மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி !! ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஊழியர்

ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஸ்கேன் எடுக்கும் போது பெண்ணிடம் பாலியல் அத்து மீறியல் - இளைஞர் கைது

சென்னையில் அதிர்ச்சி !! ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஊழியர்

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்த காரணத்தினால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஸ்கேன் எடுக்கும் போது அப்பெண்ணிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது குறித்து வீட்டிற்குச் சென்று  தனது கணவரிடம் தெரிவித்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ராஜமங்கலம்  போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , நாகர் கோவில் மாவட்டத்தை சேர்ந்த ஜில்கவின் ( வயது 28 ) என்ற நபர் சென்னையில் தங்கி தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்ததும் , இவர் ஸ்கேன் எடுக்க வந்த அப்பெண்ணிடம் பாலியல் அத்து மீறியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் ஜில்கவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தள்ளுவண்டி டிபன் கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் ( வயது 50 ) என்பவர் இராஜமங்கலம் மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 4 ம் தேதி இரவு கடையில் வியாபாரம் முடித்து வீட்டிற்கு கிளம்பும் போது அவரது கடைக்கு வந்த தெரிந்த நபர்களான ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் விஜயிடம் பணம் கொடு என மிரட்டினர். அதற்கு விஜய் தன்னிடம் பணம் இல்லை என கூறிய போது,  2 நபர்களும் விஜயை கையால் தாக்கி, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1,300 பணம் மற்றும் அருகிலிருந்த அவரது செல்போனை எடுத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து விஜய் இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 27 ) மற்றும் பாஸ்கர் ( வயது 33 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், ஜெயக்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி , திருட்டு உள்ளிட்ட 8 குற்ற வழக்குகளும் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bangladesh Attack on Hindu: இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
இதெல்லாம் சரியில்ல.! வங்கதேசத்தில் தொடரும் அட்டூழியம்; மேலும் ஒரு இந்து இளைஞர் மீது தீ வைப்பு
Zelensky Vs Putin: “200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
“200 ட்ரோன்களை ஏவி தாக்குதல்“; ரஷ்யா மீது குற்றச்சாட்டை அடுக்கும் ஜெலன்ஸ்கி; நடப்பது என்ன.?
Switzerland Bar Blast: ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஸ்விட்சர்லாந்தில் சோகம்; 40 பேர் பலி; பாரில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பயங்கர வெடி விபத்து
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
ஜன.6 வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கலைன்னா சஸ்பெண்ட்; வெளியான அதிரடி தகவல்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை மாற்றம்! புதிய தேதிகள் அறிவிப்பு: மாணவர்கள் கவனத்துக்கு!
iPhone Mega Discount: ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
ஐபோன் பிரியர்களுக்கு ஜாக்பாட்.! புத்தாண்டில் ரூ.16,000-த்திற்கு மேல் தள்ளுபடி; எந்த மாடல் தெரியுமா.?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Cigarette price: பிப்.1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு; ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 ஆ? என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு அதிகம்?
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Teachers Protest: கொட்டும் மழையில் குவிந்த ஆசிரியர்கள்: 7-வது நாளாக நீடிக்கும் போராட்டம்!
Embed widget