மேலும் அறிய

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
 
செங்கல்பட்டு மாவட்டம், திருமனி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதை தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு தயாரிப்பது, மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள், சட்டிகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பது ஆகியவற்றின் மூலம் இவர்களது வாழ்க்கை தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள, இவர்கள் போராடி வருகின்றனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிக்கல் ஏற்பட்டது
 
வழக்கமாக பருவமழை காலத்தில் இவர்கள் மண்பாண்டங்கள் செய்வதில்லை. மார்கழி மாதம் பனி பெய்யும் காலம் என்பதால் கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு, பொங்கல் பானைகள் தயாரிக்க தொடங்குவார்கள். பொங்கல் பானை தயாரிக்க தொடங்கும் காலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அவர்கள் மண்பாண்டங்களை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
 

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிரமமான சூழ்நிலை
 
மண்பாண்டம் செய்வதற்கு மண் பதப்படுத்த வேண்டும் என்றால், குறைந்தது 4 நாட்கள் நல்ல வெயில் அடிக்க வேண்டும். ஆனால் 2 நாட்கள் மழை பெய்வதும், 2 நாட்கள் வெயில் அடிப்பதுமாக இருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. மழை பெய்து சற்று ஓய்ந்துள்ள காரணத்தால், கடந்த 2 நாட்களாக அவர்கள் மண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
 
சூளையில் இட்டு சுட்டு
 
இந்நிலையில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதுவரை பொங்கல் பானைகள் செய்யும் வேலையை தொடங்கவே இல்லை. அந்த வேலையை தொடங்கியுள்ள சிலரும், குறைந்த எண்ணிக்கையிலேயே பானைகள் தயார் செய்துள்ளனர். மண் பாண்டங்களை சூளையில் இட்டு சுடுவதற்கு போதுமான அளவு பானைகள் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் 10 நாட்களாவது ஆகும். அதன் பிறகு சூளையில் இட்டு சுட்டு எடுக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் பானைகள் தயாராகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
பாதிக்கப்படும் நிலை 
 
பொதுவாக தயார் செய்த பானைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டும் என்றால், குறைந்தது பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாக பானைகள் தயாராக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயற்கை கை கொடுக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலர் தற்போது சில்வர் மற்றும் வெண்கல பாத்திரங்களை பயன்படுத்தியே பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
 
மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ?
 
எனவே பொதுமக்கள் மண்பானையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் குடும்பத்திற்கு ஒரு பானை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்து, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தொடர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் மண்பாண்டங்கள் தயாரிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் தயார் செய்து வைத்துள்ள மண்பாண்ட பொருட்களுடைய விற்பனை மந்தம் ஆகியவற்றின் காரணமாக காலப்போக்கில் மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ? என்ற அச்சம் உள்ளதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
மண்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை அரசு ஊக்கப்படுத்தி, தொடர்ந்து மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய வைக்காவிட்டால், இந்த சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினர் மண்பாண்டம் என்ற ஒன்று இருந்ததை அறியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசு உரிய திட்டங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காப்பதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
ABP Premium

வீடியோ

PC Sreeram supports Vijay|‘’அதிகார துஷ்பிரயோகம்!இது டிரம்ப் மண் கிடையாதுவிஜய்க்கு PC ஸ்ரீராம்SUPPORT
Vijay CBI Enquiry | CBI விசாரணையில் TWIST தேர்தலுக்கு முன் குற்றப்பத்திரிகை? அடுத்த சிக்கலில் விஜய்?
Villupuram News|முளைப்பாரி..கும்மியாட்டம்!களைகட்டிய பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்று திருவிழா
Woman Police with Baby|Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்!கைக்குழந்தையுடன் கடமை! மாஸ் காட்டிய பெண் காவலர்
”முடிவு என்கிட்ட தான்” ராகுல் போட்ட ORDER! டெல்லி MEETING-ல் நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
ADMK DMDK: 2 நாள்தான் டைம்.. தேமுதிக-விற்கு கெடு விதித்த அதிமுக - பிரேமலதா முடிவு என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
Rahul Gandhi: தமிழக காங்கிரசை வறுத்தெடுத்த ராகுல் காந்தி.. டெல்லியில் நடந்தது என்ன?
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு: மகர விளக்கு சீசன் நிறைவு! அடுத்த தரிசனம் எப்போது? முக்கிய அறிவிப்பு!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
கற்றல் முறையையே மாற்றும் புரட்சி; பாட நூல்கள் இனி சுவாரசிய கதைகளாக- கூகுள் அசத்தல் அறிமுகம்!
HC Judge Vs Savukku Shankar: “நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
“நீதிமன்றத்தையும் நீங்கள் மிரட்ட முடியாது“; சவுக்கு சங்கரை விளாசிய நீதிபதி; கடும் எச்சரிக்கை
Tata Punch vs Nexon: டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
டாடா பஞ்ச் டாப் எண்ட்-ஆ.? மிட்-ஸ்பெக் நெக்ஸான்-ஆ.? உங்கள் பணத்திற்கு சிறந்த SUV எது.?
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
தைலாபுரத்தில் திடீர் நிலநடுக்கம்! - மூத்த நிர்வாகிகள் கொடுத்த தவறான தகவல்? ராமதாஸ் குழப்பம்!
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
திருமணம் ஆகாதவர்களுக்கு அவசர கால சேமிப்பு ஏன் அவசியம்?
Embed widget