மேலும் அறிய

ஊரடங்கு காலத்தில், சுய உதவிக்குழு கடனாளர்களை நிர்பந்திக்கும் நிறுவனங்கள் : கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை..!

முழு ஊரடங்கு காலத்தில் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் நிறுவனங்கள் மீது பின்வரும் 04324 - 257377 தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு காலத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் கடன் தொகையை திரும்ப செலுத்த நிர்பந்தம் செய்யும் தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதிக்கடன் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் மு வடநேரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ஊரடங்கு காலத்தில், சுய உதவிக்குழு கடனாளர்களை நிர்பந்திக்கும் நிறுவனங்கள் : கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை..!

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா தொற்று 2-ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழகத்தில் முழு ஊரடங்கு கடந்த 10.05.2021 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு தற்போது நடைமுறையில் உள்ளது. சில துறை அரசு அதிகாரிகள் முதல் நாள்தோறும் பிழைப்பு நடத்தி வரும் பாட்டாளிகள் வரை, வேலைகளுக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஒரு சிலர் காய்கறி வண்டி, பழ வண்டி , பூக்கடை ஹோட்டல் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்ள கடைகளை திறந்து வைத்து தங்கள் வியாபாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். தினசரி வேலைக்கு செல்வோர் தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். 

இந்நிலையில், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தனியார் வங்கிகள் மற்றும் நுண்நிதிகடன் வழங்கும் நிறுவனங்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு வழங்கிய கடன் தவணை தொகையை திரும்ப செலுத்தக்கேட்டு நிர்பந்தம் செய்துவருவதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஊரடங்கு காலத்தில், சுய உதவிக்குழு கடனாளர்களை நிர்பந்திக்கும் நிறுவனங்கள் : கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் எச்சரிக்கை..!

எனவே, கரூர் மாவட்டத்தில் தவணைத்தொகை செலுத்த கட்டாயப்படுத்தாமல் கால அவகாசம் அளிக்கவேண்டும். அந்த நிலுவைத் தொகைகளுக்கு கூடுதல் வட்டி வசூலிப்பதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இது தொடர்பாக மாவட்ட அளவில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், திட்ட இயக்குநர், மகளிர் திட்டம், மகளிர் திட்ட உதவி திட்ட அலுவலர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்களின் கடன் திரும்பச்செலுத்தும் கால அட்டவணையை மாற்றி அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், கொரோனா பெருந்தொற்று காரணத்தால் தனியார் வங்கிகள் மற்றும் நுண் நிதி நிறுவன பணியாளர்கள் வெளியூர் நபர்களாக இருப்பதாலும் கடன் தொகை வசூல் செய்வதற்காக அவர்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருவதாலும் இவர்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா  தொற்று பரவ அதிக அளவில் வாய்ப்புள்ளது.

எனவே, இது தொடர்பாக எந்த புகார்களுக்கும் இடம் அளிக்காத வகையில் செயல்பட வேண்டும். இதையும் மீறி புகார்கள் ஏதேனும் கரூர் மாவட்டத்தில் பெறப்படும் நிலையில், இச்செயல் தற்போது அரசு விதித்துள்ள ஊரடங்கு நடைமுறைகளை மீறிய செயலாக கருதி, தொடர்புடைய அனைத்து தனியார் வங்கிகள், நுண் நிதிக்கடன் நிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 04324 - 257377 என்ற தொலைபேசி எண்ணில் இது தொடர்பாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் தற்போதுள்ள சூழ்நிலையில் சிரமப்பட்டுவரும் மாவட்ட மக்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rathnam movie Hari | காலில் விழாத குறைதான் Please.. ரத்னம் பார்க்க வாங்க சிங்கம் ஹரிக்கு என்ன ஆச்சுRahul Gandhi Slams Modi | ”பயத்தில் நடுங்கும் மோடிக லங்கும் பாஜக” ராகுல் அதிரடி பதிலடிKoovagam Festival 2024 | கட்டிய தாலியை அறுத்து கதறி அழுத திருநங்கைகள் கூவாகம் கூத்தாண்டவர் திருவிழாKanimozhi Slams Modi | ”மோடிக்கு முஸ்லிம்கள் மீது வெறுப்பு” கடுமையாக சாடிய கனிமொழி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு.. வெளியான புதிய தகவல்.. ஆய்வு அறிக்கை என்ன சொல்கிறது?
Breaking Tamil LIVE: பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கமளிக்க உத்தரவு - தேர்தல் ஆணையம் அதிரடி!
TN Weather Update: குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
குமரி, நெல்லையில் மழைக்கு வாய்ப்பு.. பிற மாவட்டங்களில் என்ன நிலவரம்? - வானிலை ரிப்போர்ட்
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
How to Choose Mango : ”நீங்கள் மாம்பழ பிரியரா? மாம்பழத்தை எப்படி பார்த்து வாங்க வேண்டும் தெரியுமா?” உணவுத் துறை அதிகாரிகள் தரும் டிப்ஸ்..!
RBI On Kotak Mahindra Bank: ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி தடை - கோடக் மஹிந்திரா வங்கியின் பங்கு விலை கடும் சரிவு!
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
ஹாட் வேண்டாம்; குளு குளு பீர் போதும்! டாஸ்மாக்கில் அலைமோதும் மது பிரியர்கள்
Vishal: “வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” -  விஷாலுக்கு என்ன ஆச்சு?
“வண்டியை எல்லாம் வித்துட்டேன்.. சைக்கிள் மட்டும் தான் இருக்கு” - விஷாலுக்கு என்ன ஆச்சு?
Exclusive: ”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
”எல்லோரையும் அடிச்சு பத்தனும்” – வடக்கன் டீசருக்கு புது விளக்கம் கொடுத்த இயக்குநர் பாஸ்கர் சக்தி..!
Embed widget