மேலும் அறிய

போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்திய பெண்: அதிர்ச்சி தரும் உண்மை - போலீஸ் கொடுத்த எச்சரிக்கை என்ன?

குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரிய தண்டனை வழங்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உண்மைக்கு புறம்பான புகார்

சென்னை இராயப்பேட்டை சரகம் W23 அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் , பெண் ஒருவர் தனது மாமனார் தன் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கொடுத்த புகாரில் W 23 அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடை பெற்று வந்த நிலையில்,  விசாரணையில் புகார் தாரரின் கணவர் ME படித்து விட்டு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருவதாகவும் இதை புகார் தாரரின் மாமனார் கேட்டு சண்டை போடுவதால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டதாகவும் இதை காரணமாக வைத்துக் கொண்டு தன் கணவரின் பேச்சை கேட்டு தன் மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்தது.

கடுமையான நடவடிக்கை

விசாரணையில், புகார் தாரர் தனது மாமனார் மீது உண்மைக்கு புறம்பாக புகார் கொடுத்ததால் சட்டவிதிகளின் படி புகார்தாரர் மீது வழக்கு பதிவு செய்ய உரிய நீதிமன்றத்தில் உத்தரவு பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும் , குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை தருபவர்களுக்கு உரிய தண்டனை, வழங்கும் உயரிய நோக்கிலும், அமல்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தினை தவறாக பயன்படுத்தி பொய் புகார் அளிப்பவர்கள் மீது போக்சோ சட்டம் பிரிவு 22 (1) இன் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரிடிட் கார்டு பணம் செலுத்தும் கடையில் , ரூ.1.48 இலட்சம் பணம் மற்றும் லேப்டாப் திருடிய ஊழியர்

சென்னை வியாசர்பாடி எம்.கே.பி.நகரில் வசித்து வரும் அப்துல் கரீம் ( வயது 24 ) என்பவர் சூளைமேடு, அண்ணல் காமராஜர் தெருவில் கிரெடிட் கார்டு பில் செலுத்தும் கடை நடத்தி வருவதாகவும், கடந்த 04.08.2025 அன்று இரவு கடையை பூட்டிவிட்டு , மறுநாள் (05.08.2025)  காலை கடையை திறக்க வந்துபோது, கடையின் ஷட்டரில் பூட்டு இல்லாமல் இருந்தபோது , ஷட்டரை திறந்து கடையினுள் சென்று பார்த்த போது, அங்கு வைத்திருந்த லேப்டாப் மற்றும் கல்லாவில் வைத்திருந்த பணம் ரூ.1.5 இலட்சம் ஆகியவை திருடு போனதாகவும் , அப்துல் கரீம் F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப் பிரிவில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

F-5 சூளைமேடு காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து திருட்டில் ஈடுபட்ட எம்.கே.பி நகர் பகுதியை சேர்ந்த சரத்குமார் (வயது 32 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து புகார் தாரரின் பணம் ரூ.1.48 இலட்சம் மற்றும் 1 லேப்டாப் மீட்கப்பட்டது. விசாரணையில் கைது செய்யப்பட்ட சரத்குமார் கடையில் வேலை செய்து வந்ததும் , சம்பவத்தன்று நள்ளிரவு தன் வசமிருந்த மற்றொரு சாவியின் மூலம் கடையின் பூட்டை திறந்து பணம் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்று, ஒன்றும் தெரியாதது போல நாடமாடியதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட சரத்குமார் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
மதிமுக ; தனிச் சின்னமா ? உதய சூரியனா ? துரை வைகோ பரபரப்பு பேட்டி !!
மதிமுக ; தனிச் சின்னமா ? உதய சூரியனா ? துரை வைகோ பரபரப்பு பேட்டி !!
ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
ஆர்டர்லி முறை ; கூட்டு சேர்ந்து செயல்பட்டால் அதிகாரிகள் மீது நடவடிக்கை - நீதிமன்றம் அதிரடி
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
Marina Blue Flag Beach: கோவா பீச்சா? மெரினாவா? போட்டோ பாய்ன்ட், குடில்கள்- கண்கவர் வசதிகள் அறிமுகம், இதோ லிஸ்ட்!
ABP Premium

வீடியோ

Anbil Mahesh | விஜயை பார்க்க போய் விபத்து ”செலவை நான் பார்த்துக்கிறேன்” நேரில் சென்ற அன்பில்
Subramanian Swamy on Modi | ”ட்ரம்ப்-க்கு பயப்படும் மோடி! நான் உண்மைய சொன்னா..” சுப்ரமணியன் சுவாமி பகீர்
Sasikala meets Ramadoss | 1 மணி நேரம் ஆலோசனை! ராமதாஸை சந்தித்த சசிகலா! விஜய் TEAM உருவாகிறதா?
Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba on Hormuz Strait: அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
அமெரிக்காவுக்கு Out of Control தான்; “அது மூடிதான் இருக்கும்“: ஈரான் தலைவர் மொஜ்தபா கமேனி நெத்தியடி.!
Kim Jong Un: ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
ஈரான் போருக்கு நடுவே கெத்து காட்டிவரும் கிம் ஜாங் உன்; மகளுடன் துப்பாக்கி தொழிற்சாலையில் சோதனை
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
தமிழ்நாட்டில் போக்சோ வழக்குகள் உயர்வு! காரணம் இது தான்! டிஜிபி சொன்ன புது தகவல்..
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
கோவை விமான நிலையத்தில் பரபரப்பு! தரையிறங்க முயன்ற விமானம் வானில் பறந்த திகில் சம்பவம்!
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Vaiko speech: சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட மாட்டேன்! பாஜகவிற்கு என்ன யோக்கியம் இருக்கு?வைகோ அதிரடி
Best Bikes for Rural Roads: நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
நீங்க கிராமத்துல இருக்கீங்களா.? உங்க சாலைகளுக்கு ஏத்த சிறந்த மலிவான பைக்குகள் எவை தெரியுமா.?
Petrol Diesel Issue India: பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
பெட்ரோல், டீசல் பத்தி கவலையே படாதீங்க; 2004-ல் காங். போட்ட சூப்பர் பிளான்; தப்பித்த இந்தியா.! அது என்ன.?
Minister Ragupathy‘ : நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
‘நீலிக்கண்ணீர், கபட நாடகம்’ மோடி மீது அமைச்சர் ரகுபதி கடும் தாக்கு...!
Embed widget