மேலும் அறிய

chennai: வட்டிக்கு வாங்கி வட்டி பிஸினஸ்! அதிகரித்த கடன் தொல்லை!! குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நபர்!

கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறு குறு தொழிலாளர்கள் மற்றும் பெரும்பாலான பொதுமக்கள் வட்டிக்கு பணம் வாங்கி அதை வைத்தே தங்களுடைய பணத்தேவை பூர்த்தி செய்கின்றனர். அப்படி வாங்கும் பணத்திற்கு வட்டி மற்றும் தொகை ஆகிய இரண்டையும் திருப்பி செலுத்த முடியவில்லை என்றால் அதற்கு பின் அவர்கள் மிகுந்த துயரத்தை சந்தித்து வருகின்றனர். அதில் ஒருசிலர் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் விபரீத முடிவுகளையும் எடுத்து வருகின்றனர். அப்படி ஒருவர் குடும்பத்துடன் எடுத்த விபரீத முடிவு ஒன்றை எடுத்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் வடிவேல்(42). இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜி(38) என்ற மனைவியும், ஜிவிதா(13) என்ற மகளும் இருக்கின்றனர். இவர் வட்டிக்கு வாங்கிய பணத்தை மேல் வட்டிக்கு விடும் வேலையையும் பார்த்து வந்துள்ளார். இதற்காக அவர் தன்னுடைய நண்பர்களிடம் இருந்தும் மற்றவர்களிடம் இருந்தும் பல லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளதாக தெரிகிறது.

 

கொரோனா காலத்தில் இவர் வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் திருப்பி செலுத்தாமல் இருந்துள்ளனர். இதன்காரணமாக வடிவேலுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த நபர்கள் மீண்டும் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். அத்துடன் வட்டியை திருப்பி செலுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளதாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து அவர்களுக்கு பணம் அளிக்க முடியாமல் வடிவேலு மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். 


chennai: வட்டிக்கு வாங்கி வட்டி பிஸினஸ்! அதிகரித்த கடன் தொல்லை!! குடும்பத்தோடு தற்கொலைக்கு முயன்ற நபர்!

இந்தச் சூழலில் திடீரென்று இவர் தன்னுடைய தங்கைக்கு ஒரு வீடியோவை வாட்ஸ் அப் மூலம் அனுப்பியுள்ளார். அதில் கடன் பிரச்னை காரணமாக அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதை பார்த்த அவருடைய தங்கை உடனடியாக விரைந்து விருகம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். 

 

அப்போது அவர்கள் அனைவரும் எலி மருந்து சாப்பிட்டு ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடி இருந்துள்ளனர். அவர்களை உடனடியாக அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். உரிய நேரத்தில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டதால் ஆபத்தான நிலையிலிருந்து காப்பாற்றாப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேரின் தற்கொலை முயற்சி தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கடன் தொல்லையால தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மேலும் படிக்க:இன்ஸ்டாவில் ஆசை வலை! செக்ஸுக்காக மாஸ்டர் ப்ளான்.. 15வயது சிறுவனை டார்கெட் செய்து சிக்கிய பெண்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
நட்பில் அடிப்படையில் தான் பாஜகவுக்கு ஆதரவளித்தோம், அரசியல் நோக்கத்தில் அல்ல - செல்லூர் ராஜூ பேட்டி !
Embed widget