மேலும் அறிய

இனி மெரினா பீச்சில் இருந்தபடி ஆபிஸ் வொர்க் பார்க்கலாம்..எப்படி தெரியுமா?

இந்த வசதியை விரைவில் உருவாக்க சென்னை மெட்ரோ நகர நிர்வாகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது

மெரினா கடற்கரை சென்னை மக்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த ஒன்று. கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டுவது நண்பர்களுடனும் குடும்பத்தினருடனும் வாக்கிங் செல்வது காலை சூரிய உதயம் பார்ப்பது சென்னை மக்களின் அன்றாடப் பொழுதுபோக்குகளில் ஒன்று. தற்போது மெரினா கடற்கரைக்குச் செல்பவர்களுக்கு மேலும் ஒரு ரெஃப்ரெஷான செய்தி காத்திருக்கிறது. மெரினாவில் அவ்வபோது ஏற்படும் நெட்வொர்க் சிக்கல்களைப் பற்றி அவர்கள் இனி கவலைப்பட வேண்டியதில்லை.

சென்னை பெருநகர மாநகராட்சி கடற்கரை முழுவதும் தற்போது வைஃபை இணைப்பை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வசதியை விரைவில் உருவாக்க சென்னை மெட்ரோ நகர நிர்வாகம் தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளது.


இனி மெரினா பீச்சில் இருந்தபடி ஆபிஸ் வொர்க் பார்க்கலாம்..எப்படி தெரியுமா?

சென்னை மாநகர நகர மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் எம்.மகேஷ் குமார் மற்றும் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் சமீபத்தில் கடற்கரை முழுவதும் வைஃபை ஹாட்ஸ்பாட்களை உருவாக்கும் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் கலந்துரையாடினர்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: கடற்கரையில் வைஃபை ஹாட்ஸ்பாட்களை வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி விரைவில் பொதுமக்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தை உடனடியாக மேற்கொள்ள மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இருப்பினும் தற்போது ஆரம்ப நிலை பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது!" என்றார்.

லாக்டவுன் காலத்தில் அல்லது இன்னமும் வொர்க் ஃப்ரம் ஹோம் முறையைக் கையாண்டு வரும் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் இனி கடற்கரைக்குச் சென்று காற்று வாங்கியபடியே வேலை செய்யலாம்.

 

முன்னதாக,

மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான கடற்பரப்பினை 100 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. 

சென்னை மெரினா கடற்கரை முதல் கோவளம் கடற்கரை வரையிலான 30 கிலோ மீட்டர் அளவிலான கடற்பரப்பினை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மேலும் தமிழ்நாடு அரசு இந்த திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கீடும், 17 பேர் கொண்ட மறுசீரமைக்கும் குழுவையும் அமைத்துள்ளது. சென்னை கடற்கரை பகுதி மறுசீரமைப்பு மற்றும் புத்துயிர் திட்டத்தின் கீழ் சிறப்பு நோக்கு நிறுவனம் உருவாக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு வீட்டு வசதி வாரிய செயலர் தலைமையில் மறுசீரமைக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.    

 

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மெரினா கடற்கரை. முக்கிய சுற்றுலா தளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகுசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

 

இருப்பினும், சாலையில் இருந்து கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசிப்பதற்கு மணலில் நடந்து செல்வது முதியவர்களுக்கும், உடல்நலம் முடியாதவர்களுக்கும் மிகுந்த சிரமமாக இருந்து வந்தது. மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாகவே இருந்தது. இதுதொடர்பாக, பலரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை  விடுத்து வந்த காரணத்தால் மெரினா சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டன.

இந்த நடைபாதை தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று அனைத்து சுற்றுலா தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget