மேலும் அறிய

Madras Day 2022: பொருளாதார மற்றும் தொழில் வளர்ச்சியின் மையமாக சென்னை மாறியது எப்படி?

மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன.

நாட்டின் முக்கிய நகரமான சென்னை, பொருளாதாரத்திலும் சமூக அளவிலும் மிக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது. மற்ற முக்கிய நகரங்களை காட்டிலும் சென்னையின் வளர்ச்சி தனித்துவமானது. ஏனெனில், இதற்கு பல்வேறு காரணிகள் உள்ளன. மெட்ராஸ் மாகாணத்திலிருந்து சென்னையாக மாறிய நகரத்திற்கு என ஆயிரம் ஆண்டு வரலாறு இருப்பதாக கூறப்படுகிறது.

நவீன வரலாற்றை பொறுத்தவரையில், 1639இல் கிழக்கிந்திய கம்பெனியைச் சேர்ந்த பிரான்சிஸ்டே, ஆண்ட்ரு ஹோகன் ஆகிய இருவரும் கிழக்கிந்திய கம்பெனியை நிறுவுவதற்காக அய்யப்பன் மற்றும் வேங்கடப்பன் ஆகியோரிடமிருந்து  செயின்ட் ஜார்ஜ் கோட்டை/தலைமைச் செயலகம் இருக்கும் இடத்தை வாங்கினர்.

வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சென்னை, பல ஆண்டுகளாக நாட்டின் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக விளங்குகிறது. சென்னை நகரத்தை சுற்றி சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் தலைநகரில் துரிதப்படுத்தப்பட்டன. 

இந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பொருள்களை வர்த்தகம் செய்வதிலும், அதிக மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதிலும் ஈடுபட்டுள்ளன. தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் ஏற்றுமதியின் அளவு அதிகரித்ததன் காரணமாக, நாட்டின் இரண்டாவது பெரிய உலகளாவிய  சந்தையாக சென்னை அடையாளம் காணப்பட்டுள்ளது.

சென்னை, முதலீடுகளை ஈர்க்கும் நகரமாக உள்ளது. தென்னிந்தியாவில் சுற்றுலாவின் முதன்மையான தளமாக கருதப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் ஜவுளித் தொழிலால் செழிக்கத் தொடங்கிய சென்னை, உலகில் வேகமாக வளரும் முதல் 10 நகரங்கள் என ஃபோர்ப்ஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மும்பை, டெல்லி மற்றும் கொல்கத்தாவிற்கு அடுத்தபடியாக, ஃபார்ச்சூன் இதழில் இடம்பெற்ற 500 நிறுவனங்களை நடத்தும் பெரிய நகரமாக சென்னை மாறியுள்ளது.

சென்னையின் பொருளாதார வளர்ச்சியில் தொழில் நிறுவனங்களின் பங்கு:

சென்னையின் பொருளாதார அடித்தளமே பரந்த அளவிலான தொழில்களும் உற்பத்தி பிரிவுகளும் ஆகும். சென்னையின் பொருளாதார வளர்ச்சியில் பின்வரும் தொழில்கள் முக்கிய உந்து சக்திகளாக விளங்குகின்றன:

தகவல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பிபிஓ

பல மென்பொருள் மேம்பாட்டுத் துறைகள் மற்றும் பிபிஓக்கள் சென்னையில் உருவாகி, நகரின் பொருளாதாரத் துறைக்கு மேலும் மேலும் வளர்ச்சியைக் கொண்டு வருகின்றன. பெங்களூருக்கு அடுத்தபடியாக நாட்டின் மென்பொருள் சேவைகளை அதிகம் ஏற்றுமதி செய்யும் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தையும், ஹைதராபாத் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

மஹிந்திரா, விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், ஐபிஎம், ஹெச்பி போன்ற இந்தியாவின் தலைசிறந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் சென்னையில் தங்களுடைய அலுவலகங்களைக் கொண்டுள்ளன.

ஆட்டோமொபைல் தொழில்

இந்தியாவின் ஆட்டோமொபைல் மையம் என்று அழைக்கப்படும் சென்னை, பல உள்நாட்டு மற்றும் சர்வதேச ஆட்டோமொபைல் நிறுவனங்களின் மையமாக உள்ளது. அசோக் லேலண்ட், BMW, Nissan, Royal Enfield, Daimler, Ford, Hindustan motors, Hyundai, Yamaha, Renault போன்ற பல உற்பத்தி ஆலைகள் சென்னையில் உள்ளன. இந்தியாவின் முக்கிய ஆட்டோமொபைல் சந்தையாக சென்னை வேகமாக வளர்ந்து வருகிறது. 

மருத்துவ சேவை

மருத்துவ சேவை என்பது சென்னையின் முக்கிய பொருளாதார வளர்ச்சித் துறையாகும். இந்தியாவுக்கு மருத்துவ சேவைக்காக வருவோரில் 40 விழுக்காட்டினர் சென்னைக்கு தான் வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் சென்னைக்கு மருத்துவ சேவைக்காக வருகை தருவோரின் எண்ணிக்கை ஆறு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது என இந்திய தொழில் கூட்டமைப்பு கூறுகிறது.

சென்னையிலுள்ள அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் குரூப், குளோபல் ஹாஸ்பிடல்ஸ் அண்ட் ஹெல்த் சிட்டி, தி மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்த்தோபெடிக்ஸ் அண்ட் ட்ராமாட்டாலஜி (எம்ஐஓடி) போன்ற புகழ்பெற்ற மருத்துவமனைகள், எண்ணிலடங்கா நோயாளிகளுக்கு சிறந்த தரமான சுகாதாரம் மற்றும் மேம்பட்ட சுகாதார வசதிகளை வழங்குகிறது.

சுற்றுலாத் துறை

சென்னையின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்துசக்திகளில் ஒன்று அதன் சுற்றுலாத் துறை ஆகும். தமிழ்நாட்டின் அழகிய தலைநகரான சென்னை, அதன் அற்புதமான தொல்பொருள் அடையாளங்கள், புகழ்பெற்ற பாரம்பரிய கட்டிடங்கள், செழுமையான கலாசார தளங்கள் மற்றும் நகரத்தை சுற்றியுள்ள கடற்கரை காரணமாக உலகம் முழுவதிலுமிருந்து எண்ணற்ற பார்வையாளர்களை ஈர்க்கிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read More

தலைப்பு செய்திகள்

சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
சென்னையில் பிளிப்கார்ட்டின் பிரம்மாண்ட திட்டம்! 1.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு... யார் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்?
உஷார்! சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை பெயரில் தொடரும் மோசடிகள்: உளவு பார்த்த பயணி செய்த வேலை! 
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Embed widget