Chennai Power Cut: சென்னையில ஆகஸ்ட் 28-ம் தேதி எங்கெங்க பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.?
Chennai Power Cut(28-08-2025): சென்னையில், பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை மின் தடை செய்யப்பட உள்ள இடங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், ஆகஸ்ட் 28-ம் தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தாம்பரம்
- சிடிஓ காலனி
- சசி வரதன் நகர்
- எப்சிஐ நகர்
- காசா கிராண்ட்
- குட்வில் நகர்
- மூகாம்பிகை நகர்
- பாரதி நகர்
- ராமகிருஷ்ணா நகர்
ஈஞ்சம்பாக்கம்
- விஜிபி லேஅவுட்
- சீத்தாராம் அவென்யூ
- பெரியார் தெரு
- ஷாலிமார் கார்டன்
- எம்கே ராதா அவென்யூ
- ரேடியண்ட் அவென்யூ
- பெத்தல் நகர் அருகிலுள்ள தெருக்கள் மற்றும் காலனிகளுடன்
தகவல் தொழில்நுட்பப் பாதை
- புதுப்பாக்கம்
- சிறுசேரி
- அனுமன் நகர்
- காரணை கிராமம்
- காசா கிராண்ட்
- எல்&டி ஈடன் பார்க்
ஆவடி
- வெள்ளக்கல்
- வடக்குப்பட்டு
- எஸ்.கொளத்தூர்
- ஈச்சங்காடு
- காந்தி நகர்
- சத்யா நகர்
- எம்.ஜி.ஆர்.நகர்
மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.





















