மேலும் அறிய

சீமான் மீது வழக்குப்பதிவு செய்யுங்க...! போலீஸ்க்கு அதிரடி உத்தரவு பிறப்பிப்பு - விவரம் இதோ

”சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்திய புகார் தொடர்பாக சீமான் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க ஆவடி காவல் ஆணையத்திற்கு தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது”

சீமானுக்கு எதிரான புகார்கள்:

சமீபத்தில் நடந்த இடைத்தேர்தலின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து சர்ச்சைக்குரிய பாடல் பாடி பிரச்சாரம் செய்ததாகவும், அப்போது சண்டாளன் என்ற வார்த்தையை பயன்படுத்தியதாகவும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது புகார்கள் எழுந்தது. குறிப்பாக சீமான் கூறிய இந்த வார்த்தை சமூக வலைதலங்களிலும், திமுக தரப்பிலும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான் தமிழகத்தில் உள்ள  பல்வேறு காவல் நிலையங்களில் நாம் தமிழர் கட்சி சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக  சீமானுக்கு எதிராக பட்டாபிராம் பகுதியை சேர்ந்த அஜேஸ் என்பவர் கடந்த 16.07.24 அன்று காவல் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அந்த புகார் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சொல்லப்பட்ட நிலையில் அது தொடர்பான புகாரை எஸ்.சி.எஸ்.டி ஆணையத்திற்கும் அஜேஸ் அனுப்பியுள்ளார்.

தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் அதிரடி உத்தரவு:

அதில் வன்கொடுமை சம்பந்தப்பட்ட வழக்குகளில் பிரிவு 18 A படி முன் விசாரணை எதுவும் தேவையில்லை என்று சட்டம் தெளிவாக குறிப்பிட்டுள்ளது. மனுதாரர் கொடுத்த புகாரை பெற்றுக்கொண்டகாவல் ஆய்வாளர் சிஎஸ் ஆர் மட்டும் கொடுத்துள்ளார். வழக்குப்பதிவு செய்ய முகாந்திரம் இருந்தும் வழக்குப்பதிவு செய்யாமல் இருப்பது ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கானது தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த வழக்கின் உண்மை தன்மையை கண்டறிந்து இந்த வார்த்தையை பயன்படுத்திய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆவடி காவல் ஆணையத்திற்கு இந்த உத்தரவை தேசிய எஸ்.சி.எஸ்.டி ஆணையம் பிறப்பித்துள்ளது.

இப்படி ஒரு சமூகம் இருப்பதே எனக்கு தெரியாது:

இதுகுறித்து ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் சீமான் பேசியிருந்தார். அப்போது அவர் கூறும் பொழுது, அந்த பாட்டை எழுதி, மெட்டமைத்தது அ.தி.மு.க. தான். ஜெயலலிதா இருந்தபோது பல நூற்றுக்கணக்கான மேடையில் இந்த பாடல் பாடப்பட்டுள்ளது. இதே கருத்து சொல்லப்பட்டுள்ளது. அன்றெல்லாம் இவர்களுக்கு வருத்தமோ, கோபமோ தெரியவில்லை. திருப்பி நாங்கள் பாடும்போது அப்படி ஆகிவிட்டது, இப்படி ஆகிவிட்டது என்று கூறுகிறார்கள். அவதூறு பேசுவது, அசிங்கமான அரசியல் பேசுவதற்கு ஆதித்தாய் தி.மு.க. ஒவ்வொரு தலைவர்களை பற்றி, கருணாநிதி பேசியதே இருக்கிறது. நாகரிக அரசியல் பற்றி, கண்ணியமான அரசியல் பற்றி கற்றுக்கொடுப்பதற்கு, அடுத்தவர்களுக்கு கற்றுத் தருவதற்கு துளியளவும் தகுதியற்ற கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறது என்றால் அது தி.மு.க தான். கிராமங்களில் சண்டாளன் என்பது ஒரு பேச்சுவழக்கு ஆகும். படங்களில் கூட சண்டாளி என்று பாடல் வரிகள் கூட உள்ளது. நான் எடுத்த பாஞ்சாலங்குறிச்சி படத்தில் சண்டாளா என்று வடிவேலு நடித்த காட்சியில் இருந்தது. அப்போது எனக்கு உண்மையிலே தெரியாது. படம்  வெளியான பிறகு எனக்கு கடிதம் வந்தது. அப்போது தான் எனக்கு இந்த பெயரில் ஒரு சமூகம் இருக்கிறது என்று தெரியும். அதன்பின்பு, நாங்கள் அதை பயன்படுத்தவில்லை என்று பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சென்னையில ஜூலை 14 (14.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? ஏரியா லிஸ்ட் இதோ
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
சபரிமலை பக்தர்களுக்கு கூடுதல் வசதி செய்க !! தமிழக, கேரள அரசுகளுக்கு ஐயப்ப சேவா சமாஜம் கோரிக்கை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
மனைவி பிரிந்த சோகம் !! குழந்தைகளின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொன்ற தந்தை
CM Vijay Perambur: வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?
வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பெரம்பூர் செல்லும் முதலமைச்சர் விஜய் - முக்கிய அறிவிப்புகள் என்ன?

வீடியோ

Madurai Accident : அசுர வேகத்தில் ஆம்னி பேருந்து! அடுத்து நடந்த கொடூர விபத்து.. 5 பேர் பலியான சோகம்
Chief Minister special cell petition | ”உடனே பண்ணி கொடுங்க CM
Karnataka govt bus | GOVT BUS-ல் அத்துமீறிய நபர்! கண்ணம் சிவக்க பளார் பளார்! பொளந்தெடுத்த இளம்பெண்
ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Layola Mani : ‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர் – தனி மனித தாக்குதல்..?
‘லயோலா மணிக்கு அரசு பதவி’ தாங்க முடியாத நா.த.க-வினர்..!
DMK vs Vaiko : வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
வைகோவை விடாதீங்க.. FIR பதிவு செய்யுங்க.! அடித்து ஆட ஆரம்பித்த திமுக- ஆளுநருக்கு பறந்த புகார்
Iran Hits American Bases: அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
அமெரிக்க தளங்களை போட்டு சாத்திய ஈரான்; ‘கண்ணுக்கு கண்‘ ஆபரேஷனில் பேட்ரியாட் அமைப்புகள் அழிப்பு
Trump Vs Iran Hormuz: ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
ட்ரம்ப்பின் வாய்ச்சவடால்.! ஹார்முஸை கட்டுப்பாட்டில் எடுத்து வசூல் செய்யப் போவதாக பேச்சு; ஈரான் பதிலடி
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
Anbil Mahesh : '50 கோடி இழப்பீடு’ நந்தகுமாருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் அன்பில் மகேஸ்..!
US Iran War: வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
வளைகுடாவை தாக்கி, ஹார்முஸை மூடிய ஈரான்; பதில் தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா; மீண்டும் போர்
Yamaha EC 06 Milage: ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
ஒரே சார்ஜில் யமாஹா EC 06 EV ஸ்கூட்டரின் உண்மையான மைலேஜ் என்ன.? இந்த டெஸ்ட் ரிசல்ட்ட பாருங்க
RS BHARATHI : செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
செத்த பாம்பை அடிச்சுட்டு கருநாகத்தை உள்ளே விட்டுட்டோம்.! சிஎம் விஜய்யை விளாசிய ஆர் எஸ் பாரதி
Embed widget