மேலும் அறிய

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..

நேற்று மாலை விழுப்புரம், ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தீபாவளி பண்டிகையை கொண்டாட வெளியூர் சென்ற லட்சக்கணக்கான மக்கள் நேற்று மாலை முதலே சென்னை திரும்ப துவங்கியுள்ளனர். இதனால் நேற்று மாலை விழுப்புரம், ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தென் மாவட்டத்திலிருந்து சென்னையை நோக்கி கிளம்பிய ஆம்னி பேருந்துகள் தற்பொழுது வரை சென்னையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளது

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..
 
இதன் காரணமாக வண்டலூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வண்டலூர் வெளிவட்ட சாலையில் மூலம் பூந்தமல்லி வழியாக கோயம்பேடு சென்று அடைய உள்ளது. ஆம்னி பேருந்துகளை விரும்புபவர்கள் பெரும்பாலும் சென்னை உள்பகுதியில் செல்வதற்காகவே ஆம்னி பேருந்துகளில் வருவார்கள். ஆம்னி பேருந்துகளும் தாம்பரம் கிண்டி வடபழனி வழியாக கோயம்பேடு சென்று அடையும்.
 
போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகள் தனி வழியில் திருப்பி விடப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான பயணிகள் வண்டலூரில் இறங்கி செல்கின்றனர். இந்த நிலையில் வண்டலூர் பகுதியில் பெரும் அளவில் சிறப்புகள் இல்லாததால் கூட்டம் அலைமோதுகிறது. ஆட்டோக்கள் வாடகை கார்கள் உள்ளிட்ட கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..
 

 பல்வேறு இடங்களில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்

தென்மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுக்க துவங்கியதால், வட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  குறிப்பாக   சென்னை திருச்சி பிரதான சாலையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசலால் நெடுஞ்சாலை சிக்கி தவித்தது. விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  இதே போன்று செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசலில் கட்டுக்குள் கொண்டு வர 8  கவுன்டர்கள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டது.

வண்டலூரில் போக்குவரத்து நெரிசல்.. சென்னைக்குள் அலை மோதிய பயணிகள்.. நிரம்பி வழிந்த ஆட்டோக்கள்..

 இதேபோன்று செங்கல்பட்டு அடுத்துள்ள பரணூர் சுங்கச்சாவடி பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் அவ்வப்போது ஏற்பட்டது. போக்குவரத்தை  கட்டுக்குள் கொண்டு வர போலீசார்  கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.  மேலும் சிங்கப்பெருமாள் கோவில் ,கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போக்குவரத்து நெரிசலை கண்காணிக்கவும் கட்டுக்குள் கொண்டு வரவும் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். நள்ளிரவில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பெய்த கனமழையும் வாகன ஓட்டிகளை பெரிதும் பாதித்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
ABP Premium

வீடியோ

’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா
Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
Part-time teachers salary: அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
அடி தூள்.! பகுதி நேர ஆசிரியர்கள் ஊதியம் ரூ. 15 ஆயிரமாக உயர்வு.! அசத்தலான அறிவிப்பு
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
TRB அலட்சியம் காட்டக்கூடாது! ஆசிரியர் தேர்வு முடிவுகளை உடனடியாக அறிவிக்க வேண்டும் - அன்புமணி வலியுறுத்தல்
iPhone 17 Price Drop: மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
மக்களே முந்துங்க.!! அதிரடி சலுகை பெறும் ஐபோன் 17; இவ்ளோ விலை குறைவா.? எப்போ, எங்க தெரியுமா.?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
Iran Crisis: ஹார்முஸ் ஜலசந்தி..! ஈரான் கைவைத்தால் என்ன நடக்கும்? உலகின் எண்ணெய் குழாய்க்கு ஆபத்து?
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
தண்டவாளம் மீது விழுந்த கிரேன்.. தூக்கி வீசப்பட்ட ரயில்.. 22 பேர் சம்பவ இடத்திலேயே பலி
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Chennai AQI: அடங்காத சென்னையன்ஸ்.. பனியுடன் சேர்ந்து சுத்துப்போட்ட போகி புகை.. மூச்சடைக்கும் தலைநகர்
Embed widget