வாகன ஓட்டிகள் வசதிக்காக " சாலையோர வசதி மையம் " என்னென்ன திட்டம் தெரியுமா ?
ஏழு மாவட்டங்களில் , வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்காக , சாலையோர வசதி மையங்களை , தனியார் பங்களிப்புடன் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்க உள்ளது.

சாலையோர வசதி மையம்
மாநில நெடுஞ்சாலைகளை தரம் உயர்த்தவும் , வாகன ஓட்டிகள் மற்றும் பயணியருக்கான வசதிகளை மேம்படுத்தவும் , மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது. இதன் வாயிலாக பல்வேறு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலைகள் படிப்படியாக மேம்படுத்தப்பட உள்ளன. அவற்றில் , வாகன ஓட்டிகள் , பயணியர் வசதிக்காக , சாலையோர வசதி மையங்களும் அமைக்கப்பட உள்ளன. இதற்காக முதல் கட்டமாக ஏழு மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.
ஓய்வறை முதல் - முதலுதவி சிகிச்சை மையம் வரை
சாலையோர வசதி மையத்தில் , டிரைவர்களுக்கு ஓய்வறை , எரி பொருள் மற்றும் காற்று நிரப்பும் மையங்கள் , சார்ஜிங் பாயின்ட்கள் , உணவகம் , கழிப்பறை , சிறுவர்கள் விளையாடும் பகுதி , வாகனங்களுக்கான அவசர கால மெக்கானிக் சேவை , முதலுதவி சிகிச்சை மையம் , தேநீர் போன்றவை கடை ஏற்படுத்தப்பட உள்ளன .
மாநில நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது ;
சாலையோர வசதி மையங்கள் , முதற்கட்டமாக, விழுப்புரம் - அய்யன் கோவில்பட்டு , திருப்பூர் - பழங்கரை , திருவள்ளூர் - திருப்பாச்சூர் , திருப்பத்தூர் - கலந்தரா , சேலம் - காரிப்பட்டி , திண்டுக்கல் - புதுச்சத்திரம் , திருவண்ணாமலை - கீழ்மட்டை போன்ற இடங்களில் அமைக்கப்பட உள்ளன.
இந்த வசதி மையங்களை அமைக்க தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனங்களுக்கு தேவையான அரசு நிலம் , மாநில நெடுஞ்சாலை ஆணையத்தால் வழங்கப்படும்.
அந்த இடத்தில் , கட்டமைப்புகளை ஏற்படுத்தி , சாலையோர வசதி மையம் அமைக்க வேண்டும். இதற்காக, ஆண்டுக்கு ஒரு முறை மாநில நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அந்த நிறுவனங்கள் குத்தகை கட்டணம் செலுத்த வேண்டும் என விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது என இவ்வாறு கூறினார்.





















