மேலும் அறிய

நோயாளிக்கு தையல் போடும் போது ஊசியை இடுப்பில் வைத்து தைத்த தனியார் மருத்துவமனை

நோயாளி ரஞ்சித்குமார் பெயரை பயன்படுத்தி சில வழக்கறிஞர்கள் பணம் கேட்டு மிரட்டுவதாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மோகன்ராஜ் போலீசில் புகார்

சென்னை புளியந்தோப்பு பி.கே காலனி பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (28). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது கடந்த 30 ஆம் தேதி வேலை செய்யும் இடத்தில் இவருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக புளியந்தோப்பு பட்டாளம் டிம்லஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ரஞ்சித் குமாருக்கு இடுப்பு பகுதியில் 13 தையல்கள் போடப்பட்டுள்ளன. மீண்டும் மூன்று நாட்கள் கழித்து வரும் படி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சை முடித்துக் கொண்டு ரஞ்சித்குமார் வீட்டிற்கு சென்று விட்டார். மறுநாள் ரஞ்சித் குமாருக்கு மருத்துவமனை சார்பில் இருந்து தொலைபேசி மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு வரும்படி கூறி உள்ளார்கள். ரஞ்சித்குமார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் அப்போது தையல் பிரிக்க வேண்டும் என கூறியுள்ளனர்  நேற்று தானே தையல் போட்டிருக்கு இன்று ஏன் தையல் பிரிக்க வேண்டும் என ரஞ்சித்குமார் கேட்டுள்ளார்.
 

நோயாளிக்கு தையல் போடும் போது ஊசியை இடுப்பில் வைத்து தைத்த தனியார் மருத்துவமனை
 
இரண்டு தையல்கள் மட்டும் பிரிக்க வேண்டும் காயம் எப்படி உள்ளது என்று பார்க்க வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அப்போது ரஞ்சித் குமாருக்கு வயிற்றில் போடப்பட்ட தையல்களில் இரண்டை பிரித்து பார்த்துள்ளனர். மேலும் உடனடியாக இடுப்பு பகுதியில் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறி ஸ்கேன் எடுத்து வரும்படி அனுப்பி உள்ளனர். ரஞ்சித்குமார் அதே பகுதியில் உள்ள ஒரு ஸ்கேன் சென்டருக்கு சென்று ஸ்கேன் எடுத்து உள்ளார். அப்போது இடுப்பில் சிறிய அளவிலான ஊசி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து ரஞ்சித்குமார் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் மீண்டும் ஆபரேஷன் செய்து ஊசியை  பத்திரமாக அப்புறப்படுத்தி விடுவதாக  கூறியுள்ளனர்.
 

நோயாளிக்கு தையல் போடும் போது ஊசியை இடுப்பில் வைத்து தைத்த தனியார் மருத்துவமனை
 
இதனை ஏற்க மறுத்த ரஞ்சித் குமார் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இடுப்பில் இருந்த ஊசி அகற்றப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்தில் ரஞ்சித் குமார் புகார் கொடுத்துள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்  ரஞ்சித்குமார் மற்றும்  மருத்துவமனை நிர்வாகத்திடமும்  இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மருத்துவமனை டாக்டர் மோகன்ராஜ் புளியந்தோப்பு துணை கமிஷனரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.  அதில் ரஞ்சித்குமார் பெயரை பயன்படுத்தி என்னிடம் சில வழக்கறிஞர்கள் 5 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாகவும் மேலும் அவர்களால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இது குறித்து புளியந்தோப்பு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
’சட்டப்பேரவையில் உதயநிதி, எடப்பாடியை காட்டாமல் நேரலை’ ஆளுங்கட்சியினர் மட்டுமே காட்டப்படுவதாக புகார்
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Kia Carens: ஆகஸ்ட் அதிரடி- கியா கேரன்ஸ் கிளாவிஸ், EV-க்கு ரூ.1.2 லட்சம் சலுகைகள்!
Gold and silver rate today : சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
சவரனுக்கு ரூ. 4,400 உயர்ந்தது.! இரண்டே நாளில் அதிரடி மாற்றம்- ஷாக் கொடுத்த தங்கம் - இன்றைய விலை இதோ
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
பட்ஜெட் விலையில் பிரீமியம் பைக்குகள்: அட்டகாச லுக்கில் மிடில் கிளாஸுக்கு ஏத்த மாஸ் பைக்ஸ் என்ன?
Viral Video: வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு, சாப்டனும்” மகள்களின் வீடியோ
வீடியோ காலில் தந்தையின் இறுதிச்சடங்கு..! “எப்ப முடியும்? குளிச்சிட்டு,சாப்டனும்” மகள்களின் வீடியோ
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Embed widget