மேலும் அறிய

சென்னை ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி! ஓட்டுநர் பற்றாக்குறையால் மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை ரயில் கோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சென்னை: சென்னை ரயில் கோட்டத்தில் 123 ஓட்டுனர் காலி பணியிடங்கள் உள்ளதால் மின்சார ரயில்கள் இயக்கம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, எனவே விரைவாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

123 ரயில் ஓட்டுனர் காலி பணியிடங்கள்

சென்னை ரயில் கோட்டத்தில், 123 ஓட்டுனர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்சார ரயில் சேவையும் குறைக்கப்பட்டு உள்ளதால் பயணியர் அவதி அடைந்து வருகின்றனர். சென்னையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, ஆவடி, திருவள்ளூர், அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, வேளச்சேரி தடத்தில், 450க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

50க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவை ரத்து

இவற்றில், தினமும் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். போதிய ரயில்கள் இல்லாததோடு, வழக்கமாக செல்லும் ரயில்களின் சேவையும் அடிக்கடி ரத்து செய்யப்படுகிறது. ரயில் பாதைகள் மற்றும் யார்டு பராமரிப்பு பணி நடப்பதாக கூறி, வாரந்தோறும் 50க்கும் மேற்பட்ட ரயில்களின் சேவையை ரத்து செய்யப்பட்டு வருகிறது. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். போதிய அளவில் மின்சார ரயில்கள் இயக்காததற்கு ரயில் ஓட்டுனர் காலி பணியிடங்களை நிரப்பாததே முக்கிய காரணம். சென்னை கோட்டத்தில், அனுமதிக்கப்பட்டுள்ள ரயில் ஓட்டுனர்களின் எண்ணிக்கை 423. ஆனால், 320 ரயில் ஓட்டுனர்கள் மட்டுமே உள்ளனர்; 123 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன. முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மின்சார ரயில் இயக்குவதில் தாமதம்

இதுகுறித்து ரயில் பயணிகள் கூறியதாவது:

கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், 9 நிமிட இடைவெளியில் ஒரு மின்சார ரயில் இயக்கப்படும். தற்போது, 12 நிமிடங்கள் ஆகிறது. அதுபோல், சென்ட்ரல் - ஆவடி, அரக்கோணம் மற்றும் கும்மிடிப்பூண்டி, சூலுார்பேட்டை தடத்தில் தினமும் 15 முதல் 30 நிமிடங்கள் வரை மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றது.

எனவே, பயணியர் தேவைக்கு ஏற்றார்போல், மின்சார ரயில்களை இயக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். அகில இந்திய லோகோ ஓட்டும் தொழிலாளிகள் சங்கத்தின் செயலர் பாலசந்திரன் கூறுகையில், “சென்னை ரயில் கோட்டத்தில் மட்டும், 123 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓட்டுனர் பற்றாக்குறையை நிர்வகிக்க விடுமுறை மறுப்பு, கூடுதல் ரயில்கள் வேலை வாங்க வேண்டிய சூழல் உள்ளது. கூடுதல் பணி சுமையால் ரயில் ஓட்டுனர்கள் அவதிப்படுகின்றனர். எனவே, புதிய ஓட்டுனர்கள் நியமனம் செய்யும் பணியை ரயில்வே விரைவுப்படுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

விரைவில் ஓட்டுனர் பற்றாக்குறை சரிசெய்யப்படும்

சென்னை ரயில் கோட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், ”ரயில் ஓட்டுனர் பற்றாக்குறையால், மின்சார ரயில் சேவையை இயக்குவதில் பெரிய பாதிப்பு இல்லை. பராமரிப்பு பணியால் சில ரயில்கள் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களில் பணிகள் முடித்து, முழு அளவில் மின்சார ரயில்கள் இயக்கப்படும். அதுபோல், புதியதாக தேர்வு செய்யப்பட்டுள்ள ரயில் ஓட்டுனர்களும் பயிற்சி முடித்து, பணிக்கு வரும்போது, ஓட்டுனர் பற்றாக்குறை சரிசெய்யப்படும்” என தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget