனிமக் கொள்ளைக்கு நிரந்தரத் தடை, சிபிஐ விசாரணை- தவெக அரசிடம் அன்புமணி வலியுறுத்தல்
TN Govt: தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டிலிருந்து கனிமவளங்களை ஏற்றுமதி செய்ய இடைக்கால தடை - CM விஜய் அரசு அதிரடி உத்தரவு
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
Kangana Ranaut: CJP நீட் போராட்டம்.. வாந்தி வருது.. இவங்கெல்லாம் நல்ல பெண்களா?.. கேவலமாக பேசிய கங்கனா!
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
’’நீதி மறுக்கும் நிர்வாகம்; மனோன்மணியம் பல்கலை ஊழியர்களுக்கு இதை செய்ங்க’’ அன்புமணி வலியுறுத்தல்
Montek Singh: யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
யார் இந்த மான்டேக் சிங் அலுவாலியா? தமிழக அரசுக்காக செய்யப்போகும் வேலை என்ன? வருவாய் உயருமா?
Embed widget