மேலும் அறிய

அக்காவின் கள்ளக் காதல்: தம்பி செய்த கொடூரம்! சென்னை கொலை வழக்கில் பரபரப்பு தீர்ப்பு, அதிர்ச்சி தரும் காரணம்!

அக்காவின் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மாமாவை கொலை செய்த வழக்கில், மைத்துனருக்கு ஆயுள் தண்டனை விதித்து , சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு.

அக்காவின் கள்ளக் காதலுக்கு துணை போன தம்பி !! கொலையில் முடிந்த சம்பவம்

சென்னை கொடுங்கையூர் கட்டபொம்மன் நகரைச் சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 38 ) பெயின்டராக வேலை செய்து வருகிறார். இவர் எருக்கஞ்சேரி நேரு நகரைச் சேர்ந்த வசந்தி ( வயது 30 ) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் செங்குன்றத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவருடன் வசந்திக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக் காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி சந்தித்து வந்துள்ளனர். இதை உதயகுமார் கண்டித்துள்ளார்.

தங்கள் கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்து வந்த உதயகுமாரை தீர்த்துக்கட்ட, இருவரும் முடிவு செய்தனர். வசந்தி தன் தம்பி கார்த்திக் ( வயது 30 ) - யிடம் உதயகுமாரை கொலை செய்ய உதவி கேட்டுள்ளார். கடந்த 2017 டிசம்பர் 1 ல் கொடுங்கையூர் நேரு நகரில் உள்ள பாழடைந்த வீட்டுக்கு உதயகுமாரை அழைத்து சென்று கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து , கார்த்திக்கையும் உடந்தையாக இருந்ததாக வசந்தி , ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ஏ.பிரபாவதி முன் நடந்தது. போலீசார் தரப்பில் அரசு கூடுதல் குற்றவியல் சுரேஷ் ஆஜரானார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, கார்த்திக் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கூறி, அபராதமும் விதித்து அவருக்கு ஆயுள் தண்டனையும், 10,000 ரூபாய் தீர்ப்பளித்தார். வசந்தி , ரமேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை அவர்கள் இருவரையும் நீதிபதி விடுவித்தார்.

போலி ஆவணங்கள் தயாரித்து 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் விற்று மோசடி

சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார் ( வயது 57 ) இவருக்கு ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் மஹா கணேஷ் , புண்ணியகோடி ஆகியோர் அறிமுகமாகினர். இருவரும் சேர்ந்து பாலவாக்கம், பல்கலை நகர் முதல் குறுக்கு தெருவில் 2,400 சதுரடி இடத்தை ஜெயகுமாரிடம் 2 கோடி ரூபாய்க்கு விற்று பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இதற்கிடையே சரவணவேல் என்பவர் தன்னுடைய நிலத்தை சிலர் அபகரித்துள்ளதாக போலீசில் புகார் அளித்தார். அப்போது தான் ஏமாற்றப்பட்டது ஜெயகுமாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து புண்ணிய கோடி , மஹா கணேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர்.

இதில் வெள்ளனுாரைச் சேர்ந்த புண்ணியகோடி ( வயது 38 ) திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மஹாகணேஷ் ( வயது 37 ) ஆகியோர் சரவணவேல் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ஜெயகுமாருக்கு நிலத்தை விற்று மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.

போலி ஆவணம் தயார் செய்து 2.25 கோடி ரூபாய் மோசடி

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த பாரதி வேலுசாமி 68, என்பவருக்கு ஈஞ்சம்பாக்கம் கிராமத்தில் 7,500 சதுரடி காலி மனை உள்ளது. இந்த நிலத்தை சிலர் போலியான ஆவணங்கள் தயார் செய்து அபகரித்தது தெரிந்தது. இந்த நிலத்தின் மதிப்பு 2.25 கோடி ரூபாய். இதுகுறித்து விசாரித்த போலீசார் பவர் ஏஜன்டாக பதிவு செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட வேளச்சேரியைச் சேர்ந்த சார்லஸ் கமலேசன் ( வயது 50 ) என்பவரை கைது செய்தனர். மற்றொருவரை தேடி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
ரஜினியின் ரூ.1 கோடி வாக்குறுதி என்னாச்சு ? மேடையில் ஓபனாக பதிலளித்த லதா ரஜினிகாந்த்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
15 நிமிட காணொளி விசாரணை! வழக்கு வாபஸ்! முதல்வர் விஜய் விவகாரத்தில் மனைவி சங்கீதா செய்த காரியம்!
" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Iran Missile Plan: ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
ட்ரம்ப்புக்கு காத்திருக்கும் பேரதிர்ச்சி.! அமெரிக்கா வரை சென்று தாக்கும் ஏவுகணை.! ஈரானின் மாஸ் திட்டம்
BYD Flex Fuel Hybrid SUV: பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
பட்டையை கிளப்பும் BYD.! இனி பெட்ரோல், எத்தனால், EV எல்லாம் ஒரே காரில்.! Flex Fuel ஹைப்ரிட் SUV அறிமுகம்
Mojtaba Khamenei: மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
மிகவும் கவலைக்கிடமான நிலையில் மொஜ்தபா.? ஈரானில் பரவிய தகவலால் தலைவர்களிடையே உச்ச பதற்றம்
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
Embed widget