மேலும் அறிய

T Nagar Flyover: இன்னும் 60 நாட்கள் தான்..! தி. நகரில் இனி ஷாப்பிங் ரொம்ப ரொம்ப ஈசி, சென்னை மக்கள் குதூகலம்..!

Chennai T Nagar Flyover: சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் பணிகள், இன்னும் 2 மாதங்களில் நிறைவடையும் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.

T Nagar Bridge: சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வந்தால், போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என நம்பப்படுகிறது.

2 மாதங்களில் தியாகராய நகர் மேம்பாலம் தயார்..!

சென்னையில் கட்டப்பட்டு வரும் புதிய பாலங்கள் எப்போது பயன்பாட்டிற்கு வரும் என, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.எல்.ஏ., மூர்த்தி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, ”தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் அடுத்த இரண்டு மாதத்திற்குள் முடிவடையும். கணேசபுரம் மேம்பாலம் மட்டும் ரயில்வேதுறையின் மீதமுள்ள பணிகளால், இன்னும் ஒரு 3 மாதம் காலம் ஆகும்” என பதிலளித்தார்.

நீட்டிக்கப்படும் தியாகராய நகர் மேம்பாலம்:

தியாகராய நகரில் சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோட் வரை, 1.2 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. 131 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் புதிய மேம்பாலம் பயன்பாட்டிற்கு வரும்போது, அப்பகுதியில் போக்குவரத்து கணிசமாக குறையக்கூடும். அதற்கு ஏற்றார்போல, வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தின் சுமார் 50 மீட்டர்,  ரங்கநாதன் தெரு அருகே இடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு மேம்பாலங்களையும் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம்,  சி.ஐ.டி நகர் முதல் பனகல் பார்க் வரை இரண்டு கிலோமீட்டர் நீளமுள்ள தொடர்ச்சியான மேம்பாலமாக புதிய மேம்பாலம் மாறும். தி.நகரில் கட்டப்பட்டு வரும் இருவழி மேம்பாலத்தில் வழக்கமாக அமைக்கப்படும் கான்கிரீட் மேம்பாலங்கள் போல் இல்லாமல் இரும்பு தூண்கள் இருக்கும். இது மேட்லி சந்திப்பு, ரங்கநாதன் தெரு மற்றும் பனகல் பார்க்கில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகளைக் கொண்டிருக்கும். 

போக்குவரத்து நெரிசலுக்கான தீர்வு

மேம்பாலப் பணிகள் காரணமாக வடக்கு உஸ்மான் சாலை மூடப்பட்டுள்ளதால், பயணிகள் நீண்ட போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். சிஐடி நகர் அண்ணாசாலைக்கு செல்லும் வாகனங்கள் பனகல் பார்க்கில் நடைபாதை பிளாசா வழியாக வெங்கடநாராயண சாலைக்கும், தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, சிஐடி நகர் மெயின் ரோடு வழியாக அண்ணாசாலைக்கும் திருப்பி விடப்படுகின்றன. இதற்கு அதிக போக்குவரத்து நெரிசல்களின் போது 15 நிமிடங்கள் மற்றும் 30 நிமிடங்கள் வரை ஆகும். வாகனங்கள் நடைபாதை பிளாசா மற்றும் வெங்கட்நாராயணா சாலையில் நீண்ட நேரம் சிக்கிக் கொள்கின்றன. அதேநேரம், தற்போது மேற்கொள்ளப்பட உள்ள மேம்பாலம் இணைப்பு மூலமாக, சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோடை அடைய வெறும் 2 நிமிடங்கள் போதும் என கூறப்படுகிறது. மேலும், மவுண்ட் ரோட்டிலிருந்து திநகருக்கு 5 நிமிடங்களில் வரலாம். 

ஷாப்பிங் ஈசி..!

சென்னை மாநகராட்சியின் பிரதான வணிக பகுதியாக தியாகராய நகர் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிய, விழா காலங்களில் தினசரி லட்சம் பேர் குவிகின்றனர். இதனால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை உணர்ந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தான், சிஐடி நகர் தொடங்கி தெற்கு உஸ்மான் ரோட் வரையிலான மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், போக்குவரத்து நெரிசல் குறைவதோடு மக்கள் எளிதாக அலைச்சலின்றி ஷாப்பிங்கிலும் ஈடுபட முடியும் என கருதப்படுகிறது.

4 கி.மீ., நீள மேம்பாலம்:

இதனிடையே, தி.நகரிலிருந்து சிஐடி நகருக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் வாகனங்கள் பயணிக்கின்றன. கடும் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் (பீக் ஹவர்ஸ்) வாகனங்களின் வேகம் அங்கு மணிக்கு 10 கிமீக்கு குறைந்துவிடும். இத்தகைய சூழலில் சி.ஐ.டி நகர் மேம்பாலம் வடக்கு உஸ்மான் சாலையுடன் இணைக்கப்பட்டவுடன், மே மாதத்திற்குள் விவேக் சந்திப்பில் உள்ள வடக்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தையும் ஆற்காடு சாலையின் குறுக்கே உள்ள ரங்கஜபுரம் மேம்பாலத்தையும் இணைக்கும் மற்றொரு திட்டத்தை சென்னை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும். அதன் மூலம் சென்னையின் மிக நீளமான நான்கு கிலோமீட்டர் மேம்பாலம் தியாகராய நகரில் தான் இருக்கும்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!
Madhampatti Rangaraj|”அது என் குழந்தையா DNA TEST எடுக்கணும்” ஜாய்-ஐ சீண்டும் மாதம்பட்டி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget