மேலும் அறிய

சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டது உண்மையா? தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறுவது என்ன?

சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது. இது உண்மையா என்பது குறித்து பார்ப்போம்.

இந்தாண்டு தொடங்கியதில் இருந்தே உலகின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, மத்திய கிழக்கு நாடான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் உலக அளவில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது.

தொடரும் நிலநடுக்கம்:

இரண்டே நாள்களில் ஐந்து நிலநடுக்கம் ஏற்பட்டு கிட்டத்தட்ட 49,000 பேர் இறப்புக்கு காரணமாக அமைந்தது துருக்கி - சிரியா நிலநடுக்கம். இதையடுத்து, இந்தோனேசிய தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவாகியது. அதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் சில பகுதிகளில் கடந்த சில நாள்களில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், சென்னை அண்ணா சாலை அருகே ஓயிட்ஸ் ரோட்டில் இன்று நில அதிர்வு ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. மூன்று மாடி கட்டிடத்தில் அதிர்வு உணரப்பட்டதாகவும் அதனால் அங்கிருந்து ஊழியர்கள், பொது மக்கள் அச்சத்தில் வெளியேறியுள்ளனர். காலை 10 மணி அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியானது.

சென்னையில் நில அதிர்வா?

இதனால், சென்னை ராயப்பேட்டையில் உள்ள சில பகுதிகள் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதை தொடர்ந்து, ஒரு தகவல் பரவியது. அது என்னவென்றால், சென்னையின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெட்ரோ பணிகள் காரணமாக நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல் பரவியது.

இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து, சென்னையில் உண்மையாக நில அதிர்வு உணரப்பட்டதா, அதற்கு காரணம் மெட்ரோ பணிகளா என விசாரிக்க தொடங்கினோம்.

தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் கூறுவது என்ன?

பொதுவாக, இந்தியாவில் நிலநடுக்கமோ நில அதிர்வோ ஏற்படும் பட்சத்தில், அதை கண்காணிக்கும் வகையில் அமைக்கப்பட்ட மத்திய அரசின் நிறுவனம்தான் தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம். இந்தியாவின் எந்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டாலும் அது தொடர்பான தகவல்களை தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையத்தின் மூலம்தான் உறுதி செய்ய வேண்டும்.

இதனால், சென்னை நில அதிர்வு தொடர்பாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் ஏதேனும் தகவல் வெளியிட்டிருக்கிறதா என்பது குறித்து விசாரித்தோம். ஆனால், அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் ட்விட்டர் பக்கத்திலும் இது தொடர்பான எந்த செய்தியும் வெளியிடவில்லை.

சென்னை வானிலை மையம் கூறியது என்ன?

நில அதிர்வு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையமும் தகவல் எதுவும் வெளியிடவில்லை. சென்னையில் நில அதிர்வு ஏற்பட்டால் அங்கு பொருத்தப்பட்டுள்ள ரிக்டர் அளவுகோலில் பதிவாகும். ஆனால், இன்று எந்த விதமான நில அதிர்வும் அங்கு பதிவாகவில்லை என கூறப்படுகிறது.

மெட்ரோ பணிகள் காரணமா?

நில அதிர்வு போன்ற தாக்கத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் காரணம் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Fishermen Arrest: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 10 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படை நடவடிக்கையால் அதிர்ச்சி
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Breaking News LIVE: காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட டெல்லி அமைச்சர் அதிஷிக்கு உடல்நலக் குறைவு
Delhi Water Crisis: தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
தண்ணீர் கொடுக்காத ஹரியானா.. தொடர் உண்ணாவிரதத்தால் டெல்லி அமைச்சர் மருத்துவமனையில் அனுமதி!
T20 World Cup 2024: அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
அரையிறுதியில் இங்கிலாந்தை எதிர்கொள்ளும் இந்தியா.. போட்டி நாளில் 88% மழைக்கு வாய்ப்பு..? என்ன நடக்கும்?
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
IND vs AUS Match Highlights: டி20 உலகக் கோப்பை.. ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..அரையிறுதி வாய்ப்பு உறுதி!
Tamayo Perry: கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
கடித்து குதறிய சுறாக்கள்.. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் நடிகர் உயிரிழப்பு - ரசிகர்கள் இரங்கல்
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
ரூ.50 லட்சம் செலவில் இந்திரா காந்திக்கு சிலை, அரசு விழாவாக அப்துல் கலாம் பிறந்தநாள்- தமிழ் வளர்ச்சித் துறை
Kalki 2898 AD: கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
கல்கி படம் என நினைத்து, வேறு படத்தை ஹவுஸ்புல் ஆக்கிய ரசிகர்கள்.. வேதனையில் பிரபாஸ்!
Embed widget