மேலும் அறிய

Crime : சென்னையில் போதை மாத்திரை..! கஞ்சா பறிமுதல்..! ஆன்லைன் மூலம் நடந்த விற்பனையா ?

கஞ்சா, போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது 2000 வலி நிவாரணி மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்

சென்னை தாம்பரத்தில் கஞ்சா, போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இருவர் கைது 2000 வலி நிவாரணி மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா, செல்போன் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா போதை மாத்திரை புழக்கம்

சென்னை ( Chennai News ) : சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் போதை மாத்திரைகளின் புழக்கம் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவப்பொழுது பெரிய அளவில் போதை மாத்திரைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து சம்பந்தப்பட்ட நபர்களை சிறையில் அடைத்தும் வருகின்றனர்.
 
மாத்திரைகளை வாங்க ஆந்திரா சென்ற நபர்
 
அந்தவகையில் சென்னை  குரோம்பேட்டை அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர் (23).இவர் மீது ஏற்கனவே வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் கைதானவர். தற்போது மீண்டும் போதை பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக சங்கர் நகர் ஆய்வாளர் சரவணனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் பாஸ்கரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்த போது, அவரது நண்பரான யோவான் (32), என்பவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கஞ்சா, மற்றும் வலி நிவாரணி மாத்திரைகளை வாங்க ஆந்திரா சென்றுள்ளது தெரியவந்தது. 
 
நாசுக்காக பாலோ செய்த போலீஸ்
 
அதனடிப்படையில் அவரது செல்போன் சிக்னலை வைத்து அவரை போலீசார் கண்காணித்தனர். போலீசார் சென்ட்ரல் ரயில் நிலையம் செல்வதற்குள் யோவான் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி போரூர் ஐயப்பந்தாங்கல் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற போலீசார் அவர் வீட்டிற்கு சென்றதும் அங்கு சோதனையிட்டனர். சோதனையில் வீட்டில் 2000 வலி நிவாரணி மாத்திரைகள், சிரஞ்சி, 1.5 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருந்தது அதனை பறிமுதல் செய்த போலீசார் யோவானை கைது செய்தனர். 
 
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பு
 
மருத்துவரின் முறையான பரிந்துரை சீட்டு இல்லாமல் ஆந்திராவில் இருந்து வலி நிவாரணி மாத்திரை, கஞ்சாவை வாங்கி வந்து அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து வந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு, செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
 
கொரியர் மூலம் மாத்திரைகள் வரவழைக்கப்பட்டதா ? 
 
பெரும்பாலும் இந்த மாத்திரைகளை கொரியர் மூலம் அவர் வர வைத்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு சில முக்கிய ஆவணங்களையும் காவல்துறையினர் கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget