மேலும் அறிய

சித்த மருத்துவ பல்கலைக்கழகம் இங்கு தான் வரும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது எங்கு?

மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்து தயாராக உள்ளது. பல்கலைக்கழகம் வந்தே தீரும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி

11 வது சர்வதேச யோகா தினம்

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத் துறை சார்பில் 11ஆவது சர்வதேச யோகா தினம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், இந்திய மருத்துவத்துறை மற்றும் ஹோமியோபதி ஆணையர் விஜயலட்சுமி அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகள் , மருத்துவமனையில் உள் நோயாளிகள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெறுபவர்கள் என 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு யோகா செய்தனர்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேடைப் பேச்சு

தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் என அனைத்து இடங்களிலும் யோகா தினத்தை கடைப்பிடித்து வருகிறோம். யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உடலை தூய்மையாக்குகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக ஆக்குவது மட்டுமல்லாமல் தனி மனிதன் ஆயுளை நீட்டிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்திகளை கூடுதல் ஆக்குவதற்கு யோகா பெரிய அளவில் உதவுகிறது.

இந்தியாவில் அதிகபட்சமாக யோகா மருத்துவக் கல்லூரிகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு தான். வரும் 30 தேதி 59 சித்த மருத்துவர்கள் என 171 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பணி ஆணை வழங்க உள்ளார் என்றும் இந்திய மருத்துவத்திற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மிக முக்கிய பங்குகளைத் தருகிறது. அதிக யோகா மருத்துவக் கல்லூரிகள் இருக்கும் மாநிலம் தமிழ்நாடு , யுனானி யோகா சித்தா என ஐந்து மருத்துவத் துறைகளும் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் ; 

சித்த பல்கலைக்கழகம் அமைப்பதற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். பிறகு சட்டமன்றத்தில் அந்த மசோதா திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது. தற்பொழுது சட்டபூர்வமான கிளரிஃபிகேஷன் நிறைவடைந்து எதிர் வரும் சட்டமன்ற கூட்டத் தொடரில் வைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்து வரக் கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில் சித்த மருத்துவ பல்கலைக்கழக தொடர்பான மசோதாவை ப்ளேஸ் செய்யலாம் என்று முதலமைச்சர் சொல்லி உள்ளார். சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கான கட்டமைப்புகள் முடிந்து இதே வளாகத்தில் ரூபாய் 2 கோடி செலவில் அலுவலகம் தயாராக உள்ளது.

சென்னை மாதவரம் பகுதியில் 25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடத்தையும் தேர்வு செய்து தயாராக உள்ளது. சித்த பல்கலைக்கழக மசோதா சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றியதற்கு பிறகு சம்பந்தப்பட்டவர்களின் ஒப்புதல் பெற்று நிச்சயம் தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்தே தீரும்.

எம்.பி.பி.எஸ் பி.டி.எஸ் படிப்பிற்கான விண்ணப்ப தேதி 25 ஆம் தேதி வரை இருக்கிறது இப்பவும் நேரம் இருக்கிறது.

போதை பொருளை ஒழிக்க சட்டமியற்ற வேண்டும் என்று எதிர்க் கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்த நிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதிலடி

அதை யார் சொல்ல வேண்டும் என்ற தகுதி வேண்டும். எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருந்த போது தான் சட்டமன்றத்தில் இன்றைய முதல்வர் எதிர்க் கட்சித் தலைவராக இருந்து போதை வஸ்துக்களின் நடைமாற்றம் தமிழகத்தில் அதிகரித்து இருக்கிறது குறிப்பாக தடை செய்யப்பட்ட போதை வஸ்துகள் அனைத்தும் தமிழ்நாட்டில் அதிக அளவில் இருக்கிறது என்று சொன்னார். அன்றைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக மறுத்தார்.

எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும்

அடுத்த நாளே 21 சட்டமன்ற உறுப்பினர்கள் சென்னையில் தாராளமாக கிடைக்கும் போதை வஸ்துக்களை சட்டமன்றத்திற்கு சென்று  இன்றைய தமிழக முதல்வர் காட்டினார். உண்மையிலேயே போதை வஸ்துக்களை தடுக்க வேண்டும் என்ற நல்ல முதல்வராக இருந்தால்  எடப்பாடி பழனிசாமி என்ன செய்திருக்க வேண்டும் ? இது எங்கு கிடைத்தது என்று சொல்லுங்கள் உடனடியாக நான் நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொல்லி இருக்க வேண்டும். மாறாக சபாநாயகரை கொண்டு 21 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியை பறிக்க  நடவடிக்கைகளை எடுத்தார்.

அந்த யோக்கிய சிகாமணி இதைப்பற்றி சொல்வதற்கு வேடிக்கையான ஒன்று, போதை குக்கா வழக்குகள் சிபிஐ இடம் உள்ளது. இந்த ஆட்சி பொறுப்பு ஏற்றதிலிருந்து தான் அண்டை மாநிலமான ஆந்திராவில் நான்காயிரம் ஏக்கர் கஞ்சா பயிரிடுவதை இங்கிருக்கும் காவல்துறை உயர் அதிகாரி சொல்லி ஆயிரம் கோடி மதிப்பில் ஆனந்த கஞ்சா அழிக்கப்பட்டது.

தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் கஞ்சா சாகுபடி 0% சதவீதமாக உள்ளது எங்கேயாவது கஞ்சா சாகுபடி செய்யப்படுகிறது என்று எடப்பாடி பழனிச்சாமி சொன்னால் நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு தான் தமிழ்நாடு முழுவதும்  பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை வஸ்துகளுக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து ஆண்டு தோறும் கின்னஸ் சாதனை படைத்து வருகிறோம்.

போதைப் பொருட்களை விற்கும் சமூக விரோதிகளின் சொத்துக்கள் பறிமுதல் படுத்துவது மற்றும் மிகப்பெரிய தண்டனைக்கு உள்ளாக்கி சிறையில் அடைப்பது  நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது இந்த அரசு.

கடந்த ஆண்டுகளில் பெருகியிருந்த போதை நடமாட்டம் தற்பொழுது மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி இன்றைக்கு கஞ்சா பூஜ்யம் சதவிகித சாகுபடி என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது  என்பதை எடப்பாடி பழனிசாமி நன்கு உணர வேண்டும்  என்றார்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
மாணவர்களே, ஜாலிதான்.! அரையாண்டு விடுமுறையை அறிவித்த பள்ளிக்கல்வித்துறை; எத்தனை நாள் தெரியுமா.?
CM Stalin Condemnation: “100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
“100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் பாஜக அரசு!“: முதல்வர் கண்டனம்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
Embed widget