மேலும் அறிய

சங்கிகளின் ஊது குழல் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சேகர்பாபு காட்டம்

சங்கிகளின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி மாறி , அவர்கள் எழுதிக் கொடுப்பதை தனது பிரச்சாரத்தில் பேசி வருகிறார்.

எத்தனை இடையூறுகள் வந்தாலும் நிறைவு செய்யும்

சென்னை புளியந்தோப்பில் அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு பொது மக்களுக்கு உணவு வழங்கிய  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தவர்;

அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சி 141 வது நாளாக 1200 மக்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டிருக்கிறது. எத்தனை இடையூறுகள் வந்தாலும் இந்த நிகழ்ச்சி ஓராண்டை நிச்சயமாக நிறைவு செய்யும். இந்த ஆட்சி பொறுப்பெற்ற பிறகு தான் அன்ன தானம் அதிகரித்திருக்கிறது.

இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கிட்டத்தட்ட 132 கோடி செலவில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் செயல்பட்டு கொண்டிருக்கின்ற 25 பள்ளிகள்  ஒரு பாலிடெக்னிக் கல்லூரி ஒன்பது கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இவைகளில் பயலுகின்ற  22,450 மாணவர்களுக்கு தேவையான புதிய வகுப்பறைகள் ஆய்வரங்கங்கள் நூலகங்கள் என  கூடுதல் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது.

 அந்த வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 கல்லூரிகள் திறக்கப்படும் என்று அறிவித்திருந்தோம். பல தடைகளை மீறி நீதிமன்றத்தின் நெடிய போராட்டத்திற்கு பிறகு நான்கு கல்லூரிகளை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பாட்டிற்கு கொண்டு வந்திருக்கிறார். அந்த நான்கு கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2500 ஐ தாண்டி இருக்கிறது. வறுமை கோட்டிற்கு கீழே இருக்கக் கூடிய மக்கள் தான் அதிகமாக இந்த கல்லூரியில் பயன் பெற்று வருகிறார்கள்.

அதிமேதாவி இபிஎஸ் 

நேற்றைக்கு முன்தினம் அதிமேதாவி தனமாக தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அறிய பல சொற்களை சரித்திரத்தில் இடம் பெறுகிற அளவிற்கு சொற்களை கூறியிருக்கிறார். இந்த ஆட்சியில் கலைக் கல்லூரிகளை அரசின் சார்பிலே துவங்கப்பட வேண்டிய தானே என்கிறார். இந்த ஆட்சியில் கலைக் கல்லூரி அரசியல் சார்பில் துவங்கி இருக்கிறோம். 41 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை இந்த அரசு துவங்கி இருக்கிறது. அறநிலையத் துறையில் அறப்பணி, கல்விப் பணியையும் இந்த ஆட்சி செழுமையுடன் நடத்தி வருகிறது.

எதிர்க் கட்சி தலைவர் கூறிய கூற்றுப்படி பார்த்தால் 1966 ஆம் ஆண்டு சென்னை மாகாண  அட்வகேட் ஜெனரல் சி பி ராமசாமி தலைமையில் இந்து சமய அறநிலைத்துறைக்கு வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டது. அந்த குழு தந்த அறிக்கை 1962 ஆம் ஆண்டு கல்வி நிலையங்களை தோற்றுவிக்க வேண்டும் என்று அறிக்கை கொடுத்தது. இவர்கள் உட்கார்ந்து இடத்தில் சொல்லவில்லை இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்த அறிக்கை அன்றைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

சோழர் காலத்தில் கூட மிகப் பெரிய கல்விச் சோலை இருந்து 11 படப்பிரிவுகள் இடம் இடம் பெற்றிருந்ததாகவும் கல்வெட்டு கூறுகிறது. வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கல்வி நிலையங்களும் , மருத்துவ நிலையங்களும் மன்னர்களால் தோற்றுவிக்கப்பட்டிருந்தது என்பதற்கு பல சான்றுகள் இருக்கிறது. 

சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய இபிஎஸ் பேச்சு

கோயில் கட்டிடங்களை போன்ற பிரிவுகளை உள்ளடக்கி கல்லூரிகளை தொடங்கலாம் என்று இந்து சமய அறநிலைத்துறை உடைய சட்டமே சொல்கிறது. அந்த வகையில் தான் புதியதாக இந்த ஆட்சியில் நான்கு கல்லூரிகள் தொடங்கப்பட்டது. ஆந்திரா கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் இது போன்று கல்லூரிகள் பல்கலைக் கழகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக அவதூறு கற்பிக்க முடியவில்லை என்பதற்காக புதியதாக சேர்ந்திருக்கின்ற சங்கிகளின் கூடாரம் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக நேற்றைய முன் தினம் எதிர்க்கட்சி தலைவர் பல முரணான வார்த்தைகளை பேசியிருக்கிறார்.

நேற்றைக்கு முன்தினம் அவர் கோயம்புத்தூரில் பேசுகின்ற போது அவருடைய அருகாமையில் அம்மன் அர்ஜுன் என்ற சட்டப்பேரவை உறுப்பினர் நின்று கொண்டிருந்தார். அவர் இதே சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெறும் போது அவர் மாவட்டத்திற்கு மருதமலை திருக்கோயில் சார்ந்த இடத்திற்கு  ஒரு பொறியியல் கல்லூரி வேண்டும் என கோரிக்கை வைத்தார்.  

