![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு - காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை
இளம்பெண்ணின் சித்தப்பா காதர்பாஷா, அவரது சகோதரர் கரிமுல்லா ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
![திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு - காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை Male corpse recovered on railway track in Tiruvallur - Is it a love affair? As the police investigation திருவள்ளூரில் ரயில் தண்டவாளத்தில் ஆண் சடலம் மீட்பு - காதல் விவகாரமா? என போலீஸ் விசாரணை](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/23/b0e69fc0112b732226cb49c3e91395ae_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த சிங்கராஜபுரம் கிராமத்தை சேர்ந்த தோனீஸ்வரன் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்று படித்து வந்த அவர் ஆர்.எஸ்.மங்காபுரம் கிராமத்தை சேர்ந்த வேறு சமுதாயத்தை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருத்தணி அடுத்த பொன்பாடி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் மாணவன் தோனீஸ்வரன் சடலமாக கிடந்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தோனீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவனின் உயிரிழப்புக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவன் தோனீஸ்வரன் காதலித்ததாக கூறப்படும், இளம்பெண் அவரது அம்மா மற்றும் இளம்பெண்ணின் அண்ணன் ஆகிய 3 பேரிடமும் திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர். காதல் விவகாரத்தில் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா அல்லது காதல் தோல்வியில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் ஒருவர் ரயில் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே அதிகாலை 3 மணி அளவில், சென்னையில் இருந்து ரேணிகுண்டா சென்ற விரைவு ரயில் ஓட்டுனர், ரயில் முன் வாலிபர் ஒருவர் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதாக புகார் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். இதனால் தோனீஸ்வரன், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்ததால் பெண்ணின் உறவினர்கள் கொலை செய்து ரயில் செல்லும்போது தண்டவாளத்தில் வீசினார்களா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, தோனீஸ்வரன் மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த, 17 வயது சிறுமி இருவரும் கடந்த சில ஆண்டுகளாகவே நெருங்கி பழகி வந்துள்ளனர். மாணவன் உயிரிழந்த தினத்தன்று 17 வயது சிறுமியுடன் பொன்பாடி ரயில் நிலையத்திற்கு இருசக்கர வாகனத்தில் மாணவன் வந்துள்ளான். அப்பொழுது தோனீஸ்வரன் மற்றும் அந்த 17 வயது சிறுமி இருவரும் இரவு 8 மணி அளவில் அந்த பகுதியில் நீண்ட நேரமாக நின்று பேசிக் கொண்டே இருந்துள்ளனர். இரவு 10 மணி ஆகியும் 17 வயது சிறுமி வீட்டிற்கு வராததால் பெற்றோர் சிறுமியை தேடி சென்றுள்ளனர் அப்பொழுது அச்சிறுமி ஒருவருடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனடியாக அந்த மாணவனை எச்சரித்து மாணவனின் இருசக்கர வாகனத்தை அடித்து உடைத்துள்ளனர். இந்த நிலையில்தான் மாணவன் ரயில் மோதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)