மேலும் அறிய

ராஜ போதை தரும் அந்த பொருள்! ரூ. 28 கோடியாம்! சென்னை விமான நிலையத்தை அதிர வைத்த ராஜஸ்தான் கடத்தல் மன்னன்..!

cocaine: இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது

கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து ரூ.28 கோடி மதிப்புடைய, கொக்கையின் போதை பொருளை கடத்தி வந்த, ராஜஸ்தான் மாநில இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப் பொருளை பறிமுதல் செய்து மேலும் விசாரணை. இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று விசாரணையில் தெரியவந்தது.
 

 சென்னை விமான நிலையம்

 கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை விமான நிலையத்தில் போதை  பொருட்கள் கடத்தும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளன.  குறிப்பாக சென்னை வழியாக குஜராத் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கும், போதை பொருட்கள்  கொண்டு செல்லப்படுகிறது. அதாவது வெளிநாட்டில் இருந்து சென்னை வந்து  சென்னையில் இருந்து வேறு மாநிலங்களுக்கு.   போதைப் பொருட்கள் கடத்தப்படுகிறது.  போதைப் பொருள் கடத்துவதை தடுப்பதற்காக தொடர்ந்து பல்வேறு வகையில்  விமான நிலைய அதிகாரிகள்  பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  இதனால் அவப்பொழுது சென்னை விமான நிலையத்தில் பல கோடி கணக்க ரூபாய்  மதிப்புள்ள போதை பொருட்கள், பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு  ஒரே நபரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்கள்  கூட சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மத்திய வருவாய் புலனாய்வுத் துறை

சென்னைக்கு வெளிநாடுகளில் இருந்து மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை தனிப்படை அதிகாரிகள் இன்று அதிகாலையில் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அந்த நேரத்தில் கத்தார் நாட்டு தலைநகர் தோகாவிலிருந்து தனியார் பயணிகள் விமானம் ஒன்று சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை மத்திய வருவாய் புலனாய் துறை தீவிரமாக கண்காணித்து கொண்டு இருந்தபோது, ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை  சேர்ந்த பாரத் வசித்தா (28) என்ற பயணி, இந்த விமானத்தில் தோகாவிலிருந்து வந்து விட்டு, மற்றொரு விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி செல்வதற்காக, டிரான்சிட் பயனியாக விமான நிலையத்திற்குள் அமர்ந்திருந்தார். 
 

" ஹெராயின் போதை பொருள் "

 
மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் அவரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவர் வைத்திருந்த பைக்குள் சுமார் ஒரு கிலோ எடையுடைய போதைப்பொருள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்த பயணியின் பயணத்தை ரத்து செய்து, தனி அறைக்கு அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பயணி வைத்திருந்தது ஹெராயின் போதை பொருள் என்றும் முதலில் கூறப்பட்டது. ஆனால் அதிகாரிகள் அந்த போதை பொருட்களை பரிசோதித்த போது, அது மிகவும் விலை உயர்ந்த கொக்கையின் போதைப் பொருள் என்று தெரிய வந்தது. அதன் மதிப்பு சுமார் ரூ.28 கோடி அளவுக்கு இருக்கலாம் என்று தெரிய வருகிறது.  இதை அடுத்து மத்திய வருவாய் புலனாய் துறை அதிகாரிகள் அந்தப் பயணியை கைது செய்து மேலும் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த இளைஞர் சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்று தெரிய வருகிறது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Seeman about Ilayaraja :  ”இளையராஜா கேட்டது நியாயம்! நம்ம தப்பா புரிஞ்சுக்கிறோம்” ஆதரவாக பேசிய சீமான்Modi Vs Rahul Gandhi : காங்கிரஸ் குறித்து மோடி சர்ச்சை பேச்சு பிரச்சாரத்தில் பேசியது என்ன?Dharmapuri News : கருகும் வெற்றிலை கொடிகள்”அரசு உதவி செய்ய வேண்டும்”கதறும் விவசாயிகள்Seeman about Savukku Shankar : சவுக்கு மீது சிறையில் தாக்குதல்?”கஞ்சா சங்கர் ஆக்க போறாங்க”- சீமான்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
ஐயப்ப பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு. சபரிமலை கோவில் நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு
Akshaya Tritiya 2024 Date: அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
அட்சய திரிதியை எப்போது? தங்கம் வாங்க நல்ல நேரம் இதுதான்!
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
kerala Elephant Attack: யானை மிதித்து தனியார் தொலைக்காட்சி கேமராமேன் உயிரிழப்பு - கேரளாவில் சோகம்
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Teachers Transfer: ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது? - வெளியான முக்கியத் தேதிகள்!
Puducherry Youth Death: உடல் எடை குறைப்பால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்:  மருத்துவமனையை மூட உத்தரவா ?
உடல் எடை குறைப்பால் இளைஞர் உயிரிழந்த விவகாரம்: மருத்துவமனையை மூட உத்தரவா ?
Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
Air India Flight: 70 ஏர் இந்திய விமானங்கள் திடீர் ரத்து! ஊழியர்களுக்கு என்னாச்சு? மாஸ் லீவ்!
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
தமிழ் புதல்வன் திட்டத்தால் மாணவர்களுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்! மாதாமாதம் ரூ.1000: எப்போது?
Breaking Tamil LIVE: சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Breaking Tamil LIVE: சென்னையில் இரவு நேரங்களில் மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Embed widget