எப்படி கோயில் நிதியில் இருந்து கல்விக் கூடங்களை நடத்தலாம் என்று கேட்கின்ற எடப்பாடி பழனிசாமி  கேட்கிறார். அவரது தலைவர் முன்னாள் முதலமைச்சர் 2014 அருள்மிகு பழனி ஆண்டவர் தொழில் நுட்பக் கல்லூரி வளாகத்தில் 
கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்திருக்கிறார்கள். பள்ளி கல்லூரிகளுக்காக அவர்களது ஆட்சியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. 

பழனிசாமி பேசியது கண்டிக்கதக்கது

கடந்த ஆட்சிக் காலங்களிலேயே இந்து சமய அறநிலைத்துறை சார்பாக எண்ணற்ற பள்ளிகள் கல்லூரிகள் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. வரலாறு தெரியாமல் இப்போது சேர்ந்திருக்கிற சங்கீகள் வைக்கின்ற கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு கோயில்கள் இந்து சமயநிலையத் துறையில் இருந்து விடுபட வேண்டும் என பாஜகவுக்கு ஊதுகோலாக இருந்து கோயம்புத்தூரில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி பேசியது கண்டிக்கத்தக்கது. தகுந்த பாடத்தை மக்கள் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பரிசாக அளிப்பார்கள்.

அவர் காலத்தில் அவர் இந்து சமய அறநிலையத் துறையினுடைய வருமானத்தை எடுத்து கல்லூரிக்கு கூடுதல் கட்டணங்களை திறந்து இருக்கிறார். அவருக்கு இந்த பதவி கிடைக்க காரணமாக இருந்த அம்மையார் ஆட்சி காலத்தில் இந்த சமய அறநிலை துறை சார்பாக கல்லூரிகள் கட்டப்பட்டிருந்தது. அதையும் சதி செயல் என்கிறாரா ? 

அரசு நிதி இல்லை

பாஜக என்ற மலைப் பாம்பால் கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக என்ற சங்கிகள் கூட்டம் விழுங்கப்பட்டு வருகிறது. காலப் போக்கில் இந்த கட்சி தானாக கலையும். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்த சமய அறநிலையத்துறை சார்பாக கட்டப்பட்ட கல்வி கட்டடங்கள் அனைத்தும் இந்த சமய அறநிலையத்துறை வருமானத்திலிருந்து கட்டப்பட்டது தான் அது அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டது அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். அறியாமையில் இருக்கிற எதிர்க்கட்சித் தலைவர் சங்கிகள் கூட்டம் எழுதிக் கொடுப்பதை  அப்படியே வாசித்து வருகிறார். அவர் வெல்வோம் என்கிறார் , தேர்தல் வரட்டும் நாங்கள் கொல்வோம் என மக்கள் சொல்கிறார்கள். 

வல்லக்கோட்டை சம்பவம் குறித்து செல்வப் பெருந்தகையிடம் பேசி இருக்கிறோம் அவரும் இந்த நிகழ்வுக்கு முற்று புள்ளி வைத்திருக்கிறார். இதுபோன்ற சிறிய பிரச்சனைகள் கூட இனி நடக்காமல் காப்பது துறையின் உடைய கடமை. 

தமிழிசை என்னை நேரில் பார்த்தால் நன்றாக பேசுகிறார்கள். முகத்திற்கு முகம் ஒரு பேச்சு முதுகுக்கு பின்னால் ஒரு பேச்சு என பேசுவது திமுக க்கு இல்லை.திமுக தலைவர் கூடுகின்ற இடங்களில் எல்லாம் கூடுகிற கூட்டம் கொள்கை கூட்டம் அதிமுக பரப்பறையில் கூடுகின்ற கூட்டம் கூடி கலைகின்ற கூட்டம்.

தலைப்பு செய்திகள்

Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
19 வயது கல்லூரி மாணவி 17 வயது சிறுவனுடன் உடலுறவு !! மாணவி கர்ப்பம் - சிக்கிய அதிர்ச்சி
TN Weather News: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங்? சென்னை? - தமிழக வானிலை அறிக்கை
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?
Power Cut ; சென்னையில் மின்தடை ; எங்கு ? எப்போது தெரியுமா ? உங்க ஏரியா இருக்கா ?

வீடியோ

Thanjavur Viral Video : ”உன்ன DISMISS பண்ணியாச்சே நீ எப்படி வேலை செய்ற” ரணகளமான அரசு அலுவலகம்
Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Karnataka Visit : ’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
’கர்நாடகா செல்லும் முதல்வர் விஜயின் பயணம் ரத்து?’ தீவிர ஆலோசனையில் முதல்வர் அலுவலகம்..!
Tasmac: மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
மூடப்பட்ட 717 டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் எங்கே? மர்மங்கள் நீடிக்கிறதா? - அரசு மவுனம் கலையுமா?
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
திமுக மாஜிக்களுக்கு ஸ்கெட்ச்.! ஊழல் பட்டியல் ரெடி.? சட்டமன்றத்தில் அடித்து ஆட காத்திருக்கும் விஜய்
TVK Vijay: உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் தவெக? குறிவைக்கப்படும் DMK அனுதாபி IAS அதிகாரி? காரணம் என்ன?
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Royal Enfield EMI: வெறும் 5 ஆயிரம் போதும்; ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை சொந்தமாக்கலாம்- EMI விவரங்கள்!
Chennai Power Cut: சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
சென்னைல ஜூலை 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? இந்த லிஸ்ட்ட பாருங்க
Minister Jegatheeswari: “என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
“என் தொகுதிக்குள்ள வர்றதுக்கு அதிகாரம் கொடுத்தது யார்.? அடிச்சு கொன்னுடுவேன்” அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
தள்ளிப்போகிறது உள்ளாட்சி தேர்தல்.! பயப்படுகிறதா தவெக அரசு.? வெளியான அரசிதழ்- இதுதான் காரணமா.?
Embed widget