மேலும் அறிய

Rajiv Gandhi Assassination : பேரறிவாளனுக்கு பொதுவிடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து, முருகன்- நளினி பொது விடுப்பு கேட்டு மனு . 

நளினி , சென்னையில்  உள்ள தனது தாய் பத்மா 81 வயது மூப்பு காரணமாக உடல் நிலை  பாதிக்கப்பட்டுள்ளார் , எனவே அவரை சந்திக்கவும் , இலங்கையில் உள்ள தனது மாமனார் ( முருகனின் தந்தை ) வெற்றிவேல் இறந்து ஒரு வருடம் நிறைவு அடைய உள்ள சூழ்நிலையில் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும் தனது கணவருக்கும் 30  நாட்கள் பொது விடுப்பு வழங்கிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் .

1991-ஆம் ஆண்டு மே மாதம் 21-ஆம் தேதி  சென்னை அருகில் உள்ள ஸ்ரீ பெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் சாந்தன், முருகன், பேரறிவாளன் , நளினி உள்ளிட்ட 26 பேர்கள் குற்றவாளிகள் என்று கூறி இவர்கள் அனைவருக்கும் தூக்குத்தண்டனை வழங்கவேண்டும் என்ற தீர்ப்பை ஜனவரி மாதம் 1998-ஆம் ஆண்டில்  வழங்கியது .   

Rajiv Gandhi Assassination : பேரறிவாளனுக்கு பொதுவிடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து, முருகன்- நளினி பொது விடுப்பு கேட்டு மனு . 

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று கருதப்பட்ட 22  நபர்களும் உச்சநீதிமன்றத்தில் மே மாதம் 1999-ஆம் வருடம் மேல்முறையீடு செய்ததில் சாந்தன், முருகன் பேரறிவாளன், நளினி ஆகிய நான்குபேருக்கு மட்டும் தூக்குத்தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்றம் , மீதம் இருக்கும் 22  குற்றாவாளிகளில் 19  நபர்கள் விடுதலைசெய்து, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் ஆகிய மூன்று பேரின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது. பல்வேறுபட்ட முயற்சிகளுக்கு பின்பு நளினியின் தூக்குத்தண்டனை, அப்பொழுதைய முதல்வரான கருணாநிதியின் முயற்சியால் 2000-ஆம் ஆண்டில் ஆயுள் தண்டையாக குறைக்கப்பெற்றது. எஞ்சியிருந்த பேரறிவாளன் , சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் தூக்குத்தண்டனை 2014-ஆம் ஆண்டு ஆயுள் தண்டையாக மாற்றம் பெற்றது .   

1991-ஆம் ஆண்டு முதல் 30  வருடத்திற்கு மேலாக சிறையில் இருக்கும் இந்த ஏழு பேர் தங்களை விடுதலை செய்யவேண்டும் என்ற பல கருணை மனுக்களை , ஜனாதிபதி , பிரதமர் , தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கு அனுப்பி இருந்தாலும், இதுவரையிலும் அவர்களின் மனுகளுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் தமிழக அரசோ மத்திய அரசோ எடுக்கவில்லை. 

Rajiv Gandhi Assassination : பேரறிவாளனுக்கு பொதுவிடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து, முருகன்- நளினி பொது விடுப்பு கேட்டு மனு . 

இந்த நிலையில் சென்னை புழல் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை மருத்துவ காரணங்களின் பேரில் பொதுவிடுப்பில் வெளியே விடவேண்டும் என்று அவரது தாய் அற்புதம் அம்மாள் மே மாதம் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு மனு அனுப்பியிருந்தார். அற்புதம் அம்மாள் மனுவை பரிசீலித்த முதல்வர் கடந்த 16-ஆம் தேதி, பேரறிவாளனுக்கு 30  நாட்கள் பொது விடுப்பு அளித்து உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து இன்று , வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் இருக்கும் முருகனும் , மற்றும் வேலூர்  பெண்கள் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகனின் மனைவி நளினி ஆகிய இருவரும் தங்களுக்கு பொதுவிடுப்பு கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் உள்துறை செயலாளருக்கும் சிறை கண்காணிப்பாளர் வாயிலாக மனு அளித்துள்ளனர் . 

Rajiv Gandhi Assassination : பேரறிவாளனுக்கு பொதுவிடுப்பு அளிக்கப்பட்டதையடுத்து, முருகன்- நளினி பொது விடுப்பு கேட்டு மனு . 

மனுவில் நளினி, ”சென்னையில்  உள்ள தனது தாய் பத்மா 81 வயது மூப்பு காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். எனவே அவரை சந்திக்கவும், இலங்கையில் உள்ள தனது மாமனார் ( முருகனின் தந்தை ) வெற்றிவேல் இறந்து ஒரு வருடம் நிறைவடைய உள்ள சூழ்நிலையில் அவருக்கு சடங்குகள் செய்யவும், தனக்கும் தனது கணவருக்கும் 30  நாட்கள் பொதுவிடுப்பு வழங்கிட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார் 

தலைப்பு செய்திகள்

காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
காதல் திருமணம் செய்த மகள் !! ஆத்திரத்தில் மருமகன் வீட்டுக்கு பெட்ரோல் குண்டு வீசிய தந்தை
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
சித்தி - அக்கா மகன் இடையே கள்ளக் காதல் !! அறையில் தந்தை பார்த்த 'அந்த' காட்சி
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
மனைவியைக் கொன்று கணவர் போலீசில் சரண் - கொலைக்கான பின்னணி என்ன ?
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!
வெறும் 1 லட்சம் டெபாசிட்... சென்னையில் ஆவின் கடை வைக்க சூப்பர் வாய்ப்பு - ஜூன் 10 கடைசி நாள்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
1 லட்சம் மாத்திரைகள் பறிமுதல்- போதைப்பொருள் விற்பனை- 79 பேர் குண்டர் சட்டத்தில் கைது- எங்கே தெரியுமா?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
Trump Vs Mojtaba: மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
மொஜ்தபா கமேனியை சந்திப்பாரா ட்ரம்ப்.? உண்மையை போட்டு உடைத்த ஈரான் வெளியுறவு அமைச்சர் அரக்சி
US Iran War: ‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
‘அவங்க அட்டாக் பண்ணா, நாங்க சும்மா இருப்போமா.?‘ - வளைகுடா அமெரிக்க தளங்களை பதம் பார்த்த ஈரான்
Tata Tiago 2026 Review: புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
புதிய டாடா டியாகோவோட பெட்ரோல், சிஎன்ஜி பதிப்புகள் எப்படி இருக்கு.? இந்த ரிவ்யூவ்ல தெரிஞ்சுக்கலாம்
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Hybrid Cars: மார்க்கெட்டில் மாஸ் காட்டும் டாப் ஹைப்ரிட் கார்கள்: 29 கி.மீ வரை சிறப்பான மைலேஜ்- இதோ லிஸ்ட்!
Flex Fuel Cars India: அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
அப்படி வாங்க.! WagonR முதல் Creta வரை; இந்தியாவில் அறிமுகமான Flex Fuel கார்களின் முழு லிஸ்ட் இதோ
Embed widget