மேலும் அறிய

செங்குன்றம் அருகே பரபரப்பு… பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை சூழ்ந்ததால் இயல்புநிலை பாதிப்பு!

அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மாஸ்க் அணிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

திருவள்ளூர், செங்குன்றத்தை அடுத்த லட்சுமிபுரம் அருகே உள்ள பழைய பிளாஸ்டிக் குடோனில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது.

உயிர்சேதம் ஏதுமில்லை

நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட விபத்தால், அந்த நேரத்தில் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெருமளவு உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனால் இந்த பெரும் தீ விபத்து சம்பவத்தால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளாதால் அங்கு வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்படக் கூடிய சூழல் நிலவுகிறது.

செங்குன்றம் அருகே பரபரப்பு… பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை சூழ்ந்ததால் இயல்புநிலை பாதிப்பு!

மக்களுக்கு சுவாச பாதிப்பு

தீ விபத்து குறித்து தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த 7க்கும் மேற்பட்ட வாகனங்கள், தீயை அணைக்கும் பணியில் முழு வீச்சில், தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்துள்ளதால் சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சிலர் மாஸ்க் அணிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்: KKR vs CSK, IPL 2023 Highlights: சரணடைந்த கொல்கத்தா.. 49 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வெற்றி .. புள்ளிப்பட்டியலில் முதலிடம்..!

மின்கசிவு காரணமா?

மேலும், இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன. இரவு நேரம் என்பதால் உயிர் சேதம் எதுவும் இல்லை. தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக இருக்கலாம் என்று அப்பகுதி மக்கள் யூகிக்கின்றனர்.

செங்குன்றம் அருகே பரபரப்பு… பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து; கரும்புகை சூழ்ந்ததால் இயல்புநிலை பாதிப்பு!

தொடரும் மின்கசிவு தீ விபத்துக்கள்

இதே போல மூன்று வாரங்கள் முன்பு சென்னையின் மிகவும் பழமையான 15 மாடி கட்டிடமான எல்ஐசி கட்டிடம் தீவிபத்திற்கு உள்ளானது. அங்கு ஏப்ரல் 2 ஆம் தேதி, மேலே இருக்கும் எல்இடி போர்டு தனியாக தீப்பிடித்து எரிந்தது. அன்றும் வார விடுமுறைக்கு தினம் என்பதால், உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. அங்கும் உடனடியாக தீயணைப்பு வீரர்கள் குவிந்து தீ எங்கும் பரவாமல் தடுத்த நிலையில் யாருக்கும் பாதிப்பின்றி அணைக்கப்பட்டது. இதே போல சென்னை சந்தோமில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி கிளை கட்டிடம் இந்த வருட தொடக்கத்தில் ஜனவரி 3 ஆம் தேதி தீப்பிடித்தது. அப்போதும் உயிரிழப்புகள் ஏதுமின்றி காப்பற்றிவிட்டாலும் மின்கசிவு காரணமாக ஏற்படும் தீ விபத்துக்கள் அதிகமாகி உள்ளன. அதற்கு காரணம் பழைய கட்டிடங்களில் பராமரிக்கப்படாமல் இருக்கும் ஒயரிங் என்று பல காலங்களாகவே பொறியாளர்கள் கூறி வருகின்றனர். அதற்கேற்ப நடவடிக்கைகளை அந்தந்த கட்டிட உரிமையாளர்கள் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

K Pandiarajan : தவெக-வுக்கு தாவும் மாஃபா? திமுகவில் இணையும் OPS MLA? சூடுபிடிக்கும் தமிழக அரசியல்Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CBSE Board Exams: 2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
2026 முதல் ஆண்டுக்கு 2 சிபிஎஸ்இ பொதுத்தேர்வுகள்.. அடுத்த வாரம் வெளியாகும் வரைவு திட்டம்...
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Delhi CM: நாளை காலை 11 மணி..! டெல்லி முதலமைச்சர், ரேகா குப்தா பதவியேற்பு? பாஜக அதிரடி முடிவு
Space X Record: முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
முதன் முறையாக வேறு நாட்டில் ராக்கெட்டை தரையிறக்கி ஸ்பேஸ் எக்ஸ் சாதனை... பிரமிக்க வைக்கும் வீடியோ...
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஆடு வெட்டப்பட்டதா?” உண்மை என்ன ?
“மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே ஆடு வெட்டப்பட்டதா?” உண்மை என்ன ?
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Singaperumal Koil Bridge Flyover: 20 ஆண்டு கண்ணீருக்கு தீர்வு.. தென் மாவட்டங்களுக்கு ஜாக்பாட்.. மகிழ்ச்சியில் சிங்கப்பெருமாள் கோவில் மக்கள்..
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Flying Train: சென்னையில் வேளச்சேரி டூ பரங்கிமலை இனி பறந்துகிட்டே போகலாம்! ஜுன் முதல் வரும் பறக்கும் ரயில்!
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.