மேலும் அறிய

Chennai Airport : விமான நிலையத்தில் பரபர சூழல்.. குடும்பத்துடன் போலி பாஸ்போர்ட்டில் பயணம்.. சென்னையில் 4 பேர் கைது..

"இவர்கள் அனைவருக்கும் இந்திய ஆதார் கார்டு, ரேஷன் கார்டு போன்றவைகள் இருப்பதோடு, இவர்கள் 2011-ஆம் ஆண்டில் இருந்து, சென்னை வண்டலூர் அருகே வசிக்கின்றனர் "

இலங்கையிலிருந்து சென்னை வந்த விமானத்தில், கணவன், மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர் போலி பாஸ்போர்ட்டில், இலங்கையிலிருந்து சென்னை  வந்ததாக கூறி, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், கணவன் மனைவி  உள்ளிட்ட நான்கு பேரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, மேல் நடவடிக்கைக்காக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
 
இலங்கை நாட்டின் தலைநகர் கொழும்பு நகரில் இருந்து, பிட்ஸ் ஏர் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் காலை 10:45 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து, பயணிகளை அனுப்பி கொண்டு இருந்தனர்.
 
குடியுரிமை அதிகாரிகள் விசாரணை :
 
அப்போது இலங்கையின் கொழும்பு நகரை சேர்ந்த ரமலான் சலாம் (33), அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 4 பேர், இந்த விமானத்தில் கொழும்பிலிருந்து சென்னை வந்தனர். விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் அவர்கள் பாஸ்போர்ட், ஆவணங்களை பரிசோதித்தனர். இந்திய பாஸ்போர்ட்டை ரமலான் சலாமும், அவருடைய குடும்பத்தினரும் வைத்திருந்தனர். இலங்கையைச் சேர்ந்த இவர்களுக்கு இந்திய பாஸ்போர்ட்கள் எவ்வாறு வந்தது என்று குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்.
 
வண்டலூர் அருகே...
 
அப்போது ரமலான் சலாம், கடந்த 2011 ஆம் ஆண்டு, இலங்கையில் இருந்து, அகதியாக  தமிழ்நாட்டிற்கு வந்ததாகவும், அதன்பின்பு இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை வண்டலூர் அருகே தங்கியிருந்ததாகவும், அப்போது ஆதார் கார்டு, ரேஷன் கார்டு,பேன் கார்டு போன்றவைகளை பெற்றதாகவும் கூறினார். அதோடு அவைகள் மூலமாக இந்திய பாஸ்போர்ட் தனக்கும், குடும்பத்தினருக்கும் பெற்றதாகவும் கூறினார். அதோடு முறைப்படி பாஸ்போர்ட் வாங்கும்போது, வண்டலூர் ஓட்டேரி போலீஸ் நிலைய வெரிஃபிகேஷன் நடந்து, அதன் பின்புதான், தங்கள் குடும்பத்தினருக்கு இந்திய பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
 
" நீங்கள் இலங்கை பிரஜைகள்தான் "
 
ஆனால் குடியுரிமை அதிகாரிகள், ரமலான் சலாம் விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. நீங்கள் இந்தியாவில் தற்போது வசித்து வந்தாலும், நீங்கள் இலங்கை பிரஜைகள்தான். எனவே இந்திய அரசை ஏமாற்றி, இந்திய பாஸ்போர்ட் வாங்கி வைத்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதோடு சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினரை வெளியில் விடாமல், குடியுரிமை அலுவலகத்தில் நிறுத்தி வைத்தனர். மேலும் விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், அவர்களுடைய உயர் அதிகாரிகளிடமும், டெல்லியில் உள்ள தலைமை குடியுரிமை அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றோடும், ஆலோசனை நடத்தினர்.
 
"4 பேர் கைது"
 
அதன் பின்பு நேற்று வியாழக்கிழமை, சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் தனிப்படையினர், சென்னை விமான நிலையம் வந்து விசாரணை நடத்தினர். அதோடு ரமலான் சலாம் மற்றும் அவருடைய குடும்பத்தினர் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து, போலி ஆவணங்கள் மூலம், போலியான இந்திய பாஸ்போர்ட் வாங்கி, அதன் மூலம் இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு குடும்பமாக பயணித்து வந்ததாக குற்றம்சாட்டி, 4 பேரையும் கைது செய்தனர். அதோடு அவர்களை மேல் விசாரணைக்காக சென்னையில் உள்ள மத்திய குற்ற பிரிவு போலீஸ் அலுவலகத்திற்கு அழைத்து சென்று, மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Vetrimaaran on Ilayaraja Vairamuthu : இளையராஜா VS வைரமுத்து “பாடல் யாருக்கு சொந்தம்?”- வெற்றிமாறன்Priyanka Gandhi on Amit shah : ”என்ன பண்ணீங்க அமித்ஷா? லிஸ்ட் சொல்லுங்க பார்ப்போம்” பிரியங்கா சவால்Vetrimaaran Pressmeet : ”சாதி ஏற்றத்தாழ்வு இல்லையா? நீங்கலாம் எங்க வாழ்றீங்க?” வெற்றிமாறன் பதிலடிNellai Jayakumar : மர்மம் விலக்குமா டார்ச் லைட்? ஜெயக்குமார் மரணத்தில் திருப்பம்! வலுக்கும் சந்தேகம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
CSK Vs RCB IPL Playoff: சென்னையை தட்டி தூக்குனா தான் ப்ளே ஆஃப் வாய்ப்பு - ஆர்.சி.பி. எப்படி ஜெயிக்கணும் தெரியுமா?
Pavithra Jayaram: அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
அப்பளம் போல நொறுங்கிய கார்.. சாலை விபத்தில் பிரபல சீரியல் நடிகை பலி
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Car Safety Features: உயிர் காக்கும் இந்த 5 பாதுகாப்பு அம்சங்கள் இல்லையா? அப்ப அந்த காரை வாங்காதீங்க!
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Andhra Assembly Election 2024: ஆந்திர சட்டமன்ற தேர்தலில் பரபரப்பு - பூஜ் ஏஜெண்டுகள் 15 பேர் கடத்தல், தெலுங்கு தேசம் ஷாக்
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Lok Sabha Election 2024 LIVE: விறுவிறுப்பாக நடக்கும் மக்களவைத் தேர்தல்! ஆர்வத்துடன் ஓட்டுப்போடும் மக்கள்!
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Morning Headlines: 4ம் கட்ட மக்களவைத் தேர்தல்! விறுவிறுப்பாக நடக்கும் ஆந்திர சட்டமன்ற தேர்தல் - முக்கியச் செய்திகள் இதோ
Selvaraj MP: காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
காலையிலேயே அதிர்ச்சி .. உடல்நலக்குறைவால் நாகை எம்.பி., செல்வராஜ் காலமானார்
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Lok Sabha Election Phase 4 Polling: மக்களவை தேர்தல்! 4ம் கட்டமாக 96 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு - எங்கெங்கு தெரியுமா?
Embed widget