மேலும் அறிய

மருத்துவ கல்லூரி சேர்க்கை , இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் - காவல் துறை அறிவுரை

மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என மத்திய குற்றப்பிரிவு அறிவுரை வழங்கினார்.

கலந்தாய்வு மூலம் மட்டுமே இட ஒதுக்கீடு

மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை நீட் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வு மூலம் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. தினந்தோறும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அலுவலக வளாகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இடைத்தரகர்களை யாரும் நம்ப வேண்டாம்

இம்முகாமில் பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்ததில், மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத் தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது. சென்னை பெருநகர காவல் ஆணையார் அருண் , பொதுமக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்றும், மருத்துவ கல்லூரியில் இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும், அரசின் மருத்துவப்படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் கலந்து கொள்வதன் மூலமும் , கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மட்டுமே மருத்துவ படிப்பிற்கான இடத்தினை ஆலோசனை செய்யுமாறு அறிவுரை வழங்கி உள்ளார்.

இளைஞரை கத்தியால் தாக்கி கொலை செய்த வழக்கில் 8 நபர்கள் கைது

சென்னை மாதவரம் பர்மா காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்த லோகேஷ் (எ) சந்துரு ( வயது 24 ) என்பவர் 12 ஆம் வகுப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு, கூலி வேலை செய்து வந்தார். கடந்த 14.08.2025 அன்று காலை , லோகேஷ் (எ) சந்துரு வீட்டில் இருந்த போது, அவரது நண்பரான ஜெரோம் என்பவர் அழைத்ததின் பேரில், அவருடன் லோகேஷ் (எ) சந்துரு சென்றுள்ளார்.

பின்னர் முன்விரோதம் காரணமாக லோகேஷ் (எ) சந்துருவை ஜெரோம் உட்பட அறிமுகமான சிலர் சேர்ந்து அம்பேத்கர் நகர் சுரானா கம்பெனி காலியிடத்தின் அருகே உள்ள புதரில் கத்தியால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவலறிந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ ஊழியர்கள் பரிசோதனை செய்ததில் , லோகேஷ் (எ) சந்துரு ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது.

8 இளைஞர்கள் கைது 

இச்சம்பவம் குறித்து லோகேஷ் (எ) சந்துருவின் தாயார் கிருஷ்ணவேணி ( வயது 49 ) என்பவர்  M-1 மாதவரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேதத்தை மீட்டு , உடற்கூராய்விற்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். M-1 மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மாதவரம் பகுதியை சேர்ந்த ரூபேஷ் ( வயது 27 ) ,  2.மோனிஷ் (எ) பூவரசன் வயது (24 ) , பிரவீன்குமார் ( வயது 20 ) , ஆகாஷ் வயது ( 19) , ஆகாஷ் ( வயது 19 ) , ஜெரோம் ( வயது 20 ) , கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பிரகான்குமார் ( வயது 19 ) , பொன்னேரி பகுதியை சேர்ந்த  அருண்குமார் ( வயது 37 ) ஆகிய 8 நபர்களை கைது செய்தனர். குற்ற சம்பவத்தில் தொடர்புடைய 17 வயது கொண்ட 2 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்யப்பட்டது.

கொலை செய்ய காரணம் என்ன ?

அவர்களிடமிருந்து குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 கத்தி, 3 இருசக்கர வாகனங்கள்,  3 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் இறந்து போன லோகேஷ் (எ) சந்துருவின் நண்பர்கள் சிலர்  கடந்த சில தினங்களுக்கு முன்பு , ரூபேஷின் நண்பர் ஜோயல் ஜோஸ்வா என்பவரை கத்தியால் தாக்கியுள்ளனர். இச்சம்பவத்திற்கு லோகேஷ் (எ) சந்துரு தான் முக்கிய காரணம் என்று ரூபேஷ் அவரது நண்பர்களுடன் சேர்ந்து திட்டமிட்டு லோகேஷ் (எ) சந்துருவை  கொலை செய்துள்ளது தெரிய வந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ரூபேஷ் மீது ஏற்கனவே கஞ்சா , வழிப்பறி, அடிதடி உட்பட 8 குற்ற வழக்குகளும் மோனிஷ் (எ) பூவரசன் மீது கஞ்சா , வழிப்பறி, அடிதடி உட்பட 10 குற்ற வழக்குகளும் , ஆகாஷ் மீது 1 அடிதடி வழக்கும் , ராகேஷ் மீது வழிப்பறி , அடிதடி உட்பட 3 குற்ற வழக்குகள் உள்ளதும் , இவர் M-1 மாதவரம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட 8 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். 2 இளஞ்சிறார்கள், சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
இன்று கொட்டித் தீர்க்கப்போகுது கனமழை! காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
Chennai International Kite Festival: வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
வீகெண்ட் செம பிளான்! மாமல்லபுரத்தில் வண்ணமயமாகத் தொடங்கும் சர்வதேச காற்றாடித் திருவிழா!
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
வாகன ஓட்டிகளுக்கு ஷாக்! டீசல் விலை உயர வாய்ப்பு.. காரணம் என்ன தெரியுமா?
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
உங்களுக்கு நல்ல சாவே வராது.. திமுகவுக்கு வாக்களிக்காத மக்களை விளாசிய ஆர்.எஸ்.பாரதி!
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
Kite Festival : காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
காத்தாடி திருவிழா! 2 நாள் விடுமுறையில் குடும்பத்துடன் சென்று ரசிக்கலாம் – அனுமதி இலவசம்; எங்கே தெரியுமா?
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
திமுக ஆட்சியில் ரூ.37 ஆயிரம் EB பில்.. இப்போ ரூ.13 ஆயிரம்.. எனக்கு அதிகமாக வரல.. வசமாக சிக்கிய வைஷாலி!
Embed widget