மேலும் அறிய

முடிந்த புரட்டாசி மாதம்.. புத்துயிர் பெற்ற கறிக்கடைகள்.. ஒரு புடி பிடிக்க தயாராகும் அசைவ பிரியர்கள்..!

Kanchipuram : புரட்டாசி மாதம் என்பதால் வெறிச்சூடிய கறிக்கடைகள் இன்று புத்துயிர் பெற்றது.

புரட்டாசி மாதம் விரதம்

 
 
விரதத்துக்கு பெயர் போன புரட்டாசி மாதத்தில் பெரும்பாலான அசைவ பிரியர்கள் தங்கள் வாய்க்கு பூட்டு போட்டிருந்தனர். புரட்டாசி மாதம் முழுவதும் மும்மூர்த்திகளில் ஒருவரான பெருமாளுக்கு விரதம் இருந்து பக்தியுடன், இந்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அதேபோன்று வாழும் தோறும் வரும் சனிக்கிழமைகளில், வீடுகளில் விரதம் இருந்து பெருமாளை வழிபடுவார்கள்.  நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறுவதும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசித்து செல்வதும் வழக்கம். குறிப்பாக புரட்டாசி மாதங்களில்,  அசைவம் உண்ணாமல்  கடவுளுக்கு விரதம் இருந்து வந்தால் வேண்டியது நடைபெறும் என்பதும் மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பெருமாளை இஷ்ட தெய்வமாக வணங்கும்,  மக்கள் பாரபட்சம் இன்றி புரட்டாசி மாதத்தில் எந்தவித அசைவ உணவுகளும் உண்ணுவது கிடையாது. முட்டை உள்ளிட்ட அசைவ பொருட்களை கூட உண்ணாமல் , சைவ உணவுகளை மட்டுமே  சாப்பிட்டு கடவுளுக்கு  விரதம் இருந்து  பூஜை செய்து வருகின்றனர்
 
 ஆர்வத்துடன் மீன்களை விலை பேசி, வாங்கிச் செல்லும் மக்கள் .  இடம்  :காஞ்சிபுரம்  மீன் சந்தை
ஆர்வத்துடன் மீன்களை விலை பேசி, வாங்கிச் செல்லும் மக்கள் . இடம் :காஞ்சிபுரம் மீன் சந்தை
 
 

முடிந்த புரட்டாசி

 
இந்த நிலையில் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமை இன்று என்பதால் அசைவ பிரியர்கள் கறி மற்றும் மீன் ஆகிய கடைகளில் ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். அதிகாலை முதலே வியாபாரிகள், பொதுமக்கள் திரண்டதால் காஞ்சிபுரம் மீன் சந்தையில் கடும் கூட்டம் காணப்பட்டது. அவர்கள் தாங்கள் விரும்பிய மீன்களை போட்டி போட்டு வாங்கி சென்றனர்.காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் செயல்பட்டு வரும் மீன், இறைச்சி கடைகளில் கடந்த 5 வாரங்களாக விற்பனை குறைவாக நடந்த நிலையில் கடைகள் வெறிச்சோடி கிடந்தது
 
 விற்பனைக்காக காத்திருக்கும் கடல் மீன்கள்
விற்பனைக்காக காத்திருக்கும் கடல் மீன்கள்
 
 
அதிகாலையிலேயே கையில் பையுடன் அசைவ பிரியர்கள்
 
 
இன்று ஏராளமான அசைவ பிரியர்கள் , நாவின் சுவையை அடக்க முடியாமல் ஞாயிற்றுக்கிழமையான இன்று காலையிலேயே காஞ்சிபுரம் பொன்னேரி கரை மீன் மார்க்கெட்,தர்கா பகுதி இறைச்சி கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன், இறைச்சி வ வாங்கி செல்ல  தொடங்கி உள்ளனர். 5 வாரங்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை இன்று ஏராளமான அசைவ பிரியர்கள் காலை நேரத்திலேயே மீன்கள்,கோழிகறி ஆடுக்கறி முட்டை உள்ளிட்ட அசைவ வகை பொருட்களை வாங்கிச் செல்ல குவிந்து வருவதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
 
இறைச்சி கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன், இறைச்சி வ வாங்கி செல்ல  தொடங்கி உள்ளனர்
இறைச்சி கடைகளில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன், இறைச்சி வாங்கி செல்ல தொடங்கி உள்ளனர்
 
வார நாட்களிலேயே புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூடுதலாக பொதுமக்கள் வந்திருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். புரட்டாசி மாதம் முடிவடைந்த நிலையிலும் , மீன்கள் மற்றும் கறிகளின் விலைகள் பெரிய அளவில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோT20 World Cup Final :  இறுதிப்போட்டியில் இந்தியா..வீழ்த்துமா தென்னாப்பிரிக்கா?மகுடம் சூடப்போவது யார்?Dharmapuri Gender Reveal Issue : வசமாக சிக்கிய கும்பல்..LEFT&RIGHT வாங்கிய அதிகாரிBussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
Kalki 2898 AD Box Office: பாக்ஸ் ஆபீசில் பட்டையை கிளப்பும் கல்கி! 3வது நாள் வசூல் என்ன?
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
கோழிப்பண்ணையில் கூலித் தொழிலாளியை கட்டி வைத்து கொடுமை - கண்ணீர் மல்க மனைவி புகார்
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
ரோஹித், விராட் இடத்தை நிரப்பும் திறமை யாருக்கு உள்ளது..? இந்திய அணியில் இடத்திற்காக தவிக்கும் இளம் வீரர்கள்!
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
Rohit Sharma: ”நான் தான் நம்பர் மூனு” - சரித்திரம் படைத்த கேப்டன் ரோகித் சர்மா - எலைட் லிஸ்டில் சாதித்தது என்ன?
India Next T20 Captain: 2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
2026 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் கேப்டன் யார்? இந்த 4 வீரர்கள் மீது கண் வைத்த பிசிசிஐ!
Paradise Movie Review: வீக்கெண்ட் கொண்டாட்டம்.. வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட ஒரே கதை... பாரடைஸ் திரைப்பட விமர்சனம்!
Paradise Movie Review: வீக்கெண்ட் கொண்டாட்டம்.. வெவ்வேறு பக்கங்களைக் கொண்ட ஒரே கதை... பாரடைஸ் திரைப்பட விமர்சனம்!
Breaking News LIVE: சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது - பிரேமலதா
Breaking News LIVE: சென்னை மாநகராட்சி செயல்பாடின்றி முடங்கியுள்ளது - பிரேமலதா
Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
Vikravandi by election: ஒரு தலைமுறையை அழிக்கும் நபருக்கு ஆயுள் தண்டனை - செளமியா அன்புமணி அதிரடி
Embed widget