மேலும் அறிய

அய்யோ கொடுமை.. ஆதரவு இன்றி இருந்த அம்மா, அப்பா எடுத்த முடிவு - சென்னை அருகே சோகம்

பிள்ளைகள் ஆதரவு கிடைக்காமல் பாதுகாப்பின்றி அவதிப்பட்டு வந்த பெற்றோரான வயதான முதியவர் தூக்கில், தொங்கியதை கண்ட மனைவி பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை.

சென்னை (Chennai News): சென்னை ஒட்டியுள்ள கேளம்பாக்கம் அருகே தையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராஜேசிகரின் நகர் எட்டாவது தெருவில் வசித்து வருபவர் சிவலிங்கம் (வயது 66) மற்றும் அவரது மனைவி ராணி (வயது 55). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் முதல் மகன் காஞ்சிபுரத்தில் தொழில் செய்து வருகிறார். இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்கள்  கண்டிகை மற்றும் கேளம்பாக்கம் பகுதிகளில்  காய்கறி, பழம் வியாபாரம் செய்து வருகின்றனர். மகன்கள் மூவரும் மனைவி குழந்தைகளுடன் மூன்று அடுக்கு, 4 அடுக்கு மாடி வீடுகள் கட்டப்பட்டு நல்ல நிலைமையில் வாழ்ந்து வரும் நிலையில்  தன் தாய், தந்தையை யாரும் கவனிக்காமல் அவர்களின் சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு வெளியே அனுப்பியுள்ளனர்.

சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும்

இதில் தற்கொலை செய்து கொண்ட முதியவர் சிவலிங்கம் மற்றும் அவரது மனைவி ராணி ஆகிய இருவரும்  ராஜ வாழ்க்கை வாழ்ந்து வந்த நிலையில் அவர்களிடம் இருந்த சொத்துக்களை மூன்று பிள்ளைகளுக்கும் பிரித்து கொடுத்து விட்டு தற்போது பிள்ளைகள் இருக்கும் அதே இடத்தின் அருகில் குடிசை வீட்டில் வாடகை கொடுத்து வாழ்ந்து வந்துள்ளனர். பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து, ஆளாக்கி அவர்களுக்கு உண்டான சொத்துக்களை பிரித்து கொடுத்துள்ளனர். ஆனால் பிள்ளைகளோ பெற்றோரை கவனிக்காமல் விட்டதால்,  கணவன், மனைவி இருவருக்கும் நீரழிவு குறைபாட்டால், நாளடைவில் மனைவி ராணிக்கு ஒரு கால் பாதம் அழுகி நோய்வாய் பட்டு அவதி பட்டனர்.

ராணி பூச்சி மருந்து சாப்பிட்டு 

இந்நிலையில், முதியவர் சிவலிங்கம் தங்கி இருந்த குடிசை வீட்டில் நேற்று இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று அதிகாலை எழுந்து பார்த்த மனைவி, கணவன் தூக்கில் தொங்கியதை கண்டது அதிர்ச்சி அடைந்த நிலையில், பின்னர், பூச்சி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். நீண்ட நேரம் ஆகியும் முதியவர்கள் வெளியே வராததால் வீட்டருகே சென்று பார்த்தபோது இருவரும் தற்கொலை செய்து கொண்டு இருந்துள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.'

விசாரணை

இதுகுறித்து கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பத் இடத்திற்குச் சென்ற காவல்துறை சடலத்தை மீட்டு செங்கல்பட்டு அரசு உடற்கூறு ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று முதியவர்களின் இறப்பு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது பிள்ளைகளும் தன் மனைவி குழந்தைகளை மட்டும் கவனித்து வருகின்றனர். தாய் தந்தையிடம் உள்ள சொத்துக்களை பிடுங்கிக் கொண்ட பிள்ளைகள் பெற்றோர்களை கவனிப்பதை மறந்து விடுகின்றனர்.


Suicidal Trigger Warning.

வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050+91 44 2464 0060)

தலைப்பு செய்திகள்

திருவான்மியூர் முதல் உத்தண்டி.. கைவிடப்படுகிறதா ரூ.2,100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
திருவான்மியூர் முதல் உத்தண்டி! கைவிடப்படுகிறதா ரூ2100 கோடி ECR மேம்பாலத் திட்டம்? பின்னணி என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மேகதாது விவகாரம் ; மாணிக்கம் தாகூரை சாடிய அன்புமணி ராமதாஸ் !!
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget