மேலும் அறிய

வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம்: பரபரப்புக்கு முற்றுப்புள்ளி! பாதுகாப்பாக திரும்பியதா?

"வண்டலூர் உயிரியல் பூங்காவில் மாயமான சிங்கம் மீண்டும் இருப்பிடத்திற்கு திரும்பியதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது"

தமிழகத்தின் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றான வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்க லயன் சஃபாரியில் இருந்து 'மாயமானதாக' கருதப்பட்ட ஆண் சிங்கம் குறித்து பூங்கா நிர்வாகம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.

வண்டலூர் உயிரியல் பூங்கா லயன் சபாரி

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு நாள்தோறும் சுமார் 2500 பார்வையாளர்களையும், விடுமுறை நாட்களில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்களையும், ஈர்க்கும் வண்டலூர் பூங்காவில், கல்வி சுற்றுலாவிற்காகப் பள்ளி மாணவர்களும் அதிகம் வந்து செல்கின்றனர்.

இந்தப் பூங்காவில் உள்ள விலங்குகளை, நேரடியாக அவற்றின் காடுகளுக்குச் சென்று பார்க்கும் வகையில், மான் மற்றும் லயன் சஃபாரி வசதிகள் உள்ளன. பாதுகாப்பு வசதியுடன் கூடிய வாகனங்களில் பார்வையாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டு, சிங்கம் மற்றும் மான்களைப் பார்வையிடலாம். இந்த லயன் சஃபாரிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது.

புதிதாக விடப்பட்ட ஆண் சிங்கம் கூண்டுக்குத் திரும்பாதது ஏன்?

லயன் சஃபாரியில் மொத்தமாக ஒன்பது சிங்கங்கள் உள்ளன. இதில் ஏழு சிங்கங்கள் (மூன்று ஆண், நான்கு பெண்) பார்வையாளர்களுக்கு இயற்கை அனுபவத்தை மிக நெருக்கமாக வழங்க வடிவமைக்கப்பட்ட சஃபாரிப் பாதையில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இந்த ஏழு சிங்கங்களில், ஷேர்யார் என்ற ஐந்து வயது ஆண் சிங்கம், கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூரில் உள்ள பன்னேரஹட்டா உயிரினப் பூங்காவிலிருந்து விலங்கு பரிமாற்றத்தின் மூலம் வண்டலூர் பூங்காவிற்கு வந்தது. இந்தச் சிங்கம் அடிக்கடி சஃபாரிப் பகுதிக்குள் விடுவிக்கப்படுவது வழக்கம். 2025 அக்டோபர் 3-ஆம் தேதி, ஷேர்யார் சிங்கம் வழக்கம் போல் சஃபாரிப் பகுதிக்குள் விடப்பட்டது. 

பொதுவாக, மாலை நேரமானதும் சிங்கங்கள் தானாகவே கூண்டுக்குத் திரும்பி விடுவது வழக்கம். ஆனால், ஷேர்யார் சிங்கம் இரவு ஆகியும் கூண்டிற்குத் திரும்பாததால் பூங்கா ஊழியர்கள் முதலில் சற்று அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து, உடனடியாக வனவிலங்கு மேலாண்மை அதிகாரிகள், சிங்கத்தைத் தேடுவதற்காகப் பிரத்யேகக் குழுக்களை அமைத்தனர். அக்டோபர் 4-ஆம் தேதி தேடுதல் குழுவினர், சிங்கம் லயன் சஃபாரிப் பகுதிக்குள்ளேயே இருப்பதை உறுதி செய்தனர்.

சிங்கம் வெளிப்புறப் பகுதிக்குச் செல்லாமல் இருக்க வலுவான எல்லைச் சுவர் மற்றும் சங்கிலிச் சக்கரக் கூண்டு வேலிகள் ஆகியவற்றால் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். மேலும், ஷேர்யார் சிங்கத்தின் பாதச் சின்னங்கள் லயன் சஃபாரி எல்லைக்குள் பதிவாகி இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்தனர்.

தொடர்ந்து ஐந்து தனி படைகள் அமைக்கப்பட்டு, சிங்கம் கண்காணிக்கப்பட்டு வந்தது. பகலில் ட்ரோன் மூலமாகவும், இரவு நேரத்தில் வெப்பப் படம் பிடிக்கும் (Thermal Imaging) ட்ரோன்கள் மூலமாகவும் சிங்கம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டது. அதன் நடமாட்டத்தைக் கண்காணிக்க 10 கேமராப் பிடி (Camera Trap) வசதிகளும் நிறுவப்பட்டன.

இருப்பிடம் திரும்பிய சிங்கம்

தீவிர கண்காணிப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பிறகு, லயன் சஃபாரிப் பகுதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த ஷேர்யார் ஆண் சிங்கம் மீண்டும் அதன் இருப்பிடமான கூண்டுக்குத் திரும்பியது என்று வண்டலூர் உயிரியல் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம், பார்வையாளர்கள் மற்றும் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் நிலவிய குழப்பம் நீங்கி, நிலைமை தற்போது சீரடைந்துள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
திண்டுக்கல் வந்த தனுஷ் சூழ்ந்த நூற்றுக்கணக்கான ரசிகர்கள் SPOT-க்கு ஓடோடி வந்த போலீஸ் | Dhanush
AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
கண்டிப்பாக 40 சீட் வேண்டும்.!! கரராக சொல்லிய காங்கிரஸ்.. ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?
Orange Alert: இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
இன்றைக்கும் சென்னையில் செம சம்பவம் இருக்கு... 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்- எங்கெல்லாம் தெரியுமா.?
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
சென்னையில் மழைநீர் தேக்கம்: மக்களின் துயரத்திற்கு இவர்கள்தான் காரணம் - விஜயின் அதிரடி பதிவு
OPS met Amit Shah: அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
அமித்ஷாவை தனியாக சந்தித்த ஓபிஎஸ்.! இது தான் காரணமா.? வெளியான ரகசிய தகவல்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Wonderla Chennai: ரூ.611 கோடிய கொட்டி என்ன பலன்? முதல் நாளே மட்டையான சென்னை வொண்டர்லா - கடுப்பான மக்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Honda: ஸ்கூட்டர் சந்தையை ஆளும் ஹோண்டா.. ஆக்டிவாவின் ஆதிக்கம், இளசுகளை அள்ளும் டியோ - மொத்த மாடல்கள்
Heavy Rain: சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
சென்னை, திருவள்ளூரை நொறுக்கிய டிட்வா.! இன்றும், நாளையும் என்ன நடக்கும்- வெதர்மேன் எச்சரிக்கை
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Electric Car Sales: EV கார்களுக்கு என்னாச்சு? சரிந்த விற்பனை, தடுமாறும் டாடா, MG, மஹிந்த்ரா - ஹிட் லிஸ்டில் கியா
Embed widget