மேலும் அறிய

சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: 27,600 கோடியில் ECR கடல்வழி மேம்பாலம்! விரைவில் தொடக்கம்

Ennore- Poonjeri Sea Bridge: எண்ணூர் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை 27,600 கோடி ரூபாயில், 92 கிலோமீட்டர் தூரத்திற்கு கடல் மார்க்கமாக இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், 27,600 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடல்வழி மேம்பாலம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

போக்குவரத்து நெரிசலில் தலைநகரம் 

தமிழ்நாட்டின் தலைநகரமாக இருக்கக்கூடிய சென்னை, போக்குவரத்து நெரிசல்கள் நிறைந்த நகரமாக இருந்து வருகிறது. இன்றைய சூழலிலேயே போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் போது, எதிர்காலத்தில் இதைவிட அதிகமாகும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க மற்றும் எதிர்கால போக்குவரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னை எல்லை சாலை திட்டம் - Chennai Peripheral Ring Road (CPRR) 

சென்னையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை சென்னை எல்லைச்சாலை திட்டப் பணிகள் துவங்கப்பட்டு நடைபெற்ற வருகின்றன. இந்த சென்னை எல்லைச்சாலை திட்டம் மூலம், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைக்கும் வகையில் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சென்னை எல்லைச்சாலை திட்டத்தின் கீழ், மாமல்லபுரம், சிங்கப்பெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், தச்சூர், தண்டலம் மற்றும் எண்ணூர் துறைமுகம் ஆகிய முக்கிய இடங்கள் இணைக்கப்பட உள்ளன. இது இந்தியாவில் மிக முக்கிய சாலை திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. 

கடல்வழி மேம்பாலம் திட்டம் (ECR Sea Flyover)

இந்தநிலையில் செங்கல்பட்டு மற்றும் சென்னை மாவட்டத்தை இணைக்கும் வகையில், எண்ணூர் துறைமுகம் முதல் மகாபலிபுரம் பூஞ்சேரி வரை 92 கிலோமீட்டர் தூரத்திற்கு, கடல்வழிச்சாலை அமைக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

எண்ணூர் முதல் பூஞ்சேரி வரை, கடல் வழி சாலை அமைப்பதற்கான சாத்திய கூறு அறிக்கையை தயாரிக்க, 3.80 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தோராயமாக இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக, 27 ஆயிரத்து 600 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சாலைக்கு இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் என பெயரிடப்பட்டுள்ளது.

பணிகள் நடைபெறுவது எப்படி ?

மூன்று கட்டமாக இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக 5400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஒன்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மூன்றாவது கட்டமாக 13 ஆயிரத்து இருநூறு கோடி ரூபாய் மதிப்பிற்கு செயல்படுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன ? Key Features Of ECR Sea Bridge 

இந்த திட்டம் கடல் வழிபாலமாக அமைக்கப்பட உள்ளதால், சுற்றுச்சூழலுக்கு மற்றும் கடல் வளம் பாதிக்காத வகையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மேம்பாலம் அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் செயல்படுத்தும் போது கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெறப்பட உள்ளது. 

ஏற்கனவே மும்பை மற்றும் பல்வேறு நாடுகளில் உள்ள கடல்வழி மேம்பாலத்தை முன்னுதாரணமாக எடுத்து, இ.சி.ஆர் கடல்வழி மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால் சரக்கு கப்பல் போக்குவரத்து அதிகரிப்பதுடன், தொழில் வளத்தில் மிகப்பெரிய புரட்சி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் பெரும் அளவில் போக்குவரத்து நெரிசல் குறையும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget