மேலும் அறிய

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!

மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை
 
செங்கல்பட்டு மாவட்டம், திருமனி கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட மண்பாண்ட தொழிலாளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மண்பாண்டம் செய்வதை தவிர வேறு தொழில்கள் எதுவும் தெரியாது. கார்த்திகை மாதத்தில் அகல் விளக்கு தயாரிப்பது, மார்கழி மாதத்தில் பொங்கல் பண்டிகைக்கு தேவையான பானைகள், சட்டிகள் உள்ளிட்ட மண்பாண்டங்கள் தயாரிப்பது ஆகியவற்றின் மூலம் இவர்களது வாழ்க்கை தேவையை ஓரளவுக்கு பூர்த்தி செய்து கொள்ள, இவர்கள் போராடி வருகின்றனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிக்கல் ஏற்பட்டது
 
வழக்கமாக பருவமழை காலத்தில் இவர்கள் மண்பாண்டங்கள் செய்வதில்லை. மார்கழி மாதம் பனி பெய்யும் காலம் என்பதால் கார்த்திகை அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்த பின்பு, பொங்கல் பானைகள் தயாரிக்க தொடங்குவார்கள். பொங்கல் பானை தயாரிக்க தொடங்கும் காலத்தில் அடுத்தடுத்து தொடர்ந்து மழை பெய்தது. இதனால் அவர்கள் மண்பாண்டங்களை தயார் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
 

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
சிரமமான சூழ்நிலை
 
மண்பாண்டம் செய்வதற்கு மண் பதப்படுத்த வேண்டும் என்றால், குறைந்தது 4 நாட்கள் நல்ல வெயில் அடிக்க வேண்டும். ஆனால் 2 நாட்கள் மழை பெய்வதும், 2 நாட்கள் வெயில் அடிப்பதுமாக இருந்ததால், அவர்களால் எதுவும் செய்ய முடியாத அளவுக்கு சிரமமான சூழ்நிலை ஏற்பட்டது. மழை பெய்து சற்று ஓய்ந்துள்ள காரணத்தால், கடந்த 2 நாட்களாக அவர்கள் மண்ணை பதப்படுத்தி மண்பாண்டங்கள் செய்ய தொடங்கியுள்ளனர்.
 
சூளையில் இட்டு சுட்டு
 
இந்நிலையில் மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வரும் பாதிக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இதுவரை பொங்கல் பானைகள் செய்யும் வேலையை தொடங்கவே இல்லை. அந்த வேலையை தொடங்கியுள்ள சிலரும், குறைந்த எண்ணிக்கையிலேயே பானைகள் தயார் செய்துள்ளனர். மண் பாண்டங்களை சூளையில் இட்டு சுடுவதற்கு போதுமான அளவு பானைகள் செய்ய வேண்டும் என்றால் குறைந்தது இன்னும் 10 நாட்களாவது ஆகும். அதன் பிறகு சூளையில் இட்டு சுட்டு எடுக்கும் நிலையில், பொங்கல் பண்டிகைக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு தான் பானைகள் தயாராகும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
பாதிக்கப்படும் நிலை 
 
பொதுவாக தயார் செய்த பானைகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச்சென்று விற்பனை செய்ய வேண்டும் என்றால், குறைந்தது பொங்கலுக்கு ஒரு வாரம் முன்னதாக பானைகள் தயாராக வேண்டும். ஆனால் இந்த ஆண்டு இயற்கை கை கொடுக்காததால் மண்பாண்ட தொழிலாளர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். மேலும் பொதுமக்கள் பலர் தற்போது சில்வர் மற்றும் வெண்கல பாத்திரங்களை பயன்படுத்தியே பொங்கல் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். இதனாலும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
 
மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ?
 
எனவே பொதுமக்கள் மண்பானையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடும் வகையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கும் பொங்கல் சிறப்பு தொகுப்பில் குடும்பத்திற்கு ஒரு பானை வழங்கும் திட்டத்தை அரசு அறிவித்து, மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலும் பல்வேறு இடர்பாடுகளுக்கு இடையில் தொடர்ந்து மண்பாண்ட தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும், ஆனால் மண்பாண்டங்கள் தயாரிப்பதில் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள், இயற்கை இடர்பாடுகள் மற்றும் தயார் செய்து வைத்துள்ள மண்பாண்ட பொருட்களுடைய விற்பனை மந்தம் ஆகியவற்றின் காரணமாக காலப்போக்கில் மண்பாண்ட தொழில் காணாமல் போய்விடுமோ? என்ற அச்சம் உள்ளதாகவும் மண்பாண்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தரமாக தயாராகும் பானைகள்...பின்னணியில் இருக்கும் சோகக் கதை..!
 
மண்பாண்ட தொழிலில் ஈடுபடுபவர்களை அரசு ஊக்கப்படுத்தி, தொடர்ந்து மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்ய வைக்காவிட்டால், இந்த சமுதாயத்தில் அடுத்த தலைமுறையினர் மண்பாண்டம் என்ற ஒன்று இருந்ததை அறியாமல் போய்விடும் வாய்ப்பு உள்ளது. எனவே அரசு உரிய திட்டங்கள் மூலம் மண்பாண்ட தொழிலாளர்களையும், அவர்களது வாழ்வாதாரத்தையும் காப்பதோடு, அடுத்தடுத்த தலைமுறைகளில் மண்பாண்ட தொழில் நலிவடையாமல் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Weather Update: தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு.. லிஸ்டை பாருங்க!
Trump Zohran Mamdani: அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
அடிச்சாருயா அந்தர் பல்டி.! ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப் - எதிரி நண்பனான கதை
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
Embed widget