![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
புற்றுநோய் கண்டறிய விழிப்புணர்வு வாகனம்.. மாவட்ட ஆட்சியர் சொல்லும் தகவலை கேளுங்க..
செவிலியர்கள் புற்றுநோயை கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்து பதாகைகளை ஏந்தியவாறு செவிலியர்கள் அப்பகுதி முழுவதும் பேரணியாக சென்றனர்.
![புற்றுநோய் கண்டறிய விழிப்புணர்வு வாகனம்.. மாவட்ட ஆட்சியர் சொல்லும் தகவலை கேளுங்க.. District Collector Kalachelvi Mohan inaugurated the cancer awareness campaign held on behalf of the cancer hospital புற்றுநோய் கண்டறிய விழிப்புணர்வு வாகனம்.. மாவட்ட ஆட்சியர் சொல்லும் தகவலை கேளுங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/98f905f0947e62b0a78ce49cebfc98241699029055771113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
![புற்றுநோய் கண்டறிய விழிப்புணர்வு வாகனம்.. மாவட்ட ஆட்சியர் சொல்லும் தகவலை கேளுங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/03/eba877364877415ed7293643659b9d661699028911114113_original.jpg)
அவ்வாறு நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், 2013-ஆம் ஆண்டு வரையில், 2,39,811 நபர்களுக்கு PAP SMEAR பரிசோதனைகள் செய்யப்பட்டு, 3377 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப்பட்டு, உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. மேலும், 2522 நபர்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் அல்லது புற்றுநோயாக இருக்கலாம் என்ற ஐயம் உள்ளதென தெரிய வந்து, அந்த நபர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
PAP SMEAR பரிசோதனைகள்
முகாம் பணிகளுக்கென பயன்படுத்தப்பட்டு வந்த இந்த நிலையத்தைச் சார்ந்த இரு ஊர்திகள் 2010ம் ஆண்டு கழிவு நீக்கம் செய்யப்பட்டதனால், முகாம் பணிகளுக்கான காஞ்சிபுரம் நகரத்திற்கு வெளியே உள்ள மருத்துவமனைகளில் முகாம் பணிக்குச் செல்ல இயலாத நிலை ஏற்பட்டது. எனவே, 2013 ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் மட்டும் தினசரி முகாம் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. அவ்வாறு நடத்தப்பட்ட முகாம்கள் மூலம், 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில், 37603 நபர்களுக்கு PAP SMEAR பரிசோதனைகள் செய்யப்பட்டு, 1260 நபர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளதென உறுதி செய்யப்பட்டு, உரிய நபர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தற்போது, இந்நிலையத்திற்கென, திருப்பெரும்புதூரில் செயல்பட்டு வரும், இண்டியா யமஹா மோட்டார்ஸ் லிமிடட் நிறுவனத்தின் மூலம் அவசர ஊர்தி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தினை உபயோகப்படுத்தி, இம்முகாம் பணிகளை, மீண்டும் காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் தடையின்றி சிறப்பாக நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)