மேலும் அறிய

Southern Railways: வேலைக்கு செல்வோருக்கு விடிவுகாலம்..! அலுப்பின்றி பயணிக்க புதிய புறநகர் ரயில்கள், ரூட் விவரங்கள்

Southern Railways Suburban Train: பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து புதியதாக 4 புறநகர் ரயில் சேவையை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது.

Southern Railways Suburban Train: தெற்கு ரயில்வேயின் புதிய புறநகர் ரயில் சேவை வேலைக்கு செல்வோருக்கு, பெரும் உதவிகரமாக இருக்கும் என கருதப்படுகிறது.

புறநகர் ரயில் சேவை:

தெற்கு ரயில்வேயின் புறநகர் ரயில் சேவை என்பது, சென்னையின் அண்டை மாவட்ட மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமான போக்குவரத்தாக உள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள், தங்களது அன்றாட பணிகளுக்காக இந்த புறநகர் ரயில்களில் பயணித்து வருகின்றனர். வணிகம், தொழில், வேலை, மருத்துவ சிகிச்சை, உறவினர்கள் வீடுகளுக்கு செல்வது மற்றும் குடும்ப நிகழ்ச்சி என பல்வேறு காரணங்களுக்காக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இருந்து புறநகர் ரயில் மூலம் பொதுமக்கள் சென்னைக்கும், இங்கிருந்து அண்டை மாவட்டங்களுக்கும் பயணித்து வருகின்றனர்.

சென்னையில் உள்ள புறநகர் ரயில் சேவைகள்:

சென்னை புறநகர் ரயில் சேவையின் (Chennai suburban railway) தேவையானது ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த காலகட்டத்திலேயே உணரப்பட்டு, 1930-ஆம் ஆண்டு வாக்கில் செயல்படத் தொடங்கியது. அவ்வாறு செயல்பட்ட முதல் புறநகர் இருப்புவழி இணைப்பு, சென்னை மற்றும் தாம்பரத்தை இணைத்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது நான்கு வழித்தடங்களில் புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு, சென்னை கடற்கரை - வேளச்சேரி, சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ஆகிய வழித்தடங்களில் சென்னை பெருநகரத்தில் இருந்து புறநகர் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

அதிகரிக்கும் பயணிகளும், தேவையும்..!

வேலைவாய்ப்புக்கான அண்டை மாவட்டங்களில் இருந்து சென்னையை நோக்கி படையெடுக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒருதரப்பினர் பிழைப்புக்காக சென்னையிலேயே குடியேறிவிட்டாலும், மற்றொரு தரப்பினர் புறநகர் ரயில்களில் தினசரி மணிக்கணக்கில் பயணித்து சென்னைக்கு வந்து செல்கின்றனர். இதனால், தினசரி பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கூட்ட நெரிசல் பெருகி, புறநகர் ரயில் சேவைகளின் தேவையும் அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்தே தெற்கு ரயில்வே புதியதாக நான்கு புறநகர் ரயில் சேவையை தொடங்கியுள்ளது.

புதிய புறநகர் ரயில் சேவைகள்

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, “

  • . மூர் மார்க்கெட்டில் இருந்து ஆவடிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட் வளாகத்தில் இருந்து காலை 11.15 மணிக்கு புறப்படும்.
  • ஆவடியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரயில் ஆவடியில் இருந்து காலை 5.25 மணிக்கு புறப்படும்.
  • மூர் மார்க்கெட்டில் இருந்து கும்மிடிபூண்டிக்கு செல்லும் புதிய புறநகர் ரயில் மூர் மார்க்கெட்டில் இருந்து இரவு 10.35 மணிக்கு புறப்படும்.
  • கும்மிடிபூண்டியில் இருந்து மூர் மார்க்கெட்டிற்கு செல்லும் புதிய புறநகர் ரெயில் கும்மிடிபூண்டியில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்படுள்ளது

நேற்று (மார்ச் 3) முதல் இந்த ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. அவை இயக்கப்படும் நேரத்தை கவனித்தால், அதிகாலையில் முதல் வேலைக்காக சென்னை நோக்கி புறப்படும் பயணிகளையும், வேலை முடிந்து மாலை நேரங்களில் புறநகர் நோக்கி புறப்படும் பயணிகளையும் கருத்தில் கொண்டு, புதிய ரயில் சேவைகள் தொடங்கப்பட்டு இருப்பதை உணரலாம்.

மூர் மார்கெட் - ஆவடி புறநகர் ரயில் சேவை

மூர் மார்கெட் மற்றும் ஆவடி இடையேயான புறநகர் ரயிலானாது, பேசன் பிர்ட்ஜ் சந்திப்பு, வியாசர்பாடி ஜீவா, பெரம்பூர், பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ், பெரம்பூர் லோகோ ஒர்க்ஸ், வில்லிவாக்கம், கொரட்டூர், பட்டரவாக்கம், அம்பத்தூர், திருமுல்லைவாயல், அன்னனூர், இந்து காலேஜ் ஆகிய ரயில் நிலையங்கள் வழியாக பயணித்து இறுதியாக பட்டாபிராம் சென்றடையும்.

மூர் மார்கெட் - கும்மிடிபூண்டி புறநகர் ரயில் சேவை

மூர் மார்கெட் மற்றும் கும்மிடிப்பூண்டி இடையேயான புறநகர் ரயிலானாது, பேசன் பிரிட்ஜ் சந்திப்பு, கொருக்குப்பேட்டை சந்திப்பு, தண்டையார்பேட்டை, வ.உ.சி., நகர், திருவொற்றியூர், விம்கோ நகர், கத்திவாக்கம், எண்ணூர், அத்திப்பட்டு புது நகர், அத்திப்பட்டு, நந்தியம்பாக்கம், மீஞ்சூர், அனுப்பம்பட்டு, பொன்னேரி மற்றும் கவரைப்பேட்டை  ரயில் நிலையங்கள் வழியாக கும்மிடிப்பூண்டி சென்றடையும்.

எனவே, புதிய புறநகர் ரயில் சேவைகள் மூலம், மேற்குறிப்பிடப்பட்ட பகுதி மக்கள், அலுப்பின்றி பயணம் செய்ய முடியும். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்க வேண்டிய சூழலும் தவிர்க்கப்படும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
திருவள்ளூரில் அரசுப்பள்ளி மாணவர் பலி; யாராக இருந்தாலும் நடவடிக்கை- அமைச்சர் அன்பில் உறுதி!
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Kia Discount: களத்துக்கு வந்த கியா..! மொத்த மாடல்களுக்கும் ரூ.3.6 லட்சம் வரை தள்ளுபடி - டிச., விஷேசம் என்ன?
Embed widget