மேலும் அறிய

Cyclone Michaung: திருவொற்றியூரை சூழ்ந்த கச்சா எண்ணெய் கழிவு! உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழும் மக்கள் - தீர்வு எப்போது?

சென்னையில் அதிகப்படியான சென்னைவாசிகள் வசிக்கும் பகுதியான வட சென்னையின் முக்கிய இடமாக உள்ள திருவற்றியூரின் நிலை கச்சா எண்ணெயின் முற்றிலும் அபாயம் சூழ்ந்ததாகவே உள்ளது. 

ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வீடுகள் தொடங்கி, டீக்கடைகள் வணிக வளாகங்கள் என அனைத்தும் மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த வட தமிழ்நாடும் நாசமாகியுள்ளதை பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை முழுவதுமாக ஸ்தம்பித்துவிட்டது. இதில் ஒட்டுமொத்த ஊடகங்களும் மத்திய சென்னையைத் தான் ஃபோகஸ் செய்து வந்தது.

திருவொற்றியூரில் கச்சா எண்ணெய்:

ஆனால் வடசென்னை குறித்தான செய்திகள் இன்று முதல் அதிகளவில் வெளிவரத்தொடங்கியது. ஒட்டுமொத்த சென்னையில் அதிகப்படியான சென்னைவாசிகள் வசிக்கும் பகுதியான வட சென்னையின் முக்கிய இடமாக உள்ள திருவற்றியூரின் நிலை முற்றிலும் அபாயம் சூழ்ந்ததாகவே உள்ளது. 

மிக்ஜாம் புயலால்  திருவொற்றியூரில் மழை நீரில் கச்சா எண்ணெய் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் தங்களது உயிரினை கையில் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நொடியையும் கழித்து வருகின்றனர். புயல் சென்னையைக் கடந்த பின்னர், புழல் ஏரி கொள்ளளவு முழுவதும் நிரம்பியது. ஏரி நிரம்பி வழிந்ததால் உபரி நீரானது திறந்து விடப்பட்டு, இந்த உபரி நீரானது கொசஸ்தலை ஆற்று வழியாக எண்ணூர் முகத்துவாரத்தை அடைந்து கடலில் கலக்கும். 

குடியிருப்புகளில் வெள்ளம்:

ஆனால் புயலின் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டதால் எண்ணூர் முகத்துவாரம் மட்டும் இல்லாமல் சென்னை கடற்கரையில் உள்ள மூன்று முகத்துவாரங்களில் இருந்து தண்ணீரை  கடல் உள்வாங்கவில்லை. இதனால் கொசஸ்தலை ஆற்றில் நிரம்பி வழிந்த தண்ணீர் திருவொற்றியூர், மணலி, சடையன்குப்பம் உள்ளிட்ட இடங்களில் வழிந்தோடியது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. திருவொற்றியூரில் பல்வேறு எண்ணெய் நிறுவனங்கள் இயங்கி வருவதால், ஆற்றிலிருந்து வெளிவந்த கச்சா எண்ணெய் கழிவுகள் மழைநீரில் கலந்து குடியிருப்புகளில் புகுந்ததால் மக்கள் அச்சத்திற்கு ஆளாகினர். குறிப்பாக வீட்டின் அனைத்து இடங்களிலும் கச்சா எண்ணெய் கழிவுகள் படிந்துள்ளதால் மக்கள் வீட்டில் சமைக்கக் கூட முடியாமல் அச்சத்தில் உள்ளனர். திருவொற்றியூரின் ஒரு வீட்டில் கச்சா எண்ணெய் காரணமாக தீ விபத்து ஏற்பட்டால் ஒட்டுமொத்த திருவொற்றியூருமே தீக்கிரையாகிவிடுமோ என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 

இது மட்டும் இல்லாமல் வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்களை கச்சா எண்ணெய் கழிவுகள் பரவியுள்ளது. தண்ணீரில் கலந்த கச்சா என்னை கழிவுகள் காரணமாக ஒரு வித எரிபொருள் வாசனை திருவெற்றியூர் பகுதி முழுவதும் வீசி வருவதால் சுவாச பிரச்சனை ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மழை நின்று மூன்று நாட்கள் ஆகியும் மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மழையால் மக்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் கோளாறுகளை கண்டறிய மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என்றும்,  திருவொற்றியூர் பகுதி முழுவதும் படர்ந்துள்ள எண்ணெய் கழிவுகள் முறையாக அகற்றவேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
பிரதமரின் முதன்மை செயலாளராக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நியமனம்
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
இரவு நேரத்தில் தெரியாத பெண்ணுக்கு மெசேஜ்! ஜெயிலில் போட்ட நீதிமன்றம்! டைம் என்னன்னு தெரிஞ்சிக்கோங்க!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
Embed widget