மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல்
’’எம்.கே.பி நகர் பகுதியில் பெட்டிக் கடை போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிப்பு’’
![சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல் Chennai: Government confiscated 123 kg of gutka banned in MKB Nagar சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/ccbe7bcae07d9abb55982a52c12c05cc_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பறிமுதல் செய்யப்பட்ட குட்கா
சென்னை எம்.கே.பி நகர் , வியாசர்பாடி உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக எம்.கே.பி நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் வியாசர்பாடி பகுதியில் சந்தேகத்திற்கிடமான பெட்டிக் கடைகளில் எம்.கே.பி நகர் போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது எம்.கே.பி நகர் பகுதியில் பெட்டிக் கடை ஒன்றில் சந்தேகத்திற்கிடமான நபர்கள் வந்து செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து எம்.கே.பி நகர் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து சோதனை செய்தபோது பெட்டி பெட்டியாக குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
![சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/60bb61044a1b554c1c18078d2406f5a0_original.jpg)
இதனையடுத்து கடையில் இருந்த 123 கிலோ குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் கடையில் இருந்த வியாசர்பாடி ஸ்டீபன்சன் சாலை பகுதியைச் சேர்ந்த கண்ணன் வயது 51 என்ற நபரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் எம்.கே.பி நகர் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த முகமது சிக்கந்தர் 38 என்ற நபரிடம் இருந்து அவர் குட்கா பொருட்கள் வாங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து அவரையும் கைது செய்த போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் ஆணின் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது
![சென்னை: எம்.கே.பி நகரில்அரசால் தடை செய்யப்பட்ட 123 கிலோ குட்கா பறிமுதல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/08/6aa726d3bb9695f43141a6ac1c058403_original.jpg)
சிறையில் இருந்து விடுதலையாகி கொலை - முன்கூட்டியே விடுதலை செய்ததற்கான உத்தரவு ரத்து
சென்னை திருவொற்றியூர் ஒண்டிகுப்பம் கடற்கரை பகுதியில் அந்தப் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் பணி புரிபவர்கள் கடற்கரையில் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது ஆணின் சடலம் கடலில் ஒதுங்கிய இருப்பதை கண்டு திருவொற்றியூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் உடனடியாக கடற்கரைக்கு வந்த திருவொற்றியூர் போலீசார் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஆணின் சடலத்தை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு உடற்கூறு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கடலில் குளித்த வந்த நபர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
சென்னை
இந்தியா
மதுரை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion