மேலும் அறிய

சோனாலி போகத் மரண வழக்கு...கோவா ஓட்டலுக்கு விரைந்த சிபிஐ...தொடரும் மர்மம்!

வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக சோனாலி மற்றும் அவரது உதவியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைகளில் இன்று சோதனை செய்தது. 

கடந்த மாதம் கோவாவில் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக நிர்வாகியான சோனாலி போகத்தின் மர்ம மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய மத்திய புலனாய்வு அமைப்பு, வழக்கு தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக சோனாலி மற்றும் அவரது உதவியாளர்கள் தங்கியிருந்த ஹோட்டலின் அறைகளில் இன்று சோதனை செய்தது. 

இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதற்கு முன் விசாரணை நடத்தி வந்த கோவா போலீசார், விசாரணையின் ஒரு பகுதியாக ஓட்டலில் உள்ள அறைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

சிபிஐ குழு, ஆவணங்களை சேகரித்த பிறகு வழக்கை விசாரித்த உள்ளூர் காவல்துறை அலுவலர்கள் மற்றும் சோனாலிக்கு உடற்கூறாய்வு செய்த மருத்துவர்களை தொடர்புகொள்வார்கள் என்று அலுவலர்கள் தெரிவித்தனர். ஹரியானாவில் உள்ள சோனாலி போகட்டின் சகோதரர்களிடம் மத்திய புலனாய்வு அமைப்பு ஏற்கனவே வாக்குமூலம் பெற்றுள்ளது.

 

இதுகுறித்து சோனாலியின் சகோதரர் வதன் டாக்கா கூறுகையில், "சிபிஐ குழுவினர் எங்கள் வீட்டுக்கு வந்து எங்கள் குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். பின்னர் எங்கள் சகோதரரின் வீட்டுக்குச் சென்று வாக்குமூலத்தை பெற்றனர்" என்றார்.

சோனாலி போகட்டின் மரணத்தின் பின்னணியில் சதி இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர். சிபிஐ விசாரணையால் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர்.

 

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த் கடிதம் மூலம் பரிந்துரை செய்ததையடுத்து, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைத்தது. ஹரியானா மாநிலம் ஹிசாரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சோனாலி போகத் (43), கடந்த மாதம் கோவாவில் சந்தேகத்திற்கிடமான முறையில் மரணம் அடைந்தார். அது கொலை வழக்காகக் கருதப்பட்டு வருகிறது.

இதுவரை, இந்த வழக்கு தொடர்பாக அவரது ஆண் உதவியாளர்கள் சுதிர் சங்வான் மற்றும் சுக்விந்தர் சிங் மற்றும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget