மேலும் அறிய

இன்று வசூல் எவ்வளவு ? என் வசூலை நீ ஏன் கேட்க? கொலையில் முடிந்த கைகலப்பு

இரு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையிலான கைகலப்பில் தாக்கியதில் ஒருவர் மரணம் - ஒருவர் கைது.

வசூல் எவ்வளவு என்று கேட்டதற்கு அடிதடி

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா, பூலாங்குறிச்சியைச் சேர்ந்த விஜயகாந்த் ( வயது 33 ) என்பவர் சென்னை எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் தங்கியிருந்து ஷேர் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (28.04.2025) இரவு சவாரி முடித்து கே.கே.நகர் ராஜமன்னார் சாலை, முனுசாமி சாலை சந்திப்பில் அவரது நண்பர்களுடன் சேர்ந்து பேசிக் கொண்டிருந்த போது , விஜயகாந்த் அங்கு ஆட்டோவில் இருந்த அறிமுகமான தங்கம் என்பவரிடம் இன்று ஷேர் ஆட்டோ வசூல் எவ்வளவு என்று கேட்ட போது , தங்கம் என்னுடைய வசூலை நீ ஏன் கேட்க என அவதூறாக பேசியுள்ளார்.

இதனால் இருவருக்குமிடையே நடந்த வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தங்கம் , விஜயகாந்தை கையால் தாக்கி கீழே தள்ளி , காலால் மார்பில் எட்டி உதைத்துள்ளார். காயமடைந்த விஜயகாந்தை அருகிலிருந்தவர்கள் மீட்டு கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஜயகாந்த் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சண்முகம் ( வயது 51 ) என்பவர் R-7 கே.கே நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

R-7 கே.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து , கொலை வழக்கில் தொடர்புடைய  தங்கம் என்பவரை கைது செய்தனர். விசாரணையில் தங்கம் மீது ஏற்கனவே 4 குற்ற வழக்குகள் உள்ளது தெரிய வந்தது. விசாரணைக்குப் பின்னர் தங்கம் இன்று (30.04.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

சம்பள பணம் தராததால் , ஊழியர் செய்த செயல்

சென்னை அண்ணாநகர் 3 - வது அவென்யூ "J" பிளாக் பகுதியில் உள்ள தனியார் கார் ஷோருமில் மேலாளராக சங்கர் ( வயது 30 ) என்பவர் வேலை செய்து வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேலே குறிப்பிட்டுள்ள கார் ஷோருமில் இருந்த Beleno Sigma மாருதி என்ற காரை RTO அலுவலகத்திற்கு பதிவு செய்வதற்கு அனுப்புவதற்காக அண்ணாநகர் 3 - வது அவென்யூ பகுதியில் சாலையில் நிறுத்தி வைத்துள்ளார்.

இந்நிலையில் ஷோருமில் இருந்த மேற்படி காரின் சாவியை எடுத்து 28.04.2025 அன்று காரை யாரோ திருடிச் சென்றது தெரிய வந்தது. இது குறித்து கார் ஷோருமின் மேலாளர் சங்கர், K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

K-4 அண்ணாநகர் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து, மேற்படி கார் திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய சென்னை பெரம்பூர் , அப்புலிங்க வாத்தியார் ரோடு பகுதியை சேர்ந்த ரமேஷ் ( வயது 44 ) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து மேற்படி திருடப்பட்ட Beleno Sigma மாருதி கார் மீட்கப்பட்டு, குற்ற சம்பவத்திற்கு பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணையில் கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் என்பவர் மேற்படி கார் ஷோருமில் முன்பு பணிபுரிந்து வந்ததும் , சம்பள பாக்கி தராத காரணத்தினால் ஷோருமில் இருந்த கார் சாவியை திருடி காரை திருடிச் சென்றது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட எதிரி ரமேஷ் விசாரணைக்குப் பின்னர் , நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
Kilambakkam Railway Station Update: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறப்பு எப்போது? ரயில்வே நிர்வாகம் கொடுத்த அதிகாரப்பூர்வ சர்ப்ரைஸ்!
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!
வேலை தேடுபவர்களுக்கு செம்ம நியூஸ்! சென்னையில் 10000 பேருக்கு அடித்தது ஜாக்பாட்! மிஸ் பண்ணாதீங்க!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
Embed widget