மேலும் அறிய

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் - அரசுக்கு கெடு விதித்த உயர்நீதிமன்றம்

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் – இந்திரா நகர் இடையில் பக்கிங்ஹாம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி கஸ்தூரிபாய் – இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்தது. வழக்கில் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2009 ம் ஆண்டு பக்கிங்ஹாம் கால்வாய் தேசிய உள்நாட்டு நீர்வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் நீர்நிலைகளின் அருகில் இருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க ஆயிரத்து 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு காலத்தில் நீர்வழிப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயின் வரலாற்றை விளக்கி, தற்போது அதன் மோசமான நிலைக்கு மாநில அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். 

தற்போது நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை ஆறு மாதங்களில் வரையறுக்க வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என உத்தரவிட்டனர்.

எல்லையை வரையறுத்த பின், கால்வாயில் அமைந்துள்ள உயர்மட்ட ரயில் தண்டவாளங்களுக்கான தூண்கள், பாலங்களின் தூண்கள் தவிர, மற்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் ஓராண்டில் அகற்ற வேண்டும் எனவும், மேற்கொண்டு எந்த கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கள் மீண்டுமு் முளைக்காதபடி நடவடிககைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கால்வாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை வேறு எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், கால்வாயை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் எதையும் வரன்முறைப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
ABP Premium

வீடியோ

KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள்  - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: ஸ்டாலின் அட்வைஸ், இந்தியா வரும் ஜெலன்ஸ்கி, அத்துமீறிய பேராசிரியர்கள் - 11 மணி வரை இன்று
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
அறை எண் 305 ஞாபகம் இருக்கா... பிளாஷ்பேக்கை சொல்லி நாஞ்சில் சம்பத்தை கதறவிடும் திமுக நிர்வாகி
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Embed widget