மேலும் அறிய

சென்னையில் திடீரென்று தரை இறங்கிய விமானம்; இறுதியில் நடந்த சோகம்

பிரசவ வலி ஏற்பட்டதால் சென்னை விமானநிலையத்தில் விமானம் அவசரமாக தரையிறங்கியது.

துருக்கி நாட்டிலிருந்து மலேசியாவிற்கு 326 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த விமானத்தில் ஒரு பெண் பயணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதால் விமானம் சென்னை விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. குழந்தை இறந்து பிறந்ததால், அந்த பெண்ணை சிகிச்சைக்காக சென்னை தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
துருக்கி நாட்டின் இஸ்தான்புல் நகரில் இருந்து, துருக்கிஸ்  ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் ரக (B77W) TK 60 என்ற பயணிகள்  விமானம், இஸ்தான்புல் விமானநிலையத்திலிருந்து மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூருக்கு நேற்று அதிகாலை 3:20 மணிக்கு புறப்பட்டது. விமானத்தில் 326 பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்தனர்.

சென்னையில் திடீரென்று தரை இறங்கிய விமானம்; இறுதியில் நடந்த சோகம்
 
இந்த விமானம் மதியம் சென்னை வான்வழி வழியாக கடந்து கொண்டிருந்தபோது, அந்த விமானத்தில் பயணம் செய்த ஒரு பெண், பிரசவ வலியால் அவதிப்பட்டார். இதை அடுத்து விமான கேப்டன், உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையோடு தொடர்பு கொண்டு, மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். 
 
இதை அடுத்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து, அவர்கள் அனுமதியுடன், இந்த விமானம் மதியம் 1:50  மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. 
 
உடனடியாக சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினர் விமானத்துக்குள் ஏறி, அந்த பெண்ணை  பரிசோதித்த போது, அந்த பெண்ணுக்கு  குறை பிரசவம் ஏற்பட்டு, குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதை அடுத்து உடனடியாக சென்னை விமான நிலைய அதிகாரிகள், சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகளோடு தொடர்பு கொண்டனர். அந்த பெண்ணுக்கும் அவருடன் வந்த  ஒருவருக்கும் மட்டும் அவசரகால மருத்துவ விசா அளித்தனர்.


அந்தப் பெண்ணையும் அவருக்கு உதவி செய்யக்கூடிய ஒருவரையும் விமானத்திலிருந்து இறக்கி, சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண்ணுக்கு இறந்த நிலையில் பிறந்த சிசுவின் உடலை விமானத்தில் இருந்து கீழே இறக்க அதிகாரிகள் அனுமதி மறுத்து விட்டனர். இதை அடுத்து அவசரகால மருத்துவ விசா கொடுக்கப்பட்ட இரண்டு பேரை தவிர மீதி 324 பயணிகள் மற்றும் அந்த பிறந்து இறந்த சிசுவின் உடலுடன் துருக்கீஸ்  ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் இருந்து மீண்டும் மலேசியா நாட்டு தலைநகர் கோலாலம்பூர் புறப்பட்டது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
Thrissur ATM Theft: எஸ்பிஐ ஏடிஎம்தான் குறி; உதவிய கூகுள்- ஹரியானா கொள்ளையர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்!
6G Network: இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
இந்தியாவில் 6G நெட்வொர்க்: உலகிற்கே முன்னோடியாக இந்தியா திகழப்போகிறது - தொலைத்தொடர்பு அமைச்சர்
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
கீழடிக்கு மற்றொரு மகுடம்... சூப்பரான சுற்றுலா தளமாக தேர்வு.. உலகமே வியந்து பார்க்குது!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Breaking News LIVE 27th Sep 2024:டெல்லியில் சோனியா காந்தியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!
Job Fair: கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
கள்ளக்குறிச்சியில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்... விவரம் உள்ளே
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
Embed widget