மேலும் அறிய

Chengalpattu: மதுராந்தகம் அருகே நிற்காத அரசு பேருந்து மீது கல் வீச்சு...கண்ணாடி உடைப்பு

மதுராந்தகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காததால் மீது மாணவர்கள் கல் வீசி கண்ணாடி உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

மதுராந்தகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் நிற்காத பேருந்து மீது மாணவர்கள் கல் வீசி கண்ணாடி உடைத்ததாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நெல்வாய் கூட்ரோடு அருகே உள்ள இந்திராபுரம் கிராமத்தில், நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு மதுராந்தகத்திலிருந்து உத்திரமேரூர் நோக்கி சென்ற 17 என்ற எண் கொண்ட அரசு பேருந்து  நிறுத்தத்தில், நிற்காததால் மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்ததாக கூறப்படுகிறது . அடிக்கடி இப்பகுதியில் பேருந்துகள் நின்று செல்லவில்லை என அப்பகுதி மக்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தனர்.
 

Chengalpattu: மதுராந்தகம் அருகே  நிற்காத அரசு பேருந்து மீது கல் வீச்சு...கண்ணாடி உடைப்பு
 
இதனைத் தொடர்ந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர், மாணவர்கள் கல்வீசி கண்ணாடி உடைத்ததாக படாளம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சம்பவம் அறிந்து காவல் நிலையத்திற்கு  வந்த பெற்றோர்கள் மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும், எடுக்க வேண்டாம் எனவும் உரிய இழப்பீடு வழங்குகிறோம் என நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இடத்தில் சமாதானம் பேசிய காரணமாக  புகார் வாபஸ் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து படாளம் காவல் நிலையத்திலிருந்து பேருந்து எடுத்து சென்றனர். பேருந்து நிறுத்தத்தில் நின்று ஏற்றி செல்ல வேண்டும்  பெற்றோர்கள் கோரிக்கையாக உள்ளது.
 

Chengalpattu: மதுராந்தகம் அருகே  நிற்காத அரசு பேருந்து மீது கல் வீச்சு...கண்ணாடி உடைப்பு
 
குறிப்பாக காலை மற்றும் மாலை வேலைகளில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இது போன்று அரசு பேருந்துகள் முறையான பேருந்து நிறுத்தத்தில் நிற்பதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே பேருந்து முழுமையாக நிரம்பி வருவதால்,  பேருந்து நிறுத்தத்தில் நின்றால் பலரை ஏற்றி செல்ல வேண்டும். குறிப்பிடப்பட்ட பேருந்து நிலையத்தில் யாராவது இறங்க வேண்டும் என பேருந்தில் பயணிப்பவர்கள் தெரிவித்தால்,  பேருந்து நிறுத்தத்திற்கு சில மீட்டர்கள் தள்ளியே பேருந்து நிறுத்தப்படுகிறது. சில சமயங்களில் பல இடங்களில் பேருந்துகள் நின்று செல்வதில்லை என குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் இருப்பதால் இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
 
 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

ட்விட்டர் பக்கத்தில் தொடர

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Breaking News LIVE: கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும் - நடிகர் விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Embed widget