மேலும் அறிய

Abpnadu Impact : காஞ்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர்..

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூரில் முதற்கட்டமாக பங்களிப்பு தொகை செலுத்திய , 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று வழங்கினார்.

காஞ்சிபுரம் அடுத்த கீழ்க்கதிர்பூர் கிராமத்தில் நகர்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் ,6.99 ஹெக்டேரில் 3 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட 33 பிளாக்குகளுடன் கூடிய 2112 குடியிருப்புகள் மற்றும் அடிப்படை மேம்பாட்டு வசதிகளான அங்கன்வாடி மையம், ஆரம்ப பள்ளிக்கூடம், ஆரம்ப சுகாதார நிலையம், பால் அங்காடி, நியாய விலை கடை, கடைகள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவை ரூ. 190.08 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.
Abpnadu Impact : காஞ்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர்..
 
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட வேகவதி ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு செய்து குடியிருக்கும் பொது மக்கள், பெரு வெள்ளக் காலங்களில் வெள்ள நீர்  வீட்டுக்குள் புகுந்து அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைவதை தடுக்கும் வகையில் அங்கு வசிக்கும் ஆக்கிரமிப்பாளர்களை  அகற்றி கீழ்கதிர்பூரில் கட்டப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பிலுள்ள வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Abpnadu Impact : காஞ்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர்..
 
இக்குடியிருப்பில்  உள்ள ஒவ்வொரு குடியிருப்புகளும் 400 சதுர அடி கொண்டது. இதில்  மத்திய அரசு ரூ 1.5 லட்சமும், மாநில அரசு ரூ.6 லட்சமும் மான்மயமாகவும், பயனாளிகள் ரூ 1.5 லட்சம் என மொத்தம் 9 லட்சம் மதிப்பில் ஒவ்வொரு வீடும் பயனாளிக்கு அளிக்கப்பட்டு வருகின்றன. மாற்று இடமாக கட்டப்பட்ட வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பொதுமக்களுக்கு அளிக்கப்படாமல் உள்ளதாக ABPNADU இணையதளத்தில் செய்தியாக பதிவு செய்திருந்தோம்.
 
 
இந்நிலையில்  இன்றைய தினம் தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இக்குடியிருப்புகளை, திறந்து வைத்து முதற்கட்டமாக 200க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அவர்களுக்கான  வீடு ஒதுக்கீடு ஆணையினை  வழங்கினார். இதில் மாவட்ட நிர்வாகம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவேகவதி ஆற்றங்கரையுல் குடியிருந்த 1406 பயனாளிகள் மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கியவர்களாக  தேர்வு செய்யப்பட்ட 706 பயனாளிகள் என 2112 பயனாளிகளில் முதற்கட்டமாக பயனாளிகள் பங்களிப்பு தொகையை செலுத்தியவர்களுக்கு இன்றைய தினம் வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது. மீதமள்ளவர்கள் பயனாளி பங்களிப்பு தொகை செலுத்தியப்பின் அடுத்தக்கட்டமாக அவர்களுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Abpnadu Impact : காஞ்சிபுரத்தில் 200-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கிய அமைச்சர்..
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. ஜி.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி. எழிலரசன்,மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை மனோகரன்,துனை தலைவர் நித்யா சுகுமார், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், துணை மேயர் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள்,பயனாளிகள் என  ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget