மேலும் அறிய

அம்மா உணவகங்களில் பணிவாய்ப்பு.. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அளித்த தகவல்..

இந்த பணியாளர்களை நியமிப்பவர்கள் யார், எதன் அடிப்படையில் அங்கு வேலை செய்கிறார்கள் என குற்றச்சாட்டு எழுந்தது

சென்னை பெருநகர நிர்வாகம், கவுன்சிலர்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அம்மா உணவகங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அம்மா உணவகம்

சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம். இந்த அம்மா உணவகங்கள் மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவுகளை வழங்குவது அனைவருக்கும் தெரிந்ததே. இதன்மூலம் ஏழை மக்கள் பலர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இட்லி இன்றுவரை ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும் வழங்கப்பட்டு பசி போக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் ஆட்சி மாறிய பின்னர் கிடைக்குமா என்று நினைத்த நேரத்தில் அதற்கு பெயர் மாற்றம் செய்யாமல் திமுக அரசு நடத்தி வருகிறது. ஆட்சிக்கு வந்த புதிதில் சில அம்மா உணவகங்கள் திமுகவினரால் அடித்து நொறுக்கப்பட்டன என்ற செய்திகள் வந்தன. பிறகு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

அம்மா உணவகங்களில் பணிவாய்ப்பு.. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அளித்த தகவல்..

பணியாளர்கள் யார்

சென்னை மாநகரில் பல அம்மா உணவகங்கள் உள்ளன, இந்த அம்மா உணவகங்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பல பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். ஆனால் தற்போது எழுந்துள்ள சர்ச்சை, இந்த பணியாளர்களை நியமிப்பவர்கள் யார், எதன் அடிப்படையில் அங்கு வேலை செய்கிறார்கள் என்று எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்: படிச்சுப் படிச்சே நான் வயசாளி ஆயிடுவேன்... கெஞ்சிய குழந்தை உருகிய நெட்டிசன்கள்

கவுன்சிலர் எழுப்பிய கேள்வி

இந்த கேள்வியை ஒரு கவுன்சிலர் எழுப்பி, அதில் நடக்கும் முறைகேடுகளை சென்னை மேயர் ப்ரியா ராஜனிடம் கூற, இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனையில் ஜிசிசி கவுன்சிலர்களின் பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் அம்மா உணவகங்களுக்கு புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. 

அம்மா உணவகங்களில் பணிவாய்ப்பு.. பெருநகர சென்னை மாநகராட்சி நிர்வாகம் அளித்த தகவல்..

புதிய பணியாளர்கள்

கடந்த வியாழக்கிழமை 102-வது வார்டின் கவுன்சிலர் ராணி, தனது வார்டில் உள்ள கேண்டீன்கள் எதிர் கட்சி உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உறவினர்களால் பணிக்காக நிரப்பப்படுகிறது என்பது பற்றி கருத்து தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு உண்மை எனில் கவுன்சிலரின் புகார் தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும் மேயர் குறிப்பிட்டார். கவுன்சிலர்களிடம் மனு அளிக்கப்பட்டு, தகுதியானவர்களை அம்மா உணவகங்களில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயர் கேட்டுக்கொண்டார். சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் சமையல் பொருட்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக பல ஆண்டுகளாக பல்வேறு தரப்பில் இருந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி
PMK ADMK Alliance | கூட்டணிக்கு அழைத்த EPS ”ஆட்சியில் பங்கு வேண்டும்” செக் வைத்த அன்புமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
பக்தர்களுக்கு ஷாக்... திருவண்ணாமலை கோவில் தரிசன கட்டணம் உயர்வு! முழு விவரம்
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
மதுரை வரதட்சணை கொடுமை வழக்கு – தலைமறைவாக இருந்த காவலர் பூபாலன் கைது!
Railway Board Approval: 4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
4-வது முனையம்; பெரம்பூர் to அம்பத்தூர் 2 புதிய ரயில் பாதைகள்; சூப்பரான ரயில்வே வாரிய அறிவிப்பு
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
சுயசார்பு இந்தியா - நாட்டின் பொருளாதார நிலப்பரப்பை மாற்றும் உள்நாட்டு தயாரிப்புகள்..
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
Aadi Krithigai 2025 Date: ஆடிக்கிருத்திகை நாளையா? ஆகஸ்ட் 16ம் தேதியா? பக்தர்களே விரதம் இருக்க சரியான நாள் இதுதான்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
New 8 EV Cars Launch: ஒரு முறை சார்ஜ் செய்தாலே 500 கி.மீட்டர் பறக்கலாம்.. இந்தியாவில் அறிமுகமாகும் 8 மின்சார கார்கள் லிஸ்ட்!
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
ரிதன்யாவை பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன்.. அய்யோ சாமி கல்யாணமே வேண்டாம்.. நடிகை பிரியங்கா வேதனை
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Asia Cup: ”நாங்க வரமாட்டோம் போங்கயா” ஓவரா ஆடும் பாகிஸ்தான், ஆசிய கோப்பைக்கு குட்பாய் சொல்லும் பிசிசிஐ
Embed widget