மேலும் அறிய

Chess Olympiad : இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா?

நாளை முதல் செங்கல்பட்டு மகாபலிபுரம் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை செய்து செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

இந்திய வரலாற்றில் முதல் முறையாக 187 நாடுகள் பங்கேற்கின்ற 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி பகுதியில் உள்ள ஃபோர் பாயிண்ட் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற உள்ளது. 

Chess Olympiad :  இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா?

மாமல்லபுரம் பூஞ்சேரில்  நடைபெறும் இந்த வரலாற்று சிறப்புமிக்க 44வது சத்வதேச செஸ்  ஒலிம்பியாட் 2022 போட்டிக்காக சுமார் 52 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சர்வதேச தரத்திலான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது ஏற்கனவே 22 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் உள்ள அரங்கில் 200 வீரர்களும் தற்போது அமைக்கப்பட்டு வரும் அரங்கில் 500 வீரர்களும் ஒரே நாளில் 700 வீரர்கள் பங்கு பெற்று விளையாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ஜூலை 28ம் தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 227 அணிகளைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில்  மாமல்லபுரம் பூஞ்சேரியில் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 நடைபெறுவதை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக மாமல்லபுரம் பகுதிகளில் நாளை முதல் (12.07.2022) ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத்  உத்தரவிட்டுள்ளார்.
Chess Olympiad :  இன்று முதல் ட்ரோன் பறக்க தடை.. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு.. ஏன் தெரியுமா?

முதலமைச்சர்

உலகம் முழுவதும் இருந்து 2,500 விளையாட்டு வீரர்கள், பார்வையாளர்கள் மாமல்லபுரத்துக்கு வருகை தர உள்ளனர். போட்டி நடக்கும் அரங்கம், பாதுகாப்பு, கார் நிறுத்தம், சாலை வசதி, போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்து நேற்று தலைமை செயலர் இறையன்பு ஆய்வுகள் மேற்கொண்டார்.

இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக மாமல்லபுரத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். அவர் போட்டி நடைபெறும் அரங்கம் மற்றும் வளாகத்தை பார்வையிட உள்ளார். மு.க.ஸ்டாலின் வருகைக்கு முன்னதாக அனைத்து வேலைகளையும் முடிக்கும் வகையில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ED Raid in Tasmac | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர! | செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல்! அமலாக்கத்துறை பரபர!PTR vs Rajdeep Sardesai | ‘’இந்தியை பார்த்து பயமா?’’ வம்பிழுத்த ராஜ்தீப் சர்தேசாய்! கதறவிட்ட PTRSengottaiyan vs EPS : EPS vs செங்கோட்டையன் வலுக்கும் உட்கட்சி மோதல்? குழப்பத்தில் அதிமுகவினர்!Soundarya Death Mystery | ”நடிகை சௌந்தர்யா கொலை?ரஜினியின் நண்பர் காரணமா?” பகீர் கிளப்பும் பின்னணி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் ஊழல்.. ED பரபர தகவல்!
செந்தில் பாலாஜிக்கு குறி? டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு.. ED பரபர தகவல்!
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
Jayakumar: இபிஎஸ்க்கு ரகுபதி கொடுத்த ரிப்ளை! மானம், வெட்கம், ரோசம் இருக்கிறதா? -  கொந்தளிக்கும் ஜெயக்குமார்
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
திமுக போட்ட ஸ்கெட்ச்! தமிழ்நாட்டுடன் கைகோர்க்கும் தெலங்கானா! பச்சைக்கொடி காட்டிய சி.எம்.!
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
மட்டன் சமைத்து தராத மனைவி! கணவர் செய்த கொடூர செயல்! தெலங்கானாவில் பரபரப்பு
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
Rupee Symbol: தமிழ்நாடு பட்ஜெட் - ₹-க்கு பதில் ‘ரூ’ இலட்ச்சினை மாற்றம்! - வடிவமைப்பாளர் என்ன சொல்கிறார்?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
சுனிதா வில்லியம்ஸ்க்கு மீண்டும் சிக்கல்: பூமி திரும்புவதில் கடைசியில் ஏற்பட்ட சிக்கல் என்ன?
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
Bank Holidays In March 2025: மக்களே! இது மார்ச் மாதம்! வங்கி வேலையை முடிச்சிக்கோங்க! லீவு லிஸ்ட்டை வெளியிட்ட ஆர்.பி.ஐ!
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
TN Budget: திமுக அரசின் கடைசி பட்ஜெட்..! தமிழர்களுக்கே 75% வேலைவாய்ப்பு? சொன்னதை செய்வாரா ஸ்டாலின்?
Embed widget