மேலும் அறிய

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் - அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் – இந்திரா நகர் இடையில் பக்கிங்ஹாம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி கஸ்தூரிபாய் – இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்தது. வழக்கில் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2009 ம் ஆண்டு பக்கிங்ஹாம் கால்வாய் தேசிய உள்நாட்டு நீர்வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் நீர்நிலைகளின் அருகில் இருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க ஆயிரத்து 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு காலத்தில் நீர்வழிப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயின் வரலாற்றை விளக்கி, தற்போது அதன் மோசமான நிலைக்கு மாநில அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

தற்போது நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை ஆறு மாதங்களில் வரையறுக்க வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என உத்தரவிட்டனர்.

எல்லையை வரையறுத்த பின், கால்வாயில் அமைந்துள்ள உயர்மட்ட ரயில் தண்டவாளங்களுக்கான தூண்கள், பாலங்களின் தூண்கள் தவிர, மற்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் ஓராண்டில் அகற்ற வேண்டும் எனவும், மேற்கொண்டு எந்த கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கள் மீண்டுமு் முளைக்காதபடி நடவடிககைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கால்வாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை வேறு எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், கால்வாயை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் எதையும் வரன்முறைப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget