மேலும் அறிய

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!

இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். பின்னர் மதியம் உணவு இடைவேளியின் போது பள்ளியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தலைமையாசிரியரின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இருப்பினும் அங்கிருந்த மூன்று பீரோக்களில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மேலும் நான்கு லேப்டாப், மேஜைகள், மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருந்த சீரூடைகள், புத்தகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. அது மட்டுமின்றி அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என உள்ள புத்தகங்கள் அங்கே தான் வைக்கப்பட்டிருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை நெருப்பில் முழுவதுமாக எறியாமல் தப்பியது, மீதமுள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்து சென்றனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
தீ விபத்தில் சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், திடீர் தீ விபத்து நேர்ந்ததும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. எனவே இதற்கு உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர். அதன் காரணமாக இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில முடியாமல் கஷ்டப்படுகின்றனர், அதிலும் அரசு பள்ளி மாணவர்களில் அதிகபட்சமான மாணவர்களின் வீட்டில் இணையதள வசதியும் கைப்பேசி வசதியும் இல்லாமல் இணையதள வகுப்புகளில் பயில முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு இருக்கும் சூழலில் தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடம் இவ்வாறு தீ பற்றியது தங்களுக்கு வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் கூறினர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget