மேலும் அறிய

கடலூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - ஆபத்தை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்கள்

’’பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் இலவசம் என்பதால் பெரும்பாலன மாணவ மாணவிகள் அரசு பேருந்தை மட்டுமே நம்பி வருகின்றனர்’’

கொரோனா பரவல் குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிக்கூடங்கள் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒன்றாம் தேதி முதல் 469 பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த சூழ்நிலையில் பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்படதாபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுள்ளது. இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 683 ஊராட்சிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பபட்ட கிராமங்களில் இருந்து சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் அரசு பேருந்து மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

கடலூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - ஆபத்தை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்கள்
 
இந்த நிலையில் பெரும்பாலான மாணவ மாணவிகள் மாவட்ட தலைநகர் மற்றும் நகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். சுமார் 20 முதல் 50 கிலோமீட்டர் பேருந்தில் பயணம் மேற்கொண்டு பள்ளிக்கு வருகை தருகிறார்கள். இந்த நிலையில் கடலூரில் பள்ளி முடிந்த பிறக்கு கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் வீட்டிற்கு செல்ல ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் அரசு பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். மேலும் சில நேரங்களில் ஒரு சில ஊர்களுக்கு மிக குறைவான பேருந்து மட்டுமே இயக்கபடுவதால் ஒரே பேருந்துகளில் மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் முந்தி அடித்து கொண்டு பேருந்தில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடலூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - ஆபத்தை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்கள்
 
குறிப்பாக பள்ளி மாணவ மாணவிகள் அரசு பேருந்தில் இலவசம் என்பதால் பெரும்பாலன மாணவ மாணவிகள் அரசு பேருந்தை மட்டுமே நம்பி வருகின்றனர், இந்த நிலையில் மகளிர்களுக்கும் நகர பேருந்துகளில் இலவசம் என்பதால் தற்போது பேருந்துகளில் அதிகளவு மக்கள் கூட்டம் கூடுகிறது.  இதே போல் விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி பேருந்து நிலையத்தில் மாணவ மாணவிகள் காலை மாலை என இரு நேரம்ங்களில் பேருந்துக்காக காத்திருகின்றர். மேலும் படியில் தொங்கியபடி பல மாணவர்கள் பணயம் செல்வது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நிலையாகவும் உள்ளது.
 

கடலூரில் காற்றில் பறந்த கொரோனா கட்டுப்பாடுகள் - ஆபத்தை அறியாமல் பயணம் செய்யும் மாணவர்கள்
 
இதில் மேலும் இனி அடுத்து 6 முதல் 8 வரை பள்ளிகள் திறக்கபடவுள்ளதால் கடலூர் மாவட்டத்தில் கூட்ட நெரிசலை குறைக்க பள்ளி மாணவ மாணவிகளுக்கு என கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து நிர்வாகிகளிடம் தகவல் தெரிவித்த பொழுது அவர்கள் கடலூர் மாவட்டத்தில் மேலும் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட உள்ளது மேலும் கடலூரில் இருந்து சிதம்பரம், நெய்வேலி போன்ற ஊர்களுக்கு செல்லும் விரைவு பேருந்துகளிலும் மாணவர்களை ஏற்றிசெல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். ஏற்கனவே கடலூர் மாவட்டத்தில் ஐந்து ஆசிரியைகள் மற்றும் ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
திண்ணையில் தூங்கிய 56 வயது பெண்ணுக்கு நேர்ந்த சோகம் !! சிசிடிவியில் சிக்கிய கொடூரன்
Chennai Power Cut: சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
சென்னைல ஜூலை 25-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல மின்சாரத் தடை ஏற்படப் போகுதுன்னு தெரிஞ்சுக்கோங்க
" நான் ஒருத்தர கொலை பண்ணிட்டேன் " நள்ளிரவில் காவல் நிலையத்தில் சரணடைந்த நபர்
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!
மக்களே ரெடியா இருங்க! சென்னை, காஞ்சி, செங்கல்பட்டில் இன்று மாலை செம்ம ட்விஸ்ட்... வானிலை மையம் திடீர் எச்சரிக்கை!

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
CJP: ''இதான் ஆரம்பம்; இன்னும் 2 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
CJP: ''இதான் ஆரம்பம்; இன்னும் 2 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
MK STALIN : “Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
“Sorry சொன்னால் போதுமா?” என கேட்டீங்க.. நீங்க எங்கே ஒளிந்திருக்கீங்க.? CM விஜய்யை கேள்வி கேட்கும் ஸ்டாலின்
Actress Jyothika : அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
அமைச்சரே உடனே ராஜினாமா பண்ணுங்க.! தைரியமாக இறங்கி அடித்த நடிகை ஜோதிகா
Embed widget