மேலும் அறிய

சென்னையில் அதிர்ச்சி !! ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஊழியர்

ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஸ்கேன் எடுக்கும் போது பெண்ணிடம் பாலியல் அத்து மீறியல் - இளைஞர் கைது

சென்னையில் அதிர்ச்சி !! ஸ்கேன் எடுக்க சென்ற பெண்ணிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்ட ஊழியர்

சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்த காரணத்தினால் மருத்துவர்களை அணுகி சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர். அதன் அடிப்படையில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான ஸ்கேன் சென்டருக்கு சென்றுள்ளார்.

அப்போது ஸ்கேன் சென்டரில் வேலை செய்யும் நபர் ஸ்கேன் எடுக்கும் போது அப்பெண்ணிடம் அத்து மீறியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் இது குறித்து வீட்டிற்குச் சென்று  தனது கணவரிடம் தெரிவித்து இருவரும் ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ராஜமங்கலம்  போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் , நாகர் கோவில் மாவட்டத்தை சேர்ந்த ஜில்கவின் ( வயது 28 ) என்ற நபர் சென்னையில் தங்கி தனியார் ஸ்கேன் சென்டரில் வேலை செய்து வந்ததும் , இவர் ஸ்கேன் எடுக்க வந்த அப்பெண்ணிடம் பாலியல் அத்து மீறியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த ராஜமங்கலம் போலீசார் ஜில்கவினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தள்ளுவண்டி டிபன் கடைக்காரரை கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போன் பறித்துச் சென்ற 2 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது

சென்னை வில்லிவாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் விஜய் ( வயது 50 ) என்பவர் இராஜமங்கலம் மெயின்ரோடு கால்நடை மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் டீ மற்றும் டிபன் கடை நடத்தி வருகிறார்.

இவர் கடந்த 4 ம் தேதி இரவு கடையில் வியாபாரம் முடித்து வீட்டிற்கு கிளம்பும் போது அவரது கடைக்கு வந்த தெரிந்த நபர்களான ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் விஜயிடம் பணம் கொடு என மிரட்டினர். அதற்கு விஜய் தன்னிடம் பணம் இல்லை என கூறிய போது,  2 நபர்களும் விஜயை கையால் தாக்கி, அதில் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி கல்லாப்பெட்டியில் வைத்திருந்த ரூ.1,300 பணம் மற்றும் அருகிலிருந்த அவரது செல்போனை எடுத்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றனர்.

இது குறித்து விஜய் இராஜமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இராஜமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் ( வயது 27 ) மற்றும் பாஸ்கர் ( வயது 33 ) ஆகிய 2 நபர்களை கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து குற்றச்செயலுக்கு பயன்படுத்திய 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் ஜெயக்குமார் மற்றும் பாஸ்கர் ஆகியோர் இராஜமங்கலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளிகள் என்பதும், ஜெயக்குமார் மீது ஏற்கனவே கொலை முயற்சி , திருட்டு உள்ளிட்ட 8 குற்ற வழக்குகளும் பாஸ்கர் மீது கொலை முயற்சி உள்பட 2 குற்ற வழக்குகளும் உள்ளது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைப்பு செய்திகள்

சென்னை டூ ஐதராபாத் இனி பயண நேரம் வெறும் 3 மணி நேரம் தான்! முதற்கட்ட பணிகள் எங்கு தெரியுமா?
சென்னை டூ ஐதராபாத் இனி பயண நேரம் வெறும் 3 மணி நேரம் தான்! முதற்கட்ட பணிகள் எங்கு தெரியுமா?
பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன சூப்பர் வைசர் கைது
பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் நிறுவன சூப்பர் வைசர் கைது
" இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் வந்த வினை " சிறுமியை ஏமாற்றி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட வாலிபர்
TN Weather Update: தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
Minister Nirmal Kumar: “குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
“குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இன்றும் முயற்சி“ - அமைச்சர் நிர்மல் குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்கம்: விடிய விடிய அரசாணை... மத்திய அரசுக்கு ‘ரெட் கார்ப்பெட்’ விரித்ததா தமிழக அரசு? அன்புமணி ராமதாஸ் அதிரடி கேள்வி!
TATA Sierra EV: லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
லைஃப்டைம் பேட்டரி வாரண்ட்டி; ஒரே சார்ஜில் 665 கிமீ ரேஞ்ச்- அறிமுகமான டாடா சியரா இவி.. விலை எவ்வளவு?
M. R. Vijayabhaskar : அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
அதிமுகவில் இருந்து விலகியது ஏன்.? இது தான் காரணம்- எம்.ஆர்.விஜயபாஸ்கர் உருக்கம்
Gold Silver Rate June 30th: காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி.. பிற்பகலில் அதிர்ச்சி.! திடீரென உயர்ந்த தங்கம் விலை; இப்போ எவ்வளவு தெரியுமா.?
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
Kerala Bumper Lottery: கேரளா மான்சூன் பம்பர் லாட்டரி; முதல் பரிசு 10,00,00,000 ரூபாய்- இவ்ளோ பரிசுகளா? டிக்கெட் விலை, வரி விவரம்
OnePlus N6: அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
அடேங்கப்பா.! 8000 mAh பேட்டரி; DSLR போன்ற கேமரா; அடிச்சுத் தூக்கும் ஒன்பிளஸ் N6; விலையும் கம்மிதான்.?
Embed widget