மேலும் அறிய

இறந்தும் உயிர் வாழும் கண்கள்.. விஜய் விழியகம் கொண்டு வந்த மாற்றம்.. குவியும் பாராட்டுக்கள்..!

Vijay Vizhiyagam : " தளபதி விஜய் விழியகம் துவங்கி முதல் முறையாக விபத்தில் உயிரிழந்த விஜய் மக்கள் நிர்வாகியின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது "

செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகி உயிரிழந்த பிறகு தனது கண்களை தானம் செய்துள்ளார்.

செங்கல்பட்டு விஜய் மக்கள் இயக்க நிர்வாகி

செங்கல்பட்டு மாவட்டம் மாமண்டூர் பகுதியைச் சேர்ந்த திருத்தணி என்பவரது மகன் கரண் (25). இவர் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தில் மாமண்டூர் கிளை தலைவராக பதவி வகித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி மோகனப்பிரியா என்கிற மனைவியும், ஒரு வயதில் எழிலரசி என்கிற மகளும் உள்ளனர். இவர் செங்கல்பட்டு வேண்பாக்கம் பகுதியில் ஸ்டிக்கர் கடை நடத்தி வந்தார்.


இறந்தும் உயிர் வாழும் கண்கள்.. விஜய் விழியகம் கொண்டு வந்த மாற்றம்.. குவியும் பாராட்டுக்கள்..!

விபத்தில் சிக்கிய கரண்

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தனது மகளுக்கு மருந்து வாங்க நெல்வாய் கூட்ரோடு பகுதிக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த லாரியின் மீது கரணின் இரு சக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலையில் பலத்த படுகாயம் அடைந்த கரண் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

கண் தானம் செய்த சான்றிதழுடன் குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்
கண் தானம் செய்த சான்றிதழுடன் குடும்பத்தினர் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள்

இறந்தும் உயிர் வாழும் கண்கள்

இந்நிலையில் கடந்த 12-ம் தேதி அவர் சிகிச்சை பலனின்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். இதனிடையே கரண் விஜய் மக்கள் இயக்கத்தில் பணியாற்றி வந்த போது தளபதி விஜய் விழியகத்தில் பதிவு செய்து இருந்தார். இதனால் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் உயிரிழந்த கரணின் உடலில் இருந்து அவரது இரு கண்களும் எடுக்கப்பட்டு  விழியகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அளித்த சான்றிதழ்
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை அளித்த சான்றிதழ்

உயிரிழந்த கரணின் விருப்பத்தின்படி தளபதி விஜய் விழியகம் தொடங்கி முதன்முதலாக கரணின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கண் தானம் செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பலரது பாராட்டையும் பெற்றுள்ளது. 


இறந்தும் உயிர் வாழும் கண்கள்.. விஜய் விழியகம் கொண்டு வந்த மாற்றம்.. குவியும் பாராட்டுக்கள்..!

இது குறித்து செங்கல்பட்டு  மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் தெரிவித்ததாவது :  எங்களின் வழிகாட்டியாக  தளபதி விஜய் திகழ்ந்து வருகிறார்.  அவரின் அறிவுறுத்தலின்படி பல சமூக  மற்றும் மக்கள் பணிகளை செய்து வருகிறோம்.  அந்த வகையில்    எங்களுடன் பயணித்த ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருடைய கண்கள் தானம் செய்திருப்பது  மனதுக்கு ஆறுதலை தருகிறது.  ஒவ்வொருவரும்  ரத்ததானம், கண் தானம் உள்ளிட்டவத்தை செய்ய முன்வர வேண்டும்.  கரணை இழந்து வாடும், குடும்பத்திற்கு    எங்களால் முடிந்த அளவு உதவியை தொடர்ந்து செய்வோம் என தெரிவித்தனர்  .

விஜய் மக்கள் இயக்க பணிகள் ( vijay makkal iyakkam ) 

தொடர்ந்து, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மக்கள் பணிகள் செய்ய வேண்டும் எனவும் விஜய் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் எடுக்கப்படும் முன்னேற்பாடுகளை சமூக வலைதளத்தில் கொண்டு சேர்ப்பதற்காக யூடியூப் சேனல், அதிகாரப்பூர்வ ட்விட்டர், பேஸ்புக் ,இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்கள்  மூலம் மக்களிடையே, விஜய் மக்கள் இயக்கம் தொடர்ந்து நேரடி தொடர்பில் இருந்து வருகிறது. இதுபோக தளபதி விஜய் குருதியகம் என்ற பெயரில், ரத்த தேவைப்படுபவர்களுக்கு ரத்தம் அளிப்பதற்கு ஏதுவான மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே தளபதி விழியகம் என்ற செயலையும் உருவாக்கப்பட்டு, அதன் மூலம் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை கண்தானம் மற்றும் ரத்தம் தானம் செய்ய நடிகர் விஜய் ஊக்குவித்து வருகிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget