மேலும் அறிய

சீமான் மீது வழக்குப்பதிவு செய்யுங்க...! போலீஸ்க்கு அதிரடி உத்தரவு பிறப்பிப்பு - விவரம் இதோ

”சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்திய புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையத்திற்கு தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது”

சீமானுக்கு எதிரான புகார்கள்:

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடி பிரச்சாரம் செய்ததாகவும், அப்போது சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார்கள் எழுந்தது. குறிப்பாக சீமான் கூறிய இந்த வார்த்தை சமூக வலைதலங்களிலும், திமுக தரப்பிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் உள்ள  பல்வேறு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த 16.07.24 அன்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான புகாரை எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திற்கும் அஜேஸ் அனுப்பியுள்ளார்.

தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அதிரடி உத்தரவு:

அதில் வன்கொடுமை சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிரிவு 18 A படி முன் விசாரணை எதுவும் தேவையில்லை என்று சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மனுதாரர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்டகாவல் ஆய்வாளர் சிஎஸ் ஆர் மட்டும் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் உண்மை தன்மையை கண்டறிந்து இந்த வார்த்தையை பயன்படுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையத்திற்கு இந்த உத்தரவை தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் பிறப்பித்துள்ளது.

இப்படி ஒரு சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது:

இதுகுறித்து ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியிருந்தார். அப்போது அவர் கூறும் பொழுது, அந்த பாட்டை எழுதி, மெட்டமைத்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மேடையில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. அன்றெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ, கோபமோ தெரியவில்லை. திருப்பி நாங்கள் பாடும்போது அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க. ஒவ்வொரு தலைவர்களை பற்றி, கருணாநிதி பேசியதே இருக்கிறது. நாகரிக அரசியல் பற்றி, கண்ணியமான அரசியல் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு, அடுத்தவர்களுக்கு கற்றுத் தருவதற்கு துளியளவும் தகுதியற்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது தி.மு.க தான். கிராமங்களில் சண்டாளன் என்பது ஒரு பேச்சுவழக்கு ஆகும். படங்களில் கூட சண்டாளி என்று பாடல் வரிகள் கூட உள்ளது. நான் எடுத்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் சண்டாளா என்று வடிவேலு நடித்த காட்சியில் இருந்தது. அப்போது எனக்கு உண்மையிலே தெரியாது. படம்  வெளியான பிறகு எனக்கு கடிதம் வந்தது. அப்போது தான் எனக்கு இந்த பெயரில் ஒரு சமூகம் இருக்கிறது என்று தெரியும். அதன்பின்பு, நாங்கள் அதை பயன்படுத்தவில்லை என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SP Varun kumar Anna Award : அரசின் அண்ணா பதக்கம்! அடித்து ஆடும் வருண்குமார்! Thirumavalavan meets MK Stalin : ஸ்டாலின் திருமா மீட்டிங்! முடிவுக்கு வருமா சர்ச்சை? பின்னணி என்ன?Nitin Gadkari on Congress : ’’எனக்கு பிரதமர் பதவி’’எதிர்க்கட்சி பக்கா ஸ்கெட்ச்! போட்டுடைத்த  கட்காரிMK Stalin Phone Call |’’தைரியமா இருங்க’’PHONE-ல் பேசிய முதல்வர்! உத்தரகாண்ட் நிலச்சரிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meendum Manjappai Campaign : மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரம், விழிப்புணர்வு, அமலாக்கம்.. வலியுறுத்தும் தமிழ்நாடு அரசு..
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
இதுதான் மனிதநேயம்.. புயலால் நிலைகுலைந்த மியான்மர்.. ஓடோடி சென்று உதவிய இந்திய கடற்படை!
Group 2 Cut Off 2024: டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு கேள்வித்தாள் எப்படி? கட் ஆஃப் எவ்வளவு தேவை?
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
Mookuthi Amman 2: மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கப்போகும் சுந்தர் சி! வெளியானது அறிவிப்பு! - நடிகை இவர்தான்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
கதிகலங்க வைக்கும் ஒற்றை ஓநாய்.. அச்சத்தில் கிராம மக்கள்.. திணறும் வனத்துறை அதிகாரிகள்!
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
SIIMA Winner List : ஐந்து விருதுகளை தட்டித்தூக்கிய ஜெயிலர்...சைமா விருது வென்றோர் முழுப் பட்டியல் இதோ
"கடைசி முறையா கூப்பிடுறேன்" விடாபிடியாக இருக்கும் மருத்துவர்கள்.. மீண்டும் இறங்கி வந்த மம்தா!
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Ritika Singh : வேட்டையன் படத்தில் மாஸ் காட்டும் ரித்திகா சிங்...படக்குழு வெளியிட்ட சர்ப்ரைஸ்
Embed widget