மேலும் அறிய

Direct Flight: இனி கவலை வேண்டாம்..! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு நேரடி விமான சேவை..!

தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும், மியான்மர் நாட்டின் யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே, புதிதாக வாராந்திர நேரடி விமான சேவை இன்று முதல் தொடங்கியது.

பல்வேறு அமைப்புகள் கோரிக்கை
 
மியான்மர் நாட்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் பெருமளவு வசிக்கின்றனர். ஆனால் மியான்மர் நாட்டுக்கு, தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவை இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் மியான்மர் நாட்டிற்கு, தமிழ்நாட்டில் இருந்து நேரடி விமான சேவையை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை, தமிழ் நாட்டைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி  வந்தன.
 
யங்கூன்- சென்னை- யங்கூன்
 
இந்த நிலையில் தற்போது மியான்மர் நாட்டில் உள்ள யங்கூன்- சென்னை- யங்கூன் இடையே நேரடி விமான சேவையை தொடங்க, மியான்மர் நாட்டின், மியான்மர் ஏர்வேஸ்  விமான நிறுவனம் முடிவு செய்தது. அதன்படி கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி சனிக்கிழமை முதல், யங்கூன்-சென்னை-யங்கூன் இடையே பயணிகள் விமான சேவை தொடங்க இருந்தது. ஆனால் நிர்வாக காரணங்களால், புதிய விமான சேவை தொடங்குவது, ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.

Direct Flight: இனி கவலை வேண்டாம்..! சென்னையில் இருந்து இந்த இடத்திற்கு நேரடி விமான சேவை..!
 
மியான்மர் நாட்டின் தலைநகர் ரங்கூன்
 
இந்த நிலையில் இன்று, மியான்மர் ஏர்வேஸ் விமான நிறுவனம்,யங்கூன்-சென்னை- யங்கூன் இடையே புதிய விமான சேவையை,  தொடங்கியுள்ளது. ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை இந்த விமான சேவை நடக்கிறது.பயணிகளின் வரவேற்பை பொறுத்து, இந்த விமான சேவைகள் மேலும் அதிகரிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த விமானம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை  மியான்மர் நாட்டின் தலைநகர் ரங்கூன் எனப்படும் யங்கூனில் இருந்து   புறப்பட்டு, காலை 10:15 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையம் வந்து சேரும். அந்த விமானம் மீண்டும்  காலை 11:15 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 3:15 மணிக்கு யங்கூன் நகரை சென்றடைகிறது.
 
நேரடி விமான சேவை
 
இன்று காலை மியான்மர் தலைநகர் ரங்கூன் எனப்படும் யங்கூனில் இருந்து, மியான்மர் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 38 பயணிகளுடன் புறப்பட்டு, காலை 10:05 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. சென்னை விமான நிலையத்தில் முதல் முறையாக, மியான்மரில் இருந்து சென்னை வந்த விமானத்தில் வந்த பயணிகளை, சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பின்பு அதே விமானம் சென்னையில் இருந்து, இன்று பகல் 12 மணிக்கு, 42 பயணிகளுடன் மியான்மர் நாட்டின் யங்கூன் நகருக்கு புறப்பட்டு சென்றது. மியான்மர் நாட்டிலுள்ள யங்கூனில் இருந்து, இந்தியாவுக்கு ஏற்கனவே டெல்லி, கொல்கத்தா, பீகார் மாநிலத்தின் கயா ஆகிய மூன்று நகரங்களுக்கு மட்டும், நேரடி விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இப்போது இந்தியாவின் நான்காவது நகரமாக, சென்னைக்கும், நேரடி விமான சேவை இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!Ponmudi Inspection | ”4 நாளா என்ன பண்ணீங்க?”எகிறிய அமைச்சர் பொன்முடி! பதறிய அதிகாரிகள்.

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஆளுநருக்கு எதிராக இனவாத கருத்துக்கள் தெரிவிப்பதா?" முதல்வர் ஸ்டாலினுக்கு கவர்னர் ரவி பதிலடி!
"இதுக்கும் ஆளுநருக்கும் எந்த சம்பந்தமும் இல்ல" தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை.. கவர்னர் தரப்பு விளக்கம்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிப்பு.. ஆளுநர் ரவிக்கு எதிராக கொதித்தெழுந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்!
"திராவிடம் என்ற சொல் அடக்குமுறைக்கு எதிரான பெரும் புரட்சி" ஆளுநர் ரவியை சாடிய எதிர்க்கட்சி தலைவர் இபிஎஸ்
"இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி" பரபரப்பை கிளப்பிய தமிழ்நாடு ஆளுநர் ரவி!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
Breaking News LIVE 18th OCT 2024: சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை முதல் வழக்கம்போல் இயங்கும்!
TN Rain Alert:ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
ஒரே நேரத்தில் 2 காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டிற்கு மழை இருக்கா?வானிலை மையம் அப்டேட்!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. அகவிலைப்படியை 3 சதவிகிதம் உயர்த்தி தமிழக முதலமைச்சர் அறிவிப்பு!
Embed widget