மேலும் அறிய

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!

இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தலைமை ஆசிரியராக செல்வம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு ஆசிரியர்கள் வந்திருந்தனர். பின்னர் மதியம் உணவு இடைவேளியின் போது பள்ளியை பூட்டிவிட்டு அனைவரும் வீட்டுக்கு சாப்பிட சென்றுவிட்டனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இந்த நிலையில், மதியம் 2 மணிக்கு மேல் தலைமையாசிரியரின் அறையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் அருகே சென்று பார்த்தனர். அப்போது தான் அங்கு தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் தீ பிடித்து எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுபற்றி அவர்கள் உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து சிறிது நேர போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
இருப்பினும் அங்கிருந்த மூன்று பீரோக்களில் இருந்த மாணவர்களின் கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ்கள், ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், மேலும் நான்கு லேப்டாப், மேஜைகள், மாணவர்களுக்கு வழங்குவதற்காக இருந்த சீரூடைகள், புத்தகங்கள், குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் உள்ளிட்ட அனைத்தும் எரிந்து சாம்பலானது. அது மட்டுமின்றி அந்த அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு என உள்ள புத்தகங்கள் அங்கே தான் வைக்கப்பட்டிருந்தது ஆனால் அதிர்ஷ்டவசமாக அவை நெருப்பில் முழுவதுமாக எறியாமல் தப்பியது, மீதமுள்ள புத்தகங்களை மாணவர்கள் எடுத்து சென்றனர்.
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
தீ விபத்தில் சான்றிதழ்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதே நேரத்தில், திடீர் தீ விபத்து நேர்ந்ததும் சந்தேகத்திற்கு இடமாக உள்ளது. எனவே இதற்கு உரிய விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மாணவர்களின் பெற்றோர் தரப்பில் வலியுறுத்தினர். அதன் காரணமாக இந்த சம்பவம் தொடர்பாக ஆவினங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து, தீ விபத்து நேர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு...!
 
கொரோனா பேரிடர் காலகட்டத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு சென்று கல்வி பயில முடியாமல் கஷ்டப்படுகின்றனர், அதிலும் அரசு பள்ளி மாணவர்களில் அதிகபட்சமான மாணவர்களின் வீட்டில் இணையதள வசதியும் கைப்பேசி வசதியும் இல்லாமல் இணையதள வகுப்புகளில் பயில முடியாமல் அவதிப்படுகின்றனர். இவ்வாறு இருக்கும் சூழலில் தங்கள் பிள்ளைகள் பயிலும் பள்ளிக்கூடம் இவ்வாறு தீ பற்றியது தங்களுக்கு வேதனை அளிப்பதாக பெற்றோர்கள் கூறினர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

VCK Maanadu : ”பெண்கள் இருக்காங்க.. இப்படியா?” எல்லை மீறிய விசிகவினர்! நொந்து போன திருமாAmala supports Samantha : ’’அமைச்சர் மாதிரி பேசு..அரக்கி மாதிரி பேசாத’’வெளுத்து வாங்கிய அமலா!Ponmudi Angry : வாக்குவாதம் செய்த திமுககாரர்! கடுப்பான பொன்முடி!’’மைக்க குடு முதல்ல’’Anbil Mahesh Phone Call : ’’ IDEA இருந்தா சொல்லுப்பா’’அன்பில் மகேஷ் PHONE CALL!  இளம் விஞ்ஞானி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சென்னைக்கு ஜாக்பாட்.. 2ம் கட்ட மெட்ரோ திட்டம்: ரூ. 63, 246 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
சனாதனத்தை அழிக்க நினைத்தால் அழிந்து போவார்கள்: 1 வருடம் கழித்து உதயநிதிக்கு பவன் கல்யாண் வார்னிங்.!
"பிராமின்தான்.. ஆனா பீப் சாப்பிட்டாரு" சாவர்க்கர் குறித்து புயலை கிளப்பிய கர்நாடக அமைச்சர்!
"இந்துக்களின் மக்கள் தொகை குறைகிறது" தேர்தல் பரப்புரையில் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
Government School Student Innovation: அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
அசத்தல் கண்டுபிடிப்பு... அரசு பள்ளி மாணவரிடம் ஆலோசனை கேட்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்
Salem Suitcase Murder: சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்...  விசாரணையில் அதிர்ச்சி தகவல்
சூட்கேஸில் இருந்த இளம்பெண் சடலம்... விசாரணையில் அதிர்ச்சி தகவல்
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
ஈரான் போர் இருக்கட்டும்.. ஹமாஸ் கதை என்னாச்சு.. முற்றிலுமாக ஒழித்ததா இஸ்ரேல்?
Chennai Rain: சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
சில்லென்று மாறிய சென்னை.! இடியுடன் கொட்டித்தீர்க்கும் மழை..! வீட்டுக்கு போறவங்க கவனமா போங்க.!
Embed widget