மேலும் அறிய

11 ஆண்டுகள் கனவு நினைவாகிறது.. பல்லாவரம்-குன்றத்தூர் 4 வழிச்சாலை! ஒரு வழியாக வந்த முன்னேற்றம்

Pallavaram Kundrathur Road Widening: பல்லாவரம் - குன்றத்தூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை 13 கி.மீ நீளத்திற்கு ஜிஎஸ்டி சாலையையும் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையுடன் கோடம்பாக்கம் சாலை வழியாக இணைக்கிறது

கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு மேலாக நிலம் கையகப்படுத்துவதில் தாமதமான  பல்லாவரம்-குன்றத்தூர் நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் நீண்டகால திட்டம் வேகம் பெற்றுள்ளது.தற்போதுள்ள இருவழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்துவதற்கான நிலம் கையகப்படுத்தும் பணியை மாநில நெடுஞ்சாலைத் துறை தொடங்கியுள்ளது. இதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பல்லாவரம்-குன்றத்தூர் சாலை: 

சென்னையில் வளர்ந்து வரும் பகுதிகளான பம்மல், அனகாபுத்தூர், குன்றத்தூர் ஆகிய இடங்களை சுற்றி ஏராளமான கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்ப்பட்டு வருகின்றன. தாம்பரத்தில் பூந்தமல்லி செல்ல பிரதான சாலையாக இருப்பது பல்லாவரம்-குன்றத்தூர் நெடுஞ்சாலையாகும். இந்த சாலை தினசரி ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் தினமும் இந்த சாலை நெரிசலாகவே இருக்கும். இதனால் இந்த சாலையை அகலப்படுத்த வேண்டுமேன நீண்ட நாட்களாகவே கோரிக்கை இருந்து வந்தது. இதனால் இந்த சாலையை 4 வழி சாலையாக விரிவாக்கம் செய்ய 11 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது.ஆனால் இதற்கான நிலம் கையகப்படுத்தினாலும் சில காரணங்களால் சாலை பணிகள் தொடங்காமலே இருந்தது.

இணைப்பு சாலை:

இந்த சாலையில் தற்போது அனகாபுத்தூர் மற்றும் பல்லாவரம் இடையேயாக 4 கி.மீ தூரத்தை கடக்க  தற்போது சுமார் 35 முதல் 40 நிமிடங்கள் ஆகிறது என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.  இதனால் சாலையை விரிவாக்கப்படுத்த வேண்டுமேன பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்த சாலை குன்றத்தூரில் உள்ள கோடம்பாக்கம் நெடுஞ்சாலைக்கு ஒரு முக்கிய இணைப்பு சாலையாகவும் மேலும் இது ஸ்ரீபெரும்புதூர் வரை நீண்டுள்ளது.

ஜிஎஸ்டி சாலை- பெங்களூரு நெடுஞ்சாலை இணைப்பு

பல்லாவரம் - குன்றத்தூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலை 13 கி.மீ நீளத்திற்கு ஜிஎஸ்டி சாலையையும் சென்னை பெங்களூரு நெடுஞ்சாலையுடன் கோடம்பாக்கம் சாலை வழியாக இணைக்கிறது, மேலும் இது சென்னை பைபாஸ், அவுட்டர் ரிங் ரோடு மற்றும் பிற உட்புற பகுதிகளுக்கும் இணைப்பை வழங்குகிறது. எனவே, 6.8 கி.மீ நீளமுள்ள நெடுஞ்சாலையில் ஜிஎஸ்டி முதல் கோடம்பாக்கம் சாலையில் குன்றத்தூர் சந்திப்பு வரை  1.5 கி.மீ.க்கும் இடைப்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் தினமும் ஏற்படுகிறது.

