மேலும் அறிய

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?

" பல ஆண்டுகளாக இந்த சேவை செய்து வருகிறோம். காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வாறு செய்துவிட்டார்கள் என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் ஓவியர்'

பங்குனி உற்சவம்
 
உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் பங்குனி உற்சவம் நடைபெற்று வருகிறது. ஏகாம்பரநாதர் கோவிலில் பல்வேறு உற்சவங்கள் நடைபெற்றாலும், பங்குனி உற்சவம் என்பது மிக முக்கிய உற்சவமாக கருதப்படுகிறது. சுவாமி பல்வேறு வாகனங்களில், தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் வீதி உலா வருவது வழக்கம். காஞ்சிபுரத்தில் நடைபெறும் முக்கிய திருவிழா என்பதால், பல்வேறு தரப்பை சேர்ந்த மக்கள் இந்த திருவிழாவிற்கு தங்களால், முடிந்த பல்வேறு வகைகளில் உதவி செய்து வருவது வழக்கமாக உள்ளது. 

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?
 
" சாக்பீஸ் ஓவியம் "
 
அந்த வகையில், காஞ்சிபுரம் பகுதி சேர்ந்த சகோதரர்களான டில்லி பாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவரும், கடந்த 2008 ஆண்டு முதல் காஞ்சிபுரம்  ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பிரம்மோற்சவத்தின் போது தினம்தோறும் நடைபெறும் உற்சவத்தை, கரும்பலகையில் சாக்பீஸ் கொண்டு ஓவியமாக வரைந்து, ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள ரிஷிகோபுரம் நுழைவாயிலில், வைப்பது வழக்கம் இந்த நிலையில் இந்த வருடம் அவ்வாறு வைக்கப்பட்ட ஓவியத்தை நேற்று அகற்றியதாக டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகிய இருவர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர்.

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?
 
இவ்வாறு இவர்கள் வரையும் ஓவியம் உள்ளூரில் மிகப் பிரபலம், அதேபோல் சமூக வலைதளத்தில், இக்கால இளைஞர்கள் அந்த புகைப்படத்தை பகிர்ந்து, கடந்த சில ஆண்டுகளாகவே, தொடர்ந்து ஆதரவளித்து வருகின்றனர். இதற்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று கூறலாம், அவ்வாறு பிரபலம் அடைந்த ஓவியம் தற்பொழுது அகற்றப்பட்டு இருப்பது , ஓவியம் ரசிகர்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?
 
"எங்களுக்கு அனுமதியும் கொடுத்திருந்தனர்"
 
இதுகுறித்து டில்லி பாபு நம்மிடம் கூறுகையில், “கடந்த 2008 ஆம் ஆண்டு முதலே நாங்கள் இந்த ஓவியத்தை வரைந்து வருகிறோம். இந்த ஓவியத்தை கோயிலுக்கு வரும் பொதுமக்களும், வெளிநாட்டு, சேவாத்திரிகளும் கண்டு மகிழ்வார்கள். எங்களின் இந்த சேவையை பாராட்டி தமிழக அரசு, கடந்த 2017 ஆம் ஆண்டு கலைவளர்மணி விருது வழங்கியுள்ளது. மேலும் இதற்கு முன் இருந்த இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அவர்களும், மற்றும் செயல் அலுவலர்கள் ஆகியோர் இதற்கு அனுமதி கொடுத்திருந்தார்கள்.
 

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?
 
உள்நோக்கத்துடன் எங்களை
 
இந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது நடைபெற்று வரும் பங்குனி பிரம்மோற்சவத்தில் வரைந்து வைத்த சாக்பீஸ் ஓவியங்களையும் எங்களுக்கு எந்தவித அறிவிப்பும் செய்யாமல் செயல் அலுவலர் முத்துசாமியும் மற்றும் அறங்காவலர் குழுவும் சேர்ந்து ஓவியப் பலகையை, நேற்று காலை  பலகையை எடுத்து வைத்துக் கொண்டனர் என குற்றச்சாட்டை முன் வைக்கிறார் டில்லிபாபு. இதுகுறித்து செயல் அலுவலரிடம் நாங்கள் விளக்கம் கேட்க முயற்சி செய்த பொழுதும் எங்களுடைய அலைபேசி எடுக்காமல் தவிர்ப்பதாகவும், இதற்கு முக்கிய காரணமாக, இந்த கோவிலில் நடைபெறும் முறைகேடுகள் குறித்து வழக்குகள் கொடுத்தல் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு அளிப்பது உள்ளிட்ட சமூக பொறுப்பு செயல்களிலும் தாங்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால், காழ்புணர்ச்சியில் உள்நோக்கத்துடன் எங்களை கோவில் சேவை செய்யவிடாமல், தடுத்து எங்கள் சொந்த செலவில் நானும் என் தம்பியும் கடினப்பட்டு சேவையாக வரைந்து வைத்த ஓவியங்களை அழித்ததோடு போர்டுகளை உடைத்து சேதப்படுத்தி எடுத்துச் சென்று விட்டனர்.

பங்குனி உற்சவத்தை கலக்கிய சாக்பீஸ் ஓவியம் திடீர் மாயம் ? - ஏகாம்பரநாதர் கோவிலில் என்ன நடந்தது?
 
ஆன்லைன் மூலமாக புகார்
 
இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆன்லைன் மூலமாக இந்து சமய அறநிலை துறை ஆணையர் மற்றும் இணை ஆணையர் ஆகியோருக்கும், சிவக்காஞ்சி காவல் ஆய்வாளருக்கும்புகார் அளித்திருப்பதாகவும் தெரிவிக்கிறார் டில்லிபாபு. இது தொடர்பாக ஏபிபி நாடு சார்பில் விளக்கம் கேட்க, செயல் அலுவலர் தொலைபேசி எண்ணுக்கு பலமுறை முயற்சி செய்தும் தொலைபேசி எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ABP Premium

வீடியோ

ADMK General Council Meeting Food |’’மட்டன் பிரியாணி, சிக்கன் 65..EPS-ன் அறுசுவை விருந்து
Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK STALIN: எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
எந்த ஷா வந்தாலென்ன? டெல்லி பாதுஷாவே வந்தாலும் தமிழ்நாடு Out of Control தான்!..! ஸ்டாலின் எச்சரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5000 கொடுங்க.! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கோரிக்கை
Trump Deadline to Zelensky: தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
தண்ணி காட்டும் ஜெலன்ஸ்கி; கிறிஸ்துமஸ் வரை கெடு விதித்த ட்ரம்ப் - என்ன நடக்கப் போகுதோ.?!
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
அன்புமணியா.? எல்.கே.சுதீஷா.? காலியாகும் மாநிலங்களவை பதவி- இபிஎஸ் எடுக்கப்போகும் முடிவு என்ன.?
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ரூ 750 மதிப்பிலான பொங்கல் பரிசு தொகுப்பு .! பொதுமக்களுக்கு குஷியான அறிவிப்பு
ADMK general committee meeting: அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
அதிமுக தான் கூட்டணிக்கு தலைமை... புதிய கட்சிகளை சேர்க்க இபிஎஸ்க்கு அதிகாரம்- 16 தீர்மானங்கள் இதோ
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
New Kia Seltos: லாஸ்ட் பால்ல சிக்ஸ்.. அப்டேடட், அப்க்ரேடட் கியா செல்டோஸ் அறிமுகம் - விலை எவ்ளோ?
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
படிப்பிற்குப் பணம் ஒரு தடையல்ல! பிரதம மந்திரி 'யாசஸ்வி' கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே கடைசி சான்ஸ் !
Embed widget