மேலும் அறிய

உறவினரை ஏமாற்றி ரூ.1 கோடி மோசடி ; தந்தை , மகன் கைது ! மடிப்பாக்கம் பரபரப்பு , நடந்தது என்ன ?

தொழில் துவங்குவதற்காக, உறவினரிடம் 1 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தந்தை, மகன் கைது

1 கோடி ரூபாய் கடன் வாங்கி , திருப்பி கொடுக்காமல் ஏமாற்றிய தந்தை, மகன் கைது

சென்னை மடிப்பாக்கம் ராம் நகரில் வசித்து வருபவர் சுகந்தி ( வயது 57 ) இவர், மடிப்பாக்கம் போலீசில் கடந்த செப்டம்பரில் அளித்த புகாரில் ; 

கடந்த 2019 - ம் ஆண்டு, தன் கணவர் ரமேஷ் குமாரின் அக்கா சரளாதேவி, அவரது கணவர் குணசேகர், அவர்களின் மகன் விஜய் ஆகியோர், விடுதி நடத்துவதற்காக என் கணவரிடம் ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கினர். லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறினர்.

இதையடுத்து, திருவான்மியூரில் உள்ள வீட்டை விற்று, அதில் வந்த பணத்தில், ஒரு கோடி ரூபாயை வங்கி மூலமாகவும், ரொக்க மாகவும் சரளாதேவி குடும்பத்தினரிடம் கொடுத்தேன்.

சில மாதங்கள் மட்டும், லாபத்தில் பங்காக வங்கியில் 75,000 ரூபாய் செலுத்தினர். பின் கொரோனா காலத்தில் நஷ்டம் எனக் கூறி பணமும் கொடுக்கவில்லை.

2020 ஆண்டு முதல் , 2023 ஆண்டு வரை, மாதம் 40,000 ரூபாய் மட்டும் வட்டி பணம் எனக் கூறி செலுத்தினர். அதன் பின், மீதி பணத்தை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.

பணத்தை திரும்ப கேட்ட போது மூவரும் தகாத வார்த்தைகளால் பேசி எங்களை மிரட்டினர். எனவே, மூவர் மீதும் நடவடிக்கை எடுத்து தர வேண்டி மீதி பணம், 98.3 லட் சம் ரூபாயை பெற்று தர வேண்டும் என இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இது குறித்து விசாரித்த மடிப்பாக்கம் குற்றப்பிரிவு போலீசார், பள்ளிக்கரணையைச் சேர்ந்த குணசேகர் ( வயது 67 ) அவரது மகன் விஜய் ( வயது 36 ) ஆகியோரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். சரளாதேவியிடம் பெண் போலீஸ் மூலம் விசாரணை நடந்து வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

பொதுமக்களை விரட்டி , விரட்டி வெட்டிய மது போதை கும்பல் 

சென்னை கொளத்துார் ராஜமங்கலம், சிவசக்தி நகர் ஒன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் சந்திரா ( வயது 52 )  இவரது வீட்டின் அருகே வசிக்கும் ஆகாஷ் என்பவரை தேடி, இரு சக்கர வாகனத்தில் ஆறு பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. ஆகாஷ், வீட்டில் இல்லாததால் அங்கு நின்றிருந்த சந்திராவை, மது போதை கும்பல் சரமாரியாக வெட்டியது.

அதை தடுக்க முயன்ற சந்திராவின் மகன் ராஜேஷ் ( வயது 36 ) என்பவரையும், அந்த கும்பல் வீடு புகுந்து வெட்டியுள்ளது. அக்கம் பக்கத்தினர், தாய், மகன் இருவரையும் மீட்டு, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சந்திராவின் தலையில் இரண்டு தையலும், ராஜேஸ்க்கு 15 - க்கும் மேற்பட்ட தையலும் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், அதே போதை கும்பல், கொளத்துார், மேட்டு தெருவைச் சேர்ந்த கார்த்திக் ( வயது 35 ) மற்றும் அவரது நண்பர்கள், தமிழ்ச்செல்வன் ( வயது 26 ) மற்றும் மனோஜ் கிரண் ( வயது 32 ) ஆகியோரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.

படுகாயமடைந்த மூவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு, அருகில் உள்ள பெரியார் நகர் அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதித்தனர். அந்த கும்பல் கோயம்பேட்டில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரையும் வெட்டியுள்ளது. ராஜமங்கலம் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.

மதுபோதை கும்பலைச் சேர்ந்தவர்கள், ஏற்கனவே போதை பொருள் வழக்கில் கைதாகி சிறை சென்றதாக தெரிகிறது. மேலும் கார்த்திக்குடன் இருந்த முன் பகை காரணமாக இச்சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
திக் திக் டிட்வா...சென்னையில் அடுத்த 2 நாள் காத்திருக்கு சம்பவம் - வெதர்மேன் அலர்ட்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
Ditwah Cyclone: கிட்ட நெருங்கும் டிட்வா புயல் .. இன்றும், நாளையும் எங்கெல்லாம் மழை.. முழு விவரம்
TOMATO PRICE: ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
ஒரு கிலோ தக்காளி இவ்வளவா.!! ஒரே நாளில் உச்சத்தை தொட்ட விலை- எப்போ தான் குறையும்.?
Cyclone Ditwah Flight cancel: டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
டிட்வா சூறைக்காற்று.!! மதுரை, திருச்சி, தூத்துக்குடி விமானங்கள் ரத்து- பயணிகளுக்கு அலர்ட்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
Cyclone Ditwah: கொட்டித் தீர்க்கும் கனமழை.. தமிழ்நாட்டில் எங்கெல்லாம் பள்ளி, கல்லூரி விடுமுறை?
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Embed widget