விரிவாக்கப்பணிகள் தொடக்கம்:

தற்போது பயன்பாட்டில் உள்ள இருவழிச் சாலை 9 முதல் 10 மீட்டர் அகலம் கொண்டதாக உள்ளது/இந்த சாலையை 24 மீட்டர் அகலத்திற்கு விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், திருநாகேஸ்வரம், மஞ்சேரி மற்றும் குன்றத்தூர் பி ஆகிய ஆறு வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் முடிந்ததும் சாலை பணிகள் தொடங்கும்" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தினமும் போக்குவரத்து நெரிசல்:

இந்தப் பகுதியில் நாள் முழுவதும் கடும் போக்குவரத்து நெரிசலை  சந்திக்க நெரிடுவதாகவும் வேலை நேரங்களில்  போக்குவரத்து நெரிசல்  3-4 கி.மீ வரை நீடிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். "நிலம் கையகப்படுத்துவதில் சில சிரமங்கள் இருப்பதாகவும், சாலையோரக் கடைகளால் உள்ள ஆக்கிரமைப்பு ஆகியவற்றால் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது. திட்டமிட்டப்படி நெடுஞ்சாலைத் துறை 2014 ஆம் ஆண்டிலேயே இந்த சாலை விரிவாக்கப் பணிகளைத் தொடங்கியிருந்தால், தற்போது இந்த பணிகள் எல்லாம் முடிவடைந்து இருக்கும்" என்று குன்றத்தூரை சேர்ந்த மென் பொறியாளாரான கோகுல் என்பவர் தெரிவித்தார்,

About the author ஜேம்ஸ்

I, James, am a passionate journalist with 3 years of experience in the media industry. I studied Digital Journalism, driven by a strong desire to excel in this field. I began my career as a Video Producer and have since evolved into a dedicated and enthusiastic content writer, with a strong focus on sports and crime reporting. In addition, I cover infrastructure, politics, entertainment, and other important world events, striving to deliver accurate and engaging news to the public. I currently work as an Assistant Producer at the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி
எகிறும் டாலர்.. சரியும் ரூபாய்.. என்ன பண்ண போறீங்க நிர்மலா? | Modi | Rupees VS Dollar
எச்சில் இலை முதல் திருப்பரங்குன்றம் வரை!சர்ச்சைகளும்.. பரபரப்பும்..யார் இந்த நீதிபதி GR சுவாமிநாதன்? | GR Swaminathan
டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
திருப்பரங்குன்றம் தீப பதட்டம் தீபத்தூணில் ஏற்றப்படாத தீபம் நடந்தது என்ன? முழு விவரம் | Madurai | Dheepam 2025 Thiruparankundram Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
DMK - Congress: மு.க.ஸ்டாலினுக்கு 3 நிபந்தனைகளை விதித்த காங்கிரஸ் - என்னென்ன?
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Magalir Urimai Thogai: 12-ந் தேதி முதல் விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை! இறுதிக்கட்ட பணியில் அரசு அதிகாரிகள் தீவிரம்!
Jayalalitha: ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
ஜெ... சும்மா பேர கேட்டாலே அதிருதுல்ல.. இரும்பு பெண்மணியின் பிளாஷ்பேக் இதோ
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை: மலைக்கு அனுமதிக்காத காவல்துறை.. பாஜகவினர் போராட்டம், கைது!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
கனமழை எச்சரிக்கை: சென்னை, காஞ்சிபுரம் உட்பட 14 மாவட்டங்களில் இன்று கொட்டித் தீர்க்கும் மழை! ஆரஞ்சு அலர்ட்!
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
திருப்பரங்குன்றம்: தமிழக அரசு அனுமதி மறுத்ததற்கு இது தான் காரணம்.! ஆதாரத்துடன் பதிலடி கொடுத்த ரகுபதி
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram: பற்றி எரியும் திருப்பரங்குன்றம்.. நயினார் நாகேந்திரன் கைது.. தீபமேற்றும் விவகாரத்தில் திருப்பம்!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Thiruparankundram Issue: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இன்றே தீபமேற்ற வேண்டும்.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அதிரடி உத்தரவு!
Embed widget