மேலும் அறிய

" இனி வாட்ஸ் - அப்பிலேயே டிக்கெட் " தமிழ்நாட்டில் அமலாகிறது சுலப முறை !!

அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவை ஈஸியாக வாட்ஸ் -அப் தளத்தில் எடுக்க , அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொழில் நுட்ப வளர்ச்சி

நாளுக்கு நாள் தொழில் நுட்பம் வளர்ச்சி அனைத்து துறைகளிலும் மேலோங்கி செல்கிறது. அந்த வகையில் , போக்குவரத்து துறைகளிலும் தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப  ஆன்லைன் பரிவர்த்தனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ய வாட்ஸ் - அப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயன்பாட்டில் உள்ளது. இதே போல் அரசு பேருந்துகளிலும் நடைமுறை படுத்தப்பட இருக்கிறது.

ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் வாழ்வின் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்ட சூழலில், இப்படியான டிஜிட்டல் வசதிகள் பயணத்தை மேலும் எளிமையாக்கும். TNSTC, SETC பேருந்துகள் மூலம் நாள்தோறும் 6,000 - க்கும் மேற்பட்ட பேருந்துகள் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

டிஜிட்டல் சேவை வசதிகள் விரிவாக்கம்

சாதாரண பேருந்துகள், டீலக்ஸ், ஏசி, ஸ்லீப்பர் எனப் பல்வேறு வசதிகளை கொண்ட பேருந்துகள் அடங்கும். ஒவ்வொரு நாளும் சராசரியாக 17,976 டிக்கெட்களும், மாதந்தோறும் 5.87 லட்சம் டிக்கெட்களும் முன்பதிவு செய்யப்படுகின்றன.

இதில் 85 சதவீத டிக்கெட்கள் ஆன்லைன் வாயிலாக, மொபைல் தளங்கள் வாயிலாக முன்பதிவு செய்கின்றனர். எஞ்சிய 15 சதவீதம் மட்டுமே டிக்கெட் கவுன்ட்டர்கள், நேரடி சேவை மையங்கள் மூலம் வாங்கப்படுகின்றன. எனவே டிஜிட்டல் வசதிகளை விரிவாக்கம் செய்வது பயனுள்ளதாக அமையும்.

போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ பக்கம்

தற்போதைய சூழலில் போக்குவரத்து கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், இ-சேவை மையங்கள், மொபைல் ஆப் , ஏபிஐ அடிப்படையிலான போர்டல்கள் உள்ளிட்டவற்றின் மூலம் பேருந்து டிக்கெட்களை முன்பதிவு செய்ய முடிகிறது.

இந்நிலையில் தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகங்கள் (TNSTCs), மாநில விரைவு போக்குவரத்து கழகம் (SETC), சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் (MTC) ஆகியவை கூட்டாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழக அரசின் போக்குவரத்து துறையின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மொபைலிட்டி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் கார்ப்பரேஷன் (TNMLC) டெண்டர் கோரியுள்ளது.

அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு எளிது

ஆன்லைன் டிக்கெட் ரிசர்வேஷன் சிஸ்டத்தையும், பல்வேறு Payment Gateway சர்வீஸ்களையும் ஒருங்கிணைக்க வேண்டும். இதன் மூலம் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு என்பது மிகவும் எளிதாகி விடுகிறது. கையில் ரொக்கமாக அளிக்க தேவையில்லை. விரைவான புக்கிங் செய்யலாம். நேரம் மிச்சம். ஆன்லைன் பிளாட் பார்ம்கள் மூலம் முன்பதிவு செய்வதன் மூலம் சில சலுகைகளும் கிடைக்கின்றன.

ஒட்டு மொத்தமாக பார்க்கையில் பயணிகளுக்கு பெரிதும் வரப் பிரசாதமாகவே இருக்கும் என்கின்றனர். வாட்ஸ்-அப் டிக்கெட் முன்பதிவு வசதி பயன்பாட்டிற்கு வந்து விட்டால் மொபைல் ஆப் எதுவும் install செய்ய தேவையில்லை. புதிதாக மொபைல் புரசவுருக்கோ அல்லது வேறு தளங்களுக்கோ போக வேண்டியதில்லை.

வாட்ஸ் அப்பில் டிக்கெட் முன்பதிவு

தினசரி பயன்பாட்டில் உள்ள வாட்ஸ் அப்பிலேயே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். கட்டணம் செலுத்துவதற்கு டெபிட், கிரெடிட் கார்டுகள், கியூ-ஆர் கோடு சேவைகள், வேலட்கள், கூகுள்பே, போன்பே, வாட்ஸ்-அப் பே போன்றவை பயன்படுத்த முடியும்.

வாட்ஸ்-அப் சேவை பயன்பாட்டிற்கு வந்தால் , ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் செய்யும் போது சிக்கல் ஏற்பட்டால் அதற்கு தீர்வு காணும் வகையில் 24 மணி நேரமும் உதவும் வகையில் உதவி மையங்கள் செயல்படும் என கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
Cyclone Ditwah Chennai: 2வது நாளாக தொடரும் மழை.. தத்தளிக்கும் சென்னை, மூழ்கிய சாலைகள் - முடிவில்லாத துயரம்..
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
விவசாயிகள் எதிர்பார்த்திருந்த அறிவிப்பு.! பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு- தமிழக அரசு
Chennai Heavy Rain: எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
எங்கு கரையை கடக்க போகிறது.? குறி வைத்த டிட்வா- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் சொன்ன முக்கிய அப்டேட்
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
புதுச்சேரியில் விஜய் ரோடு ஷோ: அனுமதி கிடைக்குமா? சிக்கலில் தவிக்கும் புஸ்ஸி ஆனந்த்!
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
IPL 2026 Auction: கம்பேக் மோடில் CSK, KKR? ஐபிஎல் மினி ஏலம், அணிகளிடம் உள்ள தொகை என்ன? ஏழை மும்பை
Cyclone Ditwah: இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
இந்த இடத்தில் தான் கரையை கடக்க போகுதா.!! சென்னைக்கு காத்திருக்கும் ரிஸ்க்- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்..   விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Crime: 21 வயதில் திருமணம் என சொன்ன பெற்றோர்.. விரக்தியில் இளைஞர் தற்கொலை!
Embed